தையும்,பார்த்தன் - அருச்சுனன், பொடிபடுத்தினன் - (தனது அம்புகளால்) பொடிபடச்செய்திட்டான்; (அதனால்), 'முனிமகன் - துரோணபுத்திரனான அசுவத்தாமன், கழிந்த நீர்க்கு அணை கோலி . கடந்துசென்ற நீர்ப்பெருக்கைத்தடுப்பதற்கு அணையிடமுயல்பவன் போன்று, வந்து எதிர்ந்து - (அருச்சுனனை)வந்து எதிர்த்து, தன் கார்முகம் கட்டு ஆண்மை அழிந்து போயினன் - தனதுவலியவிற் போர்த்திறமழிந்திட்டவனானான்' என - என்று, பெரு சேனை -பெருமையுள்ள (பாண்டவ) சேனை, எழுந்து ஆர்த்தது - உற்சாகங்கொண்டுஆரவாரித்தது; (எ - று.)
பெருகிச்சென்று தீர்ந்த வெள்ளத்துக்குப் பின்பு தடுத்து வைத்தற்பொருட்டு அணைகோலுதலிற் சிறிதும் பயனில்லாமை போல், மிகமேலிட்ட அருச்சுனனை அசுவத்தாமன் மீண்டும் எதிர்த்தல் சிறிதும் பயன்படாது முடிதலால், 'கழிந்தநீர்க்கு அணைகோலி' என்றார், "கழிந்தநீர்க் கணைகோலுவான் கண்ணெதிருறச் சென்றான்" என்றதும் காண்க. தன்கார்முகக்கட்டாண்மை யழிந்து போயினன் - வில்லைக்கொண்டு அம்புதொடுத்து எதிர்க்குந்திறமை நீங்கினா னென்க. முனைதல் - உக்கிரமாதல். (49) 50.-அசுவத்தாமன்வீசியஇருப்புலக்கையை அருச்சுனன் துணித்தல். செருப்புலக்கையாமுரலிடைவிருதராந்தினைக்குரல்களைச்சேர மருப்புலக்கைகொண்டிடிக்கும்வெஞ்சினமனமத்தவாரணமன்னான் பொருப்புலக்கையுற்றலமரவரிந்தவன்புதல்வன்மேலொருபாரம் இருப்புலக்கைகொண்டெறிந்தனனவனுமஃதெண்முறிபடவெய்தான். |
(இ -ள்.) செரு புலம் கை ஆம் - போர்க்களத்தின் அணிவகுப்பாகிய, உரலிடை - உரலிலே, விருதர் ஆம் - வீரர்களாகிய, தினைகுரல்களை - தினைக்கதிர்களை, சேர - ஒருசேர, மருப்பு உலக்கை கொண்டு - (தனது) தந்தங்களாய உலக்கைகளால், இடிக்கும் - இடிக்கிற, வெம்சினம் மனம் - கடுங்கோபமுள்ள மனத்தையுடைய, மத்தம் வாரணம் - மதம்பிடித்த யானையை, அன்னான் - ஒத்தவனான அசுவத்தாமன்,- பொருப்பு-மலைகள், உலக்கை உற்று - அழிதலையடைந்து, அலமர - வருந்தும்படி, அரிந்தவன் - (அவற்றைச்) சிறகறுத்தவனான இந்திரனது, புதல்வன்மேல் - குமாரனான அருச்சுனன்மேல், ஒரு பாரம் இரும்பு உலக்கைகொண்டு எறிந்தனன் - கனமான ஓர் இரும்புலக்கையை எடுத்துவீசினான்; அவனும் - அருச்சுனனும், அஃது எண்முறி பட - அவ்வுலக்கை எட்டுத்துண்டுபடும்படி, எய்தான் - அம்புதொடுத்தான்; (எ - று.)
புலம்- இடம். கை - படைவகுப்பு. குரல் - தானியம். முதலிரண்டடி உருவகத்தை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி: உரலில் தினையை உலக்கையால் இடிப்பதுபோலப் போர்க்களத்தில் வீரரைத்தந்தத்தாற் குத்தும் யானை யென்க. தனது தந்தையை எதிரிகள் கொன்றதனாலாகிய கோபத்தை அசுவத்தாமன் மனத்திலே மாறாமல் வைத்துக்கொண்டு அதற்குப்பிரதிசெய்யுங் கருத்துடையவனாதலால் |