4. தேவர்மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும், ஐம்பெரும் பூதங்களாலும் ஆயுதங்களாலும் தனக்குமரணமில்லாதபடி அளவற்ற வரங்களைப்பெற்றுத் தேவர்முதலியயாவர்க்குங் கொடுமையியற்றித் தன்னையேகடவுளாகவணங்கச்செய்தவனும் இரணியாக்கனது உடன்பிறந்தவனுமானஇரணியன், தன்புத்திரனும் மகாவிஷ்ணுபக்தனுமான பிரகலாதாழ்வான்தன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லிவரவே,அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் பகவானருளால்இறந்திலனாக, இரணியன் மகனைநோக்கி 'நீ சொல்லும் நாராயணனென்பான்எங்குஉளன்? காட்டாய்' என்ன, அப்பிள்ளை "சாணினுமுளனோர்தண்மையணுவினைச் சதகூறிட்ட, கோணினுமுளன் மாமேருக்குன்றினுமுளன்,இந்நின்ற, தூணினுமுளன் நீசொன்ன சொல்லினுமுளன், இத்தன்மைகாணுதிவிரைவின்" என்று சொல்ல, உடனே இரணியன் நன்றென்று சினந்து'இங்கு உளனோ?' என்றுசொல்லி எதிரிலிருந்ததொரு தூணைப்புடைக்க,அதனினின்றும் பகவான், அப்பொழுதே, மனிதரூபமுஞ் சிங்கவடிவமுங்கலந்தநரசிங்கமூர்த்தியாய்த் தோன்றித் திருக்கைந்நகங்களால் அவன் மார்பைப்பிளந்து அழித்திட்டனன்.
5. மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால் இந்திரன் முதலியயாவரையுஞ்சயித்து மூவுலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ளவடிவமான வாமனாவதாரமெடுத்துக் காசியபமுனிவனுக்கு அதிதி தேவியினிடந் தோன்றின பிராமணப் பிரமசாரியாகி,வேள்வியியற்றி யாவர்க்கும்வேண்டிய அனைத்தையுங் கொடுத்துவந்த அந்தப்பலியினிடஞ்சென்று, தவஞ்செய்தற்குத் தன் காலடியால் மூவடிமண் வேண்டிஅதுகொடுத்தற்கிசைந்து அவன்தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று, உடனேதிரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து ஓரடியால் மண்ணையும்ஓரடியால் விண்ணையும் அளந்து மற்றோ ரடியால் அவனையும்பாதாளத்திலழுத்தி அடக்கினன். 6. உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையால் கொழுத்துத் திரிந்துகொடுமையியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்யும் பொருட்டு நாராயணமூர்த்தி ஜமதக்நிமுனிவனது மனைவியான ரேணுகையினிடம் ராமனாய்த் திருவவதரித்து, பரசு என்னுங் கோடாலிப்படையையே ஆயுதமாகக்கொண்டு, தனது தந்தையின் ஓமதேனுவைக்கவர்ந்து அவனைக் கொன்றிட்டதுகாரணமாகக் கார்த்த வீரியார்ச்சுனனையும் அவனது குமாரர்களையுங் கொன்று அழித்து, அதனாலேயே க்ஷத்திரியவமிசம் முழுவதன் மேலுங் கோபா வேசங்கொண்டு, உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத் தொருதலைமுறை பொருது ஒழித்திட்டான். 7. ஒருகாலத்தில் தேவர்களெல்லாரும் இராவணன் முதலிய ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணு வைச்சரணமடைந்துவேண்ட அப்பிரான் தசரதசக்கரவர்த்தி |