பக்கம் எண் :

56பாரதம்சல்லிய பருவம்

     (இ -ள்.) ஆன போது - இவ்வாறாகிய அப்பொழுது, இரு
தளத்தினும் -இரண்டுபக்கத்துச் சேனைகளிலும், மிகுந்த விறல் ஆண்மை
வீரர் - மிக்கபலத்தையும் பராக்கிரமத்தையுமுடைய வீரர்கள், மெய் கவசம்
மானமே எனநினைத்து - தங்களுடம்பைக் கவசம்போலப் பாதுகாப்பது
மானமே யென்றுஎண்ணி, வரி பொன் சிலைஉம் - கட்டமைந்த அழகிய
வில்லும், வாளும்-,வேலும்-, முதல் - முதலிய, திறம் - வலிமையுடைய, எ
விதம் படையும் -எல்லாவகைப்பட்ட ஆயுதங்களும், மேனி யூடுஉருவ -
(எதிரியின்) உடம்பில்ஊறு படுத்தும்படி, ஒருவர்க்கு ஒருவர்-, வெட்டிய -
தாக்கிப் போர்செய்த,நிலைக்கு - நிலைமைக்கு, வேறு உவமை கூற -
வேறுஒப்புமை சொல்ல, இலது- வகை இல்லை:  தான வானவர்கள் -
அசுரர்களும் தேவர்களும், எப்படிமலைத்தனர்கள் - தம்மில்மாறுபாடு
கொண்டு எப்படிப்பொருதார்களோ,(அப்படியே பொருதார்கள்: அப்போது
நடந்த), உயுத்தமும் - போரும்,அரக்கரொடு - இராக்கதர்களுடனே, மாசாகை
மிருகம் - சிறந்தகுரங்குப்படைக்கு நேர்ந்த, யுத்தமும்-போரும், நிகர்த்தன -
(இப்போருக்கு)ஒப்பாயின; (எ - று.)

    அப்பொழுது கௌரவபாண்டவசேனைகள் எதிர்த்துச்செய்த போர்க்குத்
தேவாசுரயுத்தமும் ராமராவணயுத்தமுமே ஒப்பாகு மென்பதாம்.  மானம் -
மனவுயர்வு.  இதனையே பிரதானமாகக்கொண்டு என்பது, 'மெய்க்கவசம்
மானமேயென நினைத்து' என்பதன்கருத்து.  இருகளத்தினும்என்ற பாடம்,
இருதிறத்துப் போர்முனையிலும் என்றுபொருள்படும்.  'தானவ வானவர்'
என்பது, தானவானவரெனத் தொக்கது.  மரக்கிளைகளிற் சஞ்சரிக்கும்
விலங்காதலால், சாகாமிருகமென்று குரங்குக்குப் பெயர்; சாகா - கிளை.
தேவாசுரயுத்தம், பாற்கடல்கடைந்து அமிருதமெடுத்த காலத்தும் மற்றும் பல
சமயங்களிலும் நிகழ்ந்தது.  இராவணனாற் சிறைகொள்ளப்பட்ட சீதையை
மீட்டற்பொருட்டு ராமன் சுக்கிரீவனோடு நட்புக்கொண்டு அவனது
எழுபதுவெள்ளம் சேனைகளுடனே சென்று பொருது அரக்கரை அழித்தமை
பிரசித்தம்.                                                (68)

69.-தருமன் யாவரையும்விலக்கிச் சல்லியனைத் தான்
எதிர்த்தல்.

வீமசேனனொடருச்சுனன்வயப்புரவி வீரமாநகுலனட்பின
                                 வனுக்கிளைய,
தாமமீளியளிமொய்த்ததுளவப்புதிய தாரினானநுசன்விற்குருவை
                                  முற்பொருத,
சோமகேசபதிமெய்ப்புதல்வன்மற்றுமுள சூரரானவரைமுற்றுற
                                விலக்கியெதிர்,
மாமனாகியுமிகைத்துவருமத்திரனைவாவெனாவமர்
                         தொடக்கினனு திட்டிரனே.

     (இ -ள்.) வீமசேனனொடு - வீமசேனனும், அருச்சுனன் -
அருச்சுனனும், வய புரவி - வலிய குதிரைத்தொழிலில் வல்ல, வீர மா
நகுலன்- வீரத்தன்மையையுடைய சிறந்தநகுலனும், அவனுக்கு இளைய -
அந்நகுலனுக்குத்தம்பியான, நட்பின் - சிநேக தருமத்தையுடைய, தாமம்
மீளி -போர்மாலையையுடைய பலசாலியான சகதேவனும், அளிமொய்த்த -
வண்டுகள்மொய்க்கப்பெற்ற, துளவம் -