யும் -காந்தாரதேசத்தார்க்கு அரசனானசகுனியும், தன்கனிட்டன் ஆன வேந்தனும் - அவனுக்குத் தம்பியான அரசனும், மன்னவனுடன் - துரியோதனராசனோடும், பல்வேந்தரோடும் - மற்றும் பல அரசர்களுடனும், வெம்பனை கை பல கோடி வேழத்தோடும் - கொடிய பனைமரம்போன்ற துதிக்கையையுடைய அநேககோடி யானைகளுடனும் கூடி, ஏந்து தட புயம் சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து - உயர்ந்தபெரிய மலைகள்போலுந் தோள்களையுடைய வீமசேனனோடு போர்செய்து, தொலைந்து இரிந்தார் - தோற்றுஓடினார்கள்; இவரை அல்லால் - இவர்களையன்றி மணி ஊர்ந்த பணிகொடியோன் இளைஞர்ஒன்பதின்மர் - மணியையுடைய ஊர்ந்துசெல்லும் பாம்பின் வடிவை யெழுதிய அழகிய கொடியையுடைய துரியோதனனது தம்பிமார் ஒன்பதுபேர், மீள - மறுபடி, வந்து அவனுடன் உடற்றினார் - வந்துஅவ்வீமனோடு போர் செய்தார்கள்; (எ - று.)
துதிக்கைக்குப் பனைமரம் உவமை, திரண்டுஉருண்டு, நீண்ட கரிய பெரியவடிவிற்கு. புயச்சிகரி யென உருவகம்போலக் கூறினும், சிகரிப்புயம் எனஉவமையாக்கி யுரைத்தலே தகுதி, தொடர்ச்சிதோன்றக் கூறாமையின், சிகரீ -சிகரமுடையது எனப் பொருள். ஒன்பதின்மர் பெயர், அடுத்தகவியில் விளங்கும். 'பணியணிக்கொடியோன்' என்றும் பாடம். (83) 84.-துரியோதனன் தம்பியர்ஒன்பதின்மரை வீமன் கொல்லுதல். பிறங்கியவுத்தமனுதயபானுகீர்த்திபெலவன்மன் பெலவீமன் பிரபலதானன், மறங்கிளர் விக்கிரமவாகுசுசீலன்சீலன் வருபெயர் கொளொன்பதின்மர்வானிலேறத், திறங்கொள் கசரததுரகபதாதி கோடிசேரவொருகணத்தவியச் சிலைகால்வாங்கிக், கறங்கெனவே சூழ்வந்துபொருதான் வீமன் கட்டாண்மைக்கிது பொருளோகருதுங்காலே. |
(இ -ள்.) பிறங்கிய -விளங்குகிற, உத்தமன் -, உதயபானு -, கீர்த்தி-, பெலவன்மன் - பலவர்மா, பெலவீமன் - பலபீமன், பிரபலதானன் - ப்ரபலதாநன், மறம் கிளர் - பராக்கிரமம்மிக்க, விக்கிரமவாகு - விக்கிரமபாகு, சுசீலன் - ஸு சீலன், சீலன்-, வரு - என்று சொல்லப்பட்டு வருகிற, பெயர் - பெயரை, கொள்-கொண்ட, ஒன்பதின்மர் - ஒன்பதுபேர், வானில் ஏற - வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படியாகவும், திறம் கொள் - வலிமைகொண்ட, கசரததுரக பதாதி - யானை தேர் குதிரை காலாட்கள், கோடி - கோடிக்கணக்கானவை, சேர-ஒருசேர, ஒரு கணத்து அவிய - ஒருக்ஷணப்பொழுதிலே அழியும்படியாகவும், வீமன் -, சிலை கால் வாங்கி - வில்லை வளைத்து, கறங்கு என சூழ் வந்து - காற்றாடி போலச் சுழன்றுவந்து, பொருதான் - போர் செய்தான்; கருதுங்கால் - ஆலோசிக்குமிடத்து, கட்டு ஆண்மைக்கு - (வீமனது) உறுதியான போர்த்திறமைக்கு, இது பொருளோ - இங்ஙன் பொருதது ஒருபொருளாவதோ? (எ - று.) வீமனதுஅதிபலபராக்கிரமத்துக்கு இவை ஒருபொருளாகாஎன்றதைப் பொதுப்பொருளாகவும்மற்றதைச்சிறப்புப் பொருளாக |