பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்69

வும்நிறுத்திக் கூறினதனால், வேற்றுப்பொருள்வைப்பணி.  கஜரததுரகபதாதி-
பன்மை விகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை.  சிலைகால்வாங்குதல் -
வில்லைக்கோடிகள் வளையச்செய்தல். இனி, கால் - உபசர்க்கமுமாம்.  கறங்கு
- சுழல்வது.                                                (84)

85.-எஞ்சிநின்றதுரியோதனன்தம்பியரும் வீமனால் இறத்தல்.

பாண்டவரில் வீமன்கைப்படையான்முன்னம் பட்டொழிந்தோ
                         ரொழிந்தோர்கள்பலருங்கூடிக்,
காண்டகைய கேசரிவெஞ்சாபமன்னார் கண்ணிலான்மதலையரக்
                                      களத்திலன்று,
மூண்டுபெரும்பணித்துவச முன்னோன்காண முனைந்தமர்
                    செய்தவனியின் மேன்முடிகள் வீழத்,
தீண்டரியதிருமேனி தேரில்வீழச்சேணடைந்தாரரம்பையர்கள்
                                         சிந்தைவீழ.

     (இ -ள்.) பாண்டவரில் - பாண்டவர்களுள், வீமன் - வீமசேனனது,
கை- கையினாற் பிரயோகிக்கப்பட்ட, படையால் - ஆயுதத்தால், முன்னம்
பட்டுஒழிந்தோர் - முன்புஇறந்தொழிந்தவர்கள், ஒழிந்தோர்கள் -
நீங்கலாகவுள்ளவர்களான, காண்தகைய வெம் கேசரிசாபம் அன்னார் -
காணுதற்குத் தகுதியுள்ள உக்கிரத்தன்மையுள்ள சிங்கக்குட்டிகளைப்
போன்றவர்களான, கண்இலான் மதலையர் பலரும் . பிறவிக்குருடனான
திருதராட்டிரனது புத்திரர்கள் [துரியோதனன் தம்பிமார்] பலபேரும், கூடி-
ஒருங்குசேர்ந்து, அ களத்தில் - அந்தப் போர்க்களத்தில், அன்று -
அப்பொழுது, மூண்டு பெரும் பணி துவசம் முன்னோன் காண -
உக்கிரங்கொண்டு பெரிய பாம்புக்கொடியையுடைய தங்கள் தமையனான
துரியோதனன் பார்க்க, முனைந்து அமர் செய்து - (வீமனோடு) முயன்று
போர்செய்து, அவனியின்மேல் முடிகள் வீழ - தரையில் தங்கள் தலைகள்
விழவும்,தீண்டரிய திருமேனி தேரில் வீழ - தொடுதற்கும் அருமையான
[மிக்கவலிமையுள்ள] அழகிய தங்கள் உடம்பு தேர்களில் விழவும்,
அரம்பையர்கள் சிந்தைவீழ - தேவமாதர்களது மனம் தங்களை விரும்பவும்,
சேண் அடைந்தார் - வீரசுவர்க்கஞ்சேர்ந்தார்கள்; (எ - று.)

    போரிலிறந்து வீரசுவர்க்கஞ்சேர்பவரைத் தேவமாதர்மணத்தல்
இயல்பாதலின், 'சேணடைந்தார் அரம்பையர்கள்சிந்தைவீழ' என்றார். வீழ்தல்
என்பது - விரும்புதலென்னும் பொருளதாதலை "தாம்வீழ்வார்
மென்றோட்டுயிலின்" என்ற திருக்குறளிலுங் காண்க.  இனி, சிந்தை வீழ -
மனம்தம்மிடத்துப் பதிந்தழுந்த என்னலுமாம்.  காண்டரிய என்றும் பாடம்.
தீண்டு-முதனிலைத் தொழிற்பெயர்.  சாபம் என்று குட்டிக்குப்பெயர்;  இது -
இளமைப்பெயராவதொருவடசொல் என்று அறியாது, வெம்சாபம் கேசரி
அன்னார் என மொழிமாற்றி, கொடிய வில்லையுடைய சிங்கம் போன்றவர்கள்
என்று நலிந்து பொருள் கொண்டு இடர்ப்படுவாருமுளர்.  சேண் - வானம்:
சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர்.                              (85)