பக்கம் எண் :

86பாரதம்சல்லிய பருவம்

யோன் -முரசக்கொடியையுடைய தருமன், கொண்டான் - (வென்று)
கைக்கொண்டான், என - என்று, கோபம் மிஞ்சி விண்டார் - கோபம் மிக்கு
(ஒருவரோடொருவர்) வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு, அவர் வீரம் -
அந்தப்பாண்டவர்களது பராக்கிரமத்தை, மிகவும் வியந்தார் - மிகவும்
அதிசயித்துக் கொண்டாடினார்கள்; (எ - று.)- அம்மா - ஈற்றசை, பகைவருங்
கொண்டாடும்படியான பாண்டவர்களது பராக்கிரமத்தை விளக்கும்
வியப்பிடைச்சொல்லுமாம்.

     பலவீரர்களும் நிறைந்திருக்கும் விசாலமான யுத்தகளத்துக்கு,
நஷத்திரக்கூட்டம் நிறைந்த ஆகாயம் உவமை, சமரபூமிகொண்டான் -
போர்க்களத்தில் வெற்றிகொண்டானென்றபடி.                 (108)

109.- எங்குந்துரியோதனனைக் காணாமல் அவர்கள்
பொலிவிழத்தல்.

பூணாரமார்பின்வலத்தேபுரிபூந்தண்மாலைக்
கோணார்சிலைக்கைந்நெடுநாகக்கொடிகொள்வேந்தைக்
காணார்களத்திலொருபாலுங்கருகியுள்ளம்
வாணாடருக்கன்குடிபோமகல்வானொடொத்தார்.

     (இ -ள்.) ஆரம் பூண் - இரத்தினமாலைகளைத் தரித்த, மார்பின் -
மார்பினிடத்து, வலத்தே புரி பூ தண் மாலை - நஞ்சாவட்டை மலர்களாலாகிய
குளிர்ந்த மாலையையுடையவனும், கோண் ஆர் சிலை கை - வளைவு மிக்க
வில்லை யேந்திய கையையுடையவனுமாகிய, நெடு நாகம் கொடி கொள்
வேந்தை - நீண்ட சர்ப்பக்கொடியைக் கொண்ட துரியோதனராசனை,
களத்தில்ஒருபாலும் காணார்- போர்க்களத்தில் ஒருபக்கத்திலும்
காணாதவர்களாய்,உள்ளம் கருகி-மனந்தவித்து, வாள் நாடு அருக்கன்
குடிபோம் அகல்வானொடு ஒத்தார் - ஒளிபொருந்திய சூரியன் தங்காது
நீங்கப்பெற்ற பரந்தஆகாயத்தோடு சமமானார்கள் [பொலிவிழந்தன
ரென்றபடி]; (எ - று.)

    வலத்தேபுரிபூ = வலப்பக்கமான இதழ்முறுக்குள்ள மலரென்க.
உவமையணி.                                           (109) 

110.- அசுவத்தாமன்சஞ்சயனைக் கண்டு விசாரித்தல்.

தனிவந்து தோன்றுதலுஞ் சஞ்சயனென்னும் வேதம்
முனிவன்றனைக்கண்டிருதாளின்முடிகள் சேர்த்தி
அனிகங்கெழும் போரரசன்றனையங்கை நெல்லிக்
கனிகண்டனையாயெவட்காண்குதுங்காட்டு கென்றார்.

     (இ -ள்.) சஞ்சயன் என்னும் வேதம் முனிவன் - சஞ்சயனென்னும்
பெயரையுடைய வேதப்பொருள்வல்ல முனிவன் - தனி வந்து தோன்றுதலும்-
தனியேவந்து எதிர்ப்பட்டவளவிலே, தனை கண்டு - அவனைப்பார்த்து,
(அசுவத்தாமன் முதலியோர்), இரு தாளில் முடிகள் சேர்த்தி -(அவனுடைய)
இரண்டு பாதங்களிலும் தங்கள் தலைகளைவைத்து வணங்கி, (அவனை
நோக்கி),- 'அம் கை நெல்லிகனி கண்டனையாய் - உள்ளங்கையிலுள்ள
நெல்லிப்பழத்தைக்காணுதல்போல (எல்லாப்பொருளையுங்) கண்டறிந்தவனே!
அனிகம் கெழும்