பலத்தால்)மறுபடியும் உயிர்பெறுவார்கள்; அந்த வஞ்சகம் மறை - அந்த ரகசியமானமந்திரத்தை, முன்பெற்றான் - முன்பு பெற்றுள்ளானான, வலம்புரி தாரினானும் - நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனும், நெஞ்சு அமர் வலிமையோடு - மனத்திற் பொருந்திய உறுதியுடனே, நீரிடைமூழ்கி - நீரினுள்ளே முழுகி (மறைந்துநின்று அதனை ஜபித்து இறந்தவர்களைப் பிழைப்பித்து), நீங்கள் துஞ்சிட இன்னம் பொருவான் - நீங்கள் இறக்கும்படி இன்னமும் போர்செய்தற்கு, சூழ்ந்தனன் போலும் - ஆலோசித்தான் போலும்,என்றான் - என்று சொன்னான், (கண்ணன்); (எ - று.) போலும் என்றது - ஒப்பில்போலியாய், ஊகித்தற்பொருளில் நின்றது. நெஞ்சமர்வலிமை - மநோதைரியம். நீர் என்ற முன்னிலைப்பன்மைப்பெயர், நீம் எனத் திரிந்து, 'கள்' என்னும் விகுதியோடு சேர்ந்து, நீங்கள் என்று வழங்கும். இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு: மீள எழுந்திராத பெருந்தூக்கமென்க. வஞ்சகமென்றதற்கு - இங்கே சந்தருப்பத்திற்கு ஏற்ப, இரகசியமெனப்பொருள்கொள்ளப்பட்டது; இனி, (பகைவரை) வஞ்சித்தற்குரிய எனினும் அமையும். (129) 130.-வீமன்அக்குளத்தையடைந்து சிலகூறத்தொடங்கல். மாயவனுரைத்தமாற்றமாருதிகேட்டுத்தந்தை ஆயவன்றன்னைப்போலவப்பெரும்பொய்கையெய்தித் தூயதண்டுளவினானுந்துணைவருஞ்சூழ்ந்துநிற்பத் தீயெனத்தீயநெஞ்சன்செவிசுடச்சிலசொற்சொல்வான். |
(இ -ள்.) மாயவன் உரைத்த மாற்றம் கேட்டு - மாயையில்வல்ல கண்ணபிரான் சொன்ன அவ்வார்த்தையைக்கேட்டு, மாருதி - வாயு குமாரனானவீமன், தந்தை ஆயவன் தன்னை போல - தனதுபிதாவான வாயுபகவானைப்போல [வெகுவிரைவாக], அ பெரு பொய்கை எய்தி - அந்தப் பெரியதடாகத்தையடைந்து,- தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப-பரிசுத்தமான குளிர்ந்த திருத்துழாயையுடைய கண்ணனும் தன்னுடன் பிறந்தவர்நால்வரும் (அக்குளத்தைச்) சூழ்ந்துநிற்க, தீ எனதீயநெஞ்சன் செவி சுட சிலசொல் சொல்வான் - நெருப்புப்போலக் கொடியமனமுடையவனானஅத்துரியோதனனது காதுகள் வருந்தும்படி சிலவார்த்தைகளைக்கூறுபவனானான்; (எ - று.)- அவற்றை, அடுத்த ஏழுகவிகளிற் காண்க. (130) வேறு. 131.-ஏழுகவிகள் -துரியோதனனைக்குறித்து வீமன் கூறும் வார்த்தை. கங்கைமகன் முதலாகக் காந்தாரன் முடிவாகக் களத்தில் வீழ்ந்த, துங்கமணி முடிவேந்தர் சொல்லிமுடிப் பதற்கடங்கார் துரக மாவும், செங்கனகமணிக்கொடிஞ்சித் திண்டேரும் பெரும் பனைக்கைச் |
|