பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்99

                                    சிறுத்தசெங்கண்,
வெங்கயமு மேறாமல் வீழ்கயத்தி லேறினையோவேந்தர்
                                          வேந்தே.

     (இ -ள்.) வேந்தர் வேந்தே - இராசராசனே!  கங்கை மகன்முதல்
ஆக-வீடுமன்முதலாக, காந்தாரன் முடிவு ஆக-காந்தாரதேசத்தரசனாகிய
சகுனிஈறாக, களத்தில் வீழ்ந்த - போர்க்களத்தில் அழிந்துவிழுந்த, துங்கம்
மணி முடிவேந்தர் - சிறந்த இரத்தின கிரீடத்தையுடைய அரசர்கள், சொல்லி
முடிப்பதற்குஅடங்கார் - (இன்னாரின்னாரென்றும் இத்தனைபேரென்றும்)
விவரஞ்சொல்லிமுடித்தற்கு அடங்கார்கள் [எண்ணிறந்தவர்களென்றபடி:]
(அவர்கள் அங்ஙனமாக, நீ) துரகம் மாவும் - குதிரையின்மேலும், செம்கனகம்
மணி கொடிஞ்சி திண் தேரும் - செம்பொன்னினாற் செய்யப்பட்டு
இரத்தினங்கள் பதித்த கொடிஞ்சியென்னும் உறுப்பையுடைய
வலியதேரின்மேலும், பெரு பனை கை சிறுத்த செம் கண் வெம் கயமும் -
பெரிய பனைமரம்போன்ற துதிக்கையையும் சிறிய சிவந்த
கண்களையுமுடையவெவ்விய யானையின் மேலும், ஏறாமல் -
ஏறுவதையொழித்து, வீழ் கயத்தில்ஏறினையோ - வீழ்தற்குரிய தடாகத்திற்
பாய்ந்திட்டாயோ? (எ - று.)

     கயம்என்ற சொல் - யானையென்றுங் குளமென்றும், ஏறுதல் என்ற
சொல் மேலேறுதலென்றும் உட்செல்லுதலென்றும் பொருள்படுதலால், அச்
சொற்களில் சமத்காரங்கற்பித்து, 'வெங்கயமுமேறாமல்
வீழ்கயத்திலேறினையோ'என்றானென்க.  இதில் மடக்கு என்னுஞ்
சொல்லணியமைந்திருத்தல் காண்க. துரகமா - குதிரையாகிய விலங்கு. 
பெரும்பனைக்கைச் சிறுத்தசெங்கண் -முரண் தொடை.

    கங்கைமகனென்ற விவரம்:- முன் ஒருகாலத்தில் தேவர்கள்
யாவருங்கூடிய பிரமதேவனது சபையிற்சென்று கங்காநதியின் பெண்தெய்வம்
வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை உற்றுநோக்கிக்
காதல்கொண்டான்; கங்கையும், அவன் மீது காதல்கொண்டு
எதிர்நோக்கினாள்;அதனையறிந்த நான்முகக்கடவுள், வருணனைப்பூமியில்
மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய் அவனைச்சிலநாள்
மணந்திருக்கவுஞ் சபித்திட்டான்; அங்ஙனமே வருணன் குருகுலத்திற்
சந்தனுவாய்ப் பிறந்தான்; கங்கையும் ஓர் மனிதமகளாகி 'யான் எந்தத்
தீச்செயல்செயினும் மறுக்கலாகாது' என்னும்ஏற்பாட்டினோடு அவனை
மணஞ்செய்து கொண்டாள்.  இது நிற்க; பிரபாசனென்னும் வசு தன்
மனைவியின் சொல்லைக் கேட்டு  வசிட்டனிடமுள்ள காமதேனுவைக்
கொள்ளை கொள்ள எண்ணினான்; மற்றையேழு வசுக்களும் அவனுக்கு
உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக்கவர்ந்தனர்;  அதனையறிந்தவசிஷ்டமகாமுனிவன், அஷ்ட வசுக்களையும்
மானுடசன்மமெடுக்கவும்,அவர்களுள் மனைவிசொற்கேட்ட பிரதானனான
பிரபாசனைப் பூமியிற்பலநாள்வாழ்ந்து பெண்ணின்பமற்றிருக்கவும்சாபங்
கொடுத்தான்;எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற்
பிறந்தனர்.  முதலிற்பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் பிறந்த அப்