(இ-ள்.) அன்னம் மெல் நடை - அன்னப்பறவையின் நடை போன்ற மெல்லியநடையையுடையபிரதை,- மெய்குலைந்து அலமர - உடம்பு நடுங்கிக் குலைய,- நாணினாள் - நாணங்கொண்டு, இதயம் உம்வேறு ஆகி-,- அஞ்சினள் - அச்சங்கொண்டவளாய், 'கன்னி கன்னி - (நான்) கன்னிகையாவேன் கன்னிகையாவேன்: என் கை தொடேல் - என்கையைத் தீண்டாதே: மடந்தையர் கற்பு - மடந்தைமாரின் கற்பை, நீ-, அறிகிற்றி- அறிவாயன்றோ!' என்ன - என்று, அரற்றலும் - கதறவும்,- (சூரியன்), அருகு உறான் - (அவளுடைய) சமீபத்தை யடையாதவனாய்,- விட போய் நின்று - சற்ற விலகிப் போயிருந்து, (அந்தப்பிரதையைநோக்கி),- 'உன்னி- நினைத்து, என்னை-, நீ-, அழைத்தது-, என் பெற - என்னபயனைப் பெறும் பொருட்டு?' என - என்று, உருத்தனன் - கோபித்தவனாய்,- உரை செய்வான்- (பின்னுஞ்) சொல்பவனானான்; (எ-று.) (188) 34.-இரண்டுகவிகள் - சூரியன் பின்னுங்கூறியன தெரிவிக்கும். உருக்கொள்சாயையுமுழையுமங்கறிவுறா தொளித்துநான்வரவேநீ வெருக்கொளாவெனைமறுத்தனையுனக்குமுன் மெய்ம்மறையுரைசெய்த குருக்களென்படாரென்படாதரிவைநின் குலமெனக்கொடித்திண்டேர் அருக்கன்மெய்யினுமன மிகக்கொதித்தன னாயிரமடங்காக. |
(இ-ள்.) 'உரு கொள் சாயைஉம் - உருவத்தைக்கொண்ட சாயா தேவியும், உழை உம் - உஷாதேவியும், அங்கு - வானில், அறிவுறாது - அறியாதபடி, ஒளித்த-, நான்-, வரஏ - வந்திருக்கவும்-, நீ-, வெருக்கொளா - அஞ்சி, எனை - என்னை, மறுத்தனை - (உடன்சேரவொட்டாமல்) மறுத்திட்டாய்: உனக்கு- (இப்படிப்பட்ட) உனக்கு, முன் - முன்பு, மெய் மறை - தவறாமற்பலிக்குந்தன்மையுள்ள வேதமந்திரத்தை, உரைசெய்த - சொல்லிய, குருக்கள் - குருமார், என்படார் - என்னபாடு படமாட்டார்? [நீ இப்போது மறுத்ததன் பயனாக உனக்கு உபதேசித்த குருமாரைச் சபித்திடுவேன் என்றபடி]: அரிவை - பெண்ணே! நின் குலம் - நீ பிறந்தகுலம், என்படாது - என்ன தீங்கை யடைந்திடாது [என் சாபத்தினால் நின்குலமே யழிந்திடும் என்றபடி] ', என - என்று, கொடி திண்தேர் அருக்கன் - கொடி கட்டிய வலிய தேரையுடைய சூரியன், மெய்யின்உம் - தன்னுடம்பைவிட, ஆயிரம் மடங்கு ஆக-, மிக - மிகவும், மனம் கொதித்தனன்-; (எ-று.) உழை சாயையென்பவர் சூரியனுடைய மனைவிமாராவர். சாயை யென்பது - நிழலென்னும்பொருளையு முடைய தாதலால், அதனினும் வேறுபாடு தோன்ற, 'உருக்கொள் சாயை' என்றது. "கரோமியாவத்தவ மந்த்ரதாயிநம் - மதீய சாபோரகவேஷ்டிதம்முநிம்" என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப, 'மறையுரை செய்தகுருக்களென்படார்' என்பதற்குச் சாபத்தினாலழிவ ரென்று உரைக்கப்பட்டது. (189) 35. | உனையளித்தவன்முனியுமென்றஞ்சனீ யுடன்படுமுணர்வானல் வினையளித்ததென்றணைதியேலின்பமும் விழைவுறும்படிதுய்த்தி எனையளித்ததொல்லதிதியினுனக்கிசை யெய்துமாறிகன்மைந்த[ன் தனையளித்திமற்றென்னினுமிருநிலந் தாடொழத்தக்கோனே. |
|