என்பால் நிகழ்ந்த வினையால் - என்னிடம் தோன்றிய தீவினையால், இடர் (மகப்பெறாமையாகிய) துன்பத்தை, எய்திநின்றேன்- அடைந்துள்ளேன்; நின்பால் அருள் உண்டுஎனின் - உன்னிடம் கருணையுண்டாகுமானால், உய்வன் - (நான்) ஈடேறுவேன்; (எ - று.) என்பால் நிகழ்ந்தவினை என்றது - கிந்தம முனிவரின் சாபத்தை. நான் சாபவசத்தினனாதலால், என் அனுமதியினால், முனிவர் மூலமாகவோ தேவர்மூலமாகவோ நீ சந்ததியை யுண்டாக்கிக்கொள்க என்றவாறு. (216) 62. | இல்வாழ்பவர்க்குமடவாரல தியாவரின்ப நல்வாழ்வுதேசுபுகழ்யாவு நடத்துகிற்பார் தொல்வானவரின்மறையோரிற் றுறக்கபூமி செல்வார்பெறும்பேறினிநீயருள் செய்தியென்றான். |
(இ-ள்.)இல் வாழ்பவர்க்கு - கிருகஸ்தராயிருப்பவர்க்கு, மடவார் அலது - (அவர்களுடைய) மனைவிமாரேயல்லாமல், இன்பம் - இன்பமும், நல் வாழ்வு - நல்லவாழ்க்கையும், தேசு - ஒளியும், புகழ் - புகழும், யாஉம் - (ஆகிய) எல்லாவற்றையும், நடத்துகிற்பார் - உண்டாக்கக்கூடியவர், யாவர் - வேறுயாவர்? இனி-, நீ-, தொல்வானவரின் - பழமையான தேவர்களாலோ, (அல்லது), மறை யோரின்-வேதம்வல்லோரான அந்தணராலோ,துறக்கம் பூமி செல்வார் பெறும் பேறு அருள்செய்தி - சுவர்க்கலோகத்தையடைபவர் பெறுகின்ற பேற்றை (நான்) அடையும்படி செய்வாய், என்றான்-; (எ -று.) தேவர்மூலமாகவோ வேதியர்மூலமாகவோ நீ மகப்பெறின், அதனால் யான் தீக்கதிசேராது நற்கதிசேரவே னாதலால், அவ்வாறு நிகழ்த்த மனம்புரியவேண்டுமென்று பாண்டுவேண்டியவாறு. (217) 63.- குந்தி மறுத்துக் கூறுதல். பொற்பாவைகேள்வன்மொழிகேட்டதும் பொன்றநாணிச் சொற்பாலவல்லாப்பழிகூருரை சொல்வதென்னே வெற்பார்நதிகள்சிறுபுன்குழி மேவினன்றோ இற்பாலவர்க்குப்பிறர்மேன்மன மேற்பதென்றாள். |
(இ - ள்.) பொன் பாவை - பொன்னாலியன்ற பிரதிமைபோல்பவளான குந்தி,- கேள்வன் மொழி- (தன்) கணவனுடையசொல்லை, கேட்டலும்,- கேட்டவுடனே, பொன்ற நாணி - உயிரழிந்தான்போன்று நாணங்கொண்டு, 'சொல் பால அல்லா - சொல்லுதற்கு ஏற்றன வல்லாத, பழி கூர் உரை - பழி மிக்க வார்த்தையை, சொல்வது - (நீ) சொல்லுகின்ற இது, எனே்ன - என்னோ? வெற்புஆர் நதிகள் - மலியிற்றோன்றுதல் பொருந்திய ஆறுகள், சிறு புன்குழி - மிகச் சிறியகுட்டையில், மேவின் அன்றோ - பாய்ந்துநின்றாலன்றோ, இல் பாலவர்க்கு - வீட்டிலிருந்து தொழில்பார்ப்பவரான மனைவிமார்க்கு, பிறர்மேல் - (தன்கணவர் தவிர) மற்றையோர்மேல், மனம்-ஏற்பது - சென்றிருப்பதாம், ' என்றாள்- என்று கூறினாள்; (எ-று.) நதிக்குக் கடலிற்புகுதலே பெரும்பாலும் இயற்கையாதல் காண்க. (218) |