பக்கம் எண் :

130பாரதம்ஆதி பருவம்

முதல் - முதலிய, விலங்கொடு - மிருகங்களுடனே, ஓடி- (தொடர்ந்து) விரைந்து
சென்று, வேதியர் முன்றில் தோறுஉம் - பிராமணருடைய வீட்டின்
முன்னிடங்கடோறும், விழை - (கண்டவர்) விரும்புகின்ற, விளையாடல் -
விளையாடலை(ச்செய்தற்கு), உற்றார் - (அக்குமாரர்)  தொடங்கினார்கள்;(எ-று.)

     குழந்தைகள் நடக்கும் பருவத்திற்கு முன்னே வளர்ந்தமையை
முன்னிரண்டடிகள் தெரிவிக்கும், நடக்கும்பருவத்தில்தானே அக்குழந்தைகள
மிக்கவீரமும் சுறுசுறுப்பும் பெற்றிருந்தமையைப் பின்னிரண்டடிகள் தெரிவிக்கும்:
மருங்கு-இடை, இடுப்பு; "எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்" என்றதும்
காண்க. இனி, மருங்கு - சமீபம் எனினுமாம்.                      (243)

89.-அக்குமாரர்கள் பூணூல்பூண்டு விச்சைபயின்று
யௌவனபருவத்தை யடைதல்.

செய்தவமுனிவர்தம்மாற் சிகையுடன்புரிநூல்சாத்திக்
கைதவமின்றியெண்ணெண் கலைக்கடற்கரையுங்கண்டு
மெய்தவம்விளங்கவேழ வில்லியும் விழைந்துநோக்க
மைதவழ்சிகரியன்ன வளர்ச்சியின்வனப்பின்மிக்கார்.

     (இ-ள்.) செய் தவம் முனிவர் தம்மால் - செய்த தவத்தையுடைய
முனிவரால், சிகையுடன் - குடுமிவைக்குஞ் சடங்குடனே, புரிநூல் சாத்தி -
வெண்புரிநூலும் அணிவிக்கப்பெற்று, (அக்குமாரர்கள்), கைதவம் இன்றி
வஞ்சனையில்லாமல், எண் எண்கலை கடல் கரைஉம் - அறுபத்துநான்கு
கலைகளாகிய கடலின் கரைகளையும், கண்டு-, மெய்தவம் விளங்க -
உண்மையான தவம் விளங்க, வேழம் வில்லிஉம் விழைந்து நோக்க -
கரும்பைவில்லாகவுடைய மன்மதனும் விரும்பிப்பார்க்க,- மை தவழ் சிகரி அன்ன
வளர்ச்சியின் - மேகந் தவழ்கின்ற மலையையொத்த வளர்ச்சியோடு, வனப்பின்
மிக்கார் - அழகில் மிக்கவரானார்கள்; (எ -று.)

     முற்பிறவியிற்செய்த நல்வினையினாலேயே இப்பிறவியில் கல்வி முதலியன
கைகூடு மாதலால் 'கலைக்கடற்கரையுங்கண்டு மெய்தவம் விளங்க' என்றது.
செய்யுணோக்கி, 'மெய்தவம்' என்றது இயல்பாயிற்று. மலைபோன்ற பெருந்தோற்ற
முடையவராய் வளர்ந்து யௌவனப்பருவம் வந்ததனால் அழகினால்
மிக்கவரானார், அந்தப் பாண்டு புத்திரர்க ளென்க. "க்ரமேணதேஷாம்-
ப்ரஸாதயாமாஸவ பூம்ஷி யௌவநம்" என்றது, பாலபாரதம்.             (244)

90.- ஐம்புதல்வரிடத்தும் தோன்றிய நற்பண்புகள்.

மார்பினுமகன்றகல்வி வனப்பினுநிறைந்தசீர்த்தி
போர்வருதெரியன்மாலைப் புயத்தினுமுயர்ந்தகொற்றம்
சீர்தருவாய்மைமிக்க கண்ணினுஞ் செங்கைவண்மை
பார்வளஞ்சுரக்குஞ்செல்வப் பரப்பினும்பரந்தவன்றே.

     (இ-ள்.) கல்வி - (அந்தப்பாண்டு புத்திரர்களுடைய) கல்வியானது,
மார்பின்உம் - (அவர்களுடைய) மார்பைக்காட்டிலும் அகன்ற-; சீர்த்தி -
சீர்த்தியானது, வனப்பின்உம் - (அவர்களுடைய) அழகைக்காட்டிலும், நிறைந்த -
நிறைந்தன: போர் வரு தெரியல்