பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்141

மாறு, கந்தம் வான் கொன்றை தோயும் கங்கையாள் குமரன் - நறுமணமுள்ள
சிறந்த கொன்றைமலரிற் படிந்த கங்காதேவியின் குமாரனான வீடுமன், வைகும் -
தங்கியுள்ள, அந்தம் இல் சுவர்க்கம் அன்ன -  அழிதலில்லாத
சுவர்க்கலோகத்தையொத்த, அத்தினாபுரி - அத்தினாபுரியை, வந்துஉற்றார் -
வந்துசேர்ந்தார்; (எ-று.)-ஆகும் - அசை.

     பாண்டுஇறக்க, குந்தியும் அவளுடைய புத்திரரும் அவனுடைய அந்திம
கருமங்களைச் செய்துமுடித்திட்டுக் காட்டிலிருந்து நாட்டில் இப்போதுதான் வந்து
சேர்ந்தன ராதலால், உறவின் முறையாரான வசுதேவன் முதலியோர் அவர்களைக்
காணுமாறு வந்தனரென்க.                                       (267)

113.-கிருஷ்ணன்முதலியோரும் குந்தியைக்கண்டு புண்ணியநலனை
யெண்ணிப் பூமியாளும்முறையையும்
ஆலோசித்தல்.

வெண்ணிறமதியமன்ன விடலையுங்கரியமேக
வண்ணனும்வள்ளறன்னைத் திருவயிற்றுயிர்த்தமாதும்
எண்ணிலாவுவகையோடுங் குந்தியையெய்தியெல்லாப்
புண்ணியநலமுமெண்ணிப் பூமியாண்முறையுங்கோத்தார்.

    (இ-ள்.) வெள் நிறம் மதியம் அன்ன விடலைஉம் - வெண்ணிறமுடைய
சந்திரனை யொத்த ஆண்களிற் சிறந்தோனாகிய பலராமனும், கரிய மேகம்
வண்ணன்உம் - கருநிறமுள்ள மேகநிறத்தனாகிய க்ருஷ்ணனும்,
வள்ளல்தன்னை திரு வயிறு உயிர்த்த மாதுஉம் - அந்த ஸ்ரீகிருஷ்ணனை (த் தன்)
திருவயிற்றிலே தோன்றுமாறு செய்த பெண்ணாகிய தேவகியும், எண் இலா
உவகையோடுஉம் - அளவில்லாத மகிழ்ச்சியுடனே, குந்தியை எய்தி -
குந்தியையடைந்து, புண்ணியம் நலம்எல்லாம்உம் எண்ணி - புண்ணியத்தினால்
விளைந்த நன்மைகளையெல்லாம் கருதிப்பார்த்து, பூமி ஆள் முறைஉம் -
(இனிப்) பூமியையாள வேண்டியமுறையையும், கோத்தார் - கருதினார்கள்; (எ -று.)

     பாண்டு சாபவசத்தனானபின்பும் அவனுடைய சந்ததியற்றுப் போகாமல்
தேவர்களருளால் முளைத்தது புண்ணியத்தினால் விளைந்த நன்மையாதல்
காண்க. பூமிபாரம்  தீர்ப்பதற்கே திருவவதரித்த க்ருஷ்ணன், பூமியாள் முறையை
உடனிருந்துகருதியமை ஏற்றதாதல் காண்க.                           (268)

114.-தருமபுத்திரனைநோக்கி ஸ்ரீக்ருஷ்ணன் கூறியது.

எம்பிரானாதிமூல மிந்திரன்முதலோர்க்கெல்லாம்
தம்பிரான்பாண்டுவீன்ற தருமதேவதையைநோக்கி
அம்புராசிகளுட்பட்ட வவனிகளனைத்துநாமே
இம்பர்நோயகற்றியெல்லா வெண்ணமுமுடித்துமென்றாள்.

     (இ-ள்.) எம்பிரான் - எமதுசுவாமியும், ஆதிமூலம் -
மூலப்பொருள்கட்கும்மூலமானவனும், இந்திரன் முதலோர்க்கு எல்லாம் தம்பிரான்
- இந்திராதியர்க்கும் சுவாமியுமான ஸ்ரீக்ருஷ்ணன், பாண்டு ஈன்ற -
பாண்டுமகாராசனுக்குப் புத்திரனாகப்பிறந்த, தருமதேவதையை நோக்கி -
தருமதேதையான யுதிஷ்டிரனைப்