பக்கம் எண் :

142பாரதம்ஆதி பருவம்

பார்த்து,- அம்புராசிகள் உட்பட்ட அவனிகள் அனைத்துஉம் - சமுத்திரத்துக்கு
உட்பட்ட பூமிமுழுவதையும்பற்றி, இம்பர் நோய் - இங்குவரக்கூடிய துன்பத்தை,
அகற்றி - போக்கி, எல்லாம்எண்ணம்உம் - எல்லாவெண்ணத்தையும், நாம்ஏ
முடித்தும் - நாமே தீர்த்துவைப்போம், என்றான்-; (எ-று.)

     எல்லாவெண்ணமும் என்றது - பூபாரந் தீர்க்கவேணுமென்று தான்
கருதியிருப்பதும், பாண்டவர்க்கு ஞாதியரால் நேரக்கூடியனவாகக்கருதும்
பலவகையிடையூறுகளும் ஆகிய பலவற்றையும் காட்டும். தர்மிஷ்டனாதலால்
தருமபுத்திரனை, 'தருமதேவதை' என்றார். இம்பரேயகற்றி யென்றும் பாடம்.
                                                           (269)

115.-திருதராஷ்டிரன் முதலியோர் வந்தவரோடு
அளவளாவுதல்.

முகுரவானனனும்வேத்து முனிவனுமனஞ்சொற்காயம்
பகிர்விலாவிதுரன்றானும் பாந்தளேறுயர்த்தகோவும்
நிகரில்லாத்துணைவர்தாமு நீரொடுநீர்சேர்ந்தென்னத்
தகைவிலாவன்பினோடுந் தழுவினர்கெழுமினாரே.

     (இ-ள்.) முகுரவானனன்உம் - திருதராட்டிரனும், வேந்து முனிவன்உம் -
அரசனாயிருந்தே முனிவனாயிருக்கும் வீடுமனும், மனம் சொல் காயம் பகிர்வு
இலா விதுரன்தான்உம் - மனசு வாக்கு காயம் என்னும் திரிகரணங்களும்
வேறுபடுதலில்லாத [ஒன்றுபட்டுள்ள] விதுரனும், பாந்தள் ஏறு உயர்த்த கோஉம்
- சர்ப்பத்தை உயரக் [கொடியிற்] கொண்டவனாகிய துரியோதனனும், நிகர் இலா
துணைவர்தாம்உம் - ஒப்பற்றவரான அவனுடைய தம்பிமாரும், நீரொடு நீர்
சேர்ந்துஎன்ன - நீரோடு நீர் சேர்த்தாற்போல (வேறுபாடின்றி ஒரு
தன்மையராய்), தகைவு இலா அன்பினோடுஉம் - தடைப்படுதலில்லாத
அன்புடனே, தழுவினர் - (வந்த அந்தவசுதேவன் முதலியோரைத்)
தழுவினவராய், கெழுமினார் - உரிமை பாராட்டினார்கள்; (எ-று.)

     முகுரவானனன் என்றபெயர்க்கு - கண்ணாடிபோன்ற முகமுடையவனென்று
பொருள்: முகுரம் - கண்ணாடி: ஆனனம் - முகம்: கண்ணாடி தான்
பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சியில்லாதுபோல,
தான்பிறராற் காணப்பட்டுப் பிறரைத் தான் காணாத பிறவிக்குருடான முகத்தை
யுடையவனென்றவாறு: இனி, கண்ணாடிபோல விளக்கமுடைய
முகமுடையவனென்றுமாம்: "வயக்குறுமண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற,
முகத்தவன்" என்றார், கலித்தொகையிலும். 'நீரொடுபால்சேர்ந் தென்ன' என்றும்
பாடம்.                                                    (270)

116.- வந்தவர்க்கு வீடுமன் முதலியோர் விருந்துசெய்தல்.

தன்பதிவந்தோர்தம்மைத் தாதைதன்றாதையான
முன்புடைக்கங்கைமைந்தன் முதலியமுதல்வரெல்லாம்
அன்பொடுகண்டுகண்டு கண்களித்தார்வம்விஞ்சி
மன்பதைமகிழ்ச்சிகூர வரம்பிலாவிருந்துசெய்தார்.