பக்கம் எண் :

148பாரதம்ஆதி பருவம்

துரியோதனனோடு ஆலோசித்து, (பிறகு), பாவகன் நண்பன் மெய் புதல்வனை -
அக்கினியின் தோழனான வாயுவினது மெய்யன்புக்கு உரிய மகனாகிய வீமனை,
நார்கொள் வல்லியால் - கயிற்றின் தன்மையைக்கொண்ட நீண்டகொடிகளால்,
திண் பதத்தொடு புயம் சிக்க யாத்தபின் - வலிய கால்களும் கைகளும்
இறுகும்படி கட்டிய பின்பு,- (எ-று.)- 'பெருநதியூடு வீழ்த்தினான்' என
வருங்கவியோடு முடியும்.

     கண்படை - கண்டுபடுதல், கண்மூடியுறங்குதல். எண்படைக்குமரன்
என்பதற்கு - எண்ணத்தக்க தம்பிமாரின் தொகுதியையுடைய துரியோதனனென்று
உரைத்தலுமொன்று. நெருப்புப் பற்றியெரிதற்குக் காற்று உதவியாதல்பற்றி,
காற்றுக்கு அக்கினிசகாய னென்று ஒருபெயர் வழங்கும். சிக்க - திசைச்சொல்.
'ஆர்த்தபின்' என்றும் பாடமுண்டு.                                 (279)

6.- துரியோதனன் வீமனைக் கங்கையில் எறிதல்.

அரவினிற்பிணித்தெழு மரவம்பொங்கிட
உரனுடைப்பொருப்பையன் றும்பர்நாயகன்
பரவையிற்செறித்தெனப் பயனில்செய்கையான்
விரவுமப்பெருநதி யூடுவீழ்த்தினான்.

     (இ-ள்.) உம்பர் நாயகன் - தேவர்களுக்கெல்லாந் தலைவனான திருமால்,
அன்று - முன்னொருகாலத்தில், உரன் உடைபொருப்பை - வலிமையையுடைய
மந்தரமலையை, அரவினில் பிணித்து - (வாசுகி யென்னும்) பாம்பினாற் கட்டி,
எழும் அரவம் பொங்கிட - மிக்க ஓசை யுண்டாம்படி, பரவையில் செறித்து என
- (பாற்) கடலில் இட்டாற்போல,- (வீமனை), பயன் இல் செய்கையான் -
பிரயோசன மற்ற செயலையுடைய துரியோதனன், விரவும் அ பெருநதியூடு
வீழ்த்தினான் - பொருந்திய அந்தப் பெரிய கங்கை நதியின் நடுவிற்
போகட்டான்; (எ-று.)

     "ஆயதாபிரஹிதம் ஸு யோதந:-தம்ஸு ஸு ப்தமவபத்யவல்லிபி; 
போகிபத்தமிவ மந்தரம்  ஹரி:- ஸிந்துகர்ப்பபயஸிந்யபாதயத்" என்றதற்கு ஏற்ப -
உம்பர்நாயகன்-திருமால் எனப்பட்டது. மேல் வீமன் தனது வலிமையால்
தப்பியெழுதலின் 'பயனில் செய்கையான் வீழ்த்தினான்' என்றரென்னலாம்.
'ஆர்வம்பொங்கிட' 'பயனில்செய்கையால்', 'வீழ்த்தினார் என்றும் பாடம்.      (280)

7.- வீமன் கட்டு விடுவித்துக் கரையேறுதல்.

வீழ்ந்தவனந்தர நிமிர்ந்துமெய்யுறச்
சூழ்ந்தனபிணிகளைத் துணிகளாக்கியே
ஆழ்ந்திலனேறிமீண் டவசத்தோடவண்
தாழ்ந்தனனிராகவன் றம்பிபோன்றுளான்.

     (இ-ள்.) இராகவன் தம்பி போன்றுஉளான் - இராமனது தம்பியான
இலக்குமணனையொத்துள்ளவனாகிய, வீழ்ந்தவன் - (கங்கைப் பெருக்கில்)
விழுந்தவீமன்,- அந்தரம் நிமிர்ந்து -  மேலெழுந்து, மெய் உற சூழ்ந்தன
பிணிகளை துணிகள் ஆக்கி - (தன்) உடம்பை அழுந்தச்சுற்றியுள்ள கட்டுக்களை
(த் தன் உடல்வலியால்) துண்டுக