விளக்கும் மெல் பங்கயங்கள்உம் - (தனது) தலைவனான சூரியன் (மறைதலாற் குவிந்து அவன்) உதித்தலால் மலர்ந்த மெல்லிய தாமரைமலர்களும், மதியினால் குளிர் நெடு வான்உம் ஆயினான் - (சூரியனால் வெப்பமடைந்து) சந்திரனாற் குளர்ச்சியடைந்த பெரிய ஆகாயமும் போல்ஆனான்; (எ-று.) - பங்கயங்கள் என்ற பன்மைக்குப்பயன் இல்லை. சூரியன்கண்டபொழுது தாமரை மலர்தலும் காணாதபொழுது குவிதலுமாகிய இயல்புபற்றி, தாமரையாகியபெண்ணுக்குச்சூரியனைக் கணவனென்ப. நலங்கொள்மேனியாள்..... வானுமாயினாள்என்றும் பாடம். (300) 27.-வீமன் உற்றார்க்கு மகிழ்ச்சியையும் உறாதார்க்கு அச்சத்தையும் விளைத்தல். வேதியர்குரவர்வில் விதுரன்வீடுமன் ஆதியர்துணைவரந் நகருளார்களென்று ஓதியசனங்களுக் குவகைநல்கினான் ஞாதியர்கிளைக்கெலா நடுக்கநல்கியே. |
(இ-ள்.) (இத்தன்மையனான வீமன்),- ஞாதியர்கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கி - பங்காளிகளாகிய துரியோதனாதியரது கூட்டத்துக்கெல்லாம் மிக்க அச்சத்தைக்கொடுத்து,- வேதியர் - பிராமணர்களும், குரவர் - (தாயும் தமையனும்முதலிய) பெரியோர்களும், வில் விதுரன் வீடுமன்ஆதியர் - வில்வித்தையில் தேர்ந்த விதுரன் பீஷ்மன் முதலானவர்களும், துணைவர் - (தனது) தம்பிமாராகிய (அருச்சுனன்முதலிய) மூவரும், அ நகர் உளார்கள் - மற்றும் அந்நகரத்திலுள்ளவர்களும், என்ற ஓதிய - என்று சொல்லப்பட்ட, சனங்களுக்கு - சனங்களுக்கெல்லாம், உவகை நல்கினான் - மகிழ்ச்சியைக் கொடுத்தான்; (எ-று.) குரவர் என்பதற்கு - ஐம்பெருங்குரவரிற்சேர்ந்த தாயும் தமையனும் குலகுருவும் கொள்க. உவகைநல்கினான் நடுக்க நல்கி - தொடைமுரண். (301) 28- வீமன் அத்தினாபுரிசேர்ந்து தாயைத் தேற்றி வாழ்தல். குந்தியைமகிழுரை கூறிக்கற்பினால் அந்திமீனனையவ ளருளின்வாழ்த்தவே செந்திருமகளுறை செல்வமாநகர் வந்திவன்முன்புபோல் வளருநாளிலே. |
இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) இவன் - இந்த வீமன்,- செம் திருமகள் உறை செல்வம் மாநகர் வந்து - செம்மையுடைய இலக்குமி வசிக்கின்ற செல்வங்கள் நிறைந்த பெரிய அத்தினாபுரிக்கு வந்து, குந்தியை மகிழ்உரை கூறி - (தனது தாயாகிய) குந்தியைநோக்கி (அவளுக்கு) மகிழ்ச்சியைத்தரும் இனியவார்த்தைகளைச் சொல்லி, கற்பினால் |