தான் இருக்கையில் வேறோருத்தியை மணந்த காரணத்தினால் மன்னவனிடத்துச் சினந்து தன்தந்தையுன் வீட்டைத் தேவயானை சேர்ந்தனளென்பதாம். பூருவைத் தவிர,சன்மிட்டையின் மற்றை யிருபுதல்வர் - த்ருஹ்யு அனு என்பவர். பூரு- சன்மிட்டையின்ஈற்றுப் புதல்வனாவனென்பது வியாசபாரதத்துப் பெறப்படும் இறைமனை -இறைவனுக்கு மனைவி: நான்காம் வேற்றுமைத்தொகை: முறைப்பொருளது, மனை -மனைவிக்குஇடவாகுபெயர். (29) 22.-தேவயானை தன்தந்தையினிடம் யயாதி மன்னவ னொழுக்கத்தைச்சொல்ல, அந்தச்சுக்கிரனுடைய சாபத்தால் யயாதி முதுமை யடைதல். சென்றுதாதையைப்பணிந்திது செப்பலுஞ்சினவேல் வென்றிமன்னனைவிருத்தனாம் வகையவன்விதித்தான் அன்றுதொட்டிவனைம்முதற் பிணியினாலழுங்கி இன்றுநூறெனநரைமுதிர் யாக்கையோடிருந்தான். |
(இ - ள்.) (தேவயானை), சென்று - (தாதையின்வீட்டைச்) சேர்ந்து, தாதையைபணிந்து - (தன்) தந்தையான சுக்கிரனை வணங்கி, இது செப்பலும்- (தன்கணவன்சன்மிட்டையைமணந்த) இதைச் சொல்லுதலும்,- சினம் வேல் வென்றி மன்னனை -சினத்தைக்கொண்ட வேற்படைதாங்கிய வெற்றியையுடைய யயாதியரசனை, விருத்தன்ஆம் வகை - முதுமையுடையோனாகுமாறு, அவன் - அந்தச் சுக்கிராசாரியன்,விதித்தான் - கட்டடையிட்டான்[சபித்தான்]: அன்றுதொட்டு (சுக்கிரன் சபித்த)அந்தநாள்முதல், இவன்- இந்த யயாதி மன்னவன், ஐ முதல் பிணியினால் - சிலேட்டுமத்தைத் தலைமையாகக்கொண்ட நோயினால், அழுங்கி - வருந்தி, இன்று நூறு என -இப்போது (இவனுக்கு) நூறுவயசு (ஆய்விட்டது) என்று (இவன் முதுமைகண்டுயாவரும்) சொல்லும்படி, நரை முதிர் யாக்கையோடு - கிழத்தனத்தினால் முதிர்ந்தசரீரத்துடனே, இருந்தான்-; (எ - று.) விருத்தன்=வ்ருத்தன்: வடசொல். முதுமைப்பருவத்துச் சிலேட்டுமம் விஞ்சிய இருமல்வியாதி தோன்றுத லியற்கையாதலறிக. (30) 23.- யயாதி தன் மைந்தர்களொவ்வொருவரையும் இளமையைத் தந்து தன் முதுமையைப் பெறுமாறுகேட்க, பூருவே இசைதல். அந்தமன்னவன்மைந்தரை யழைத்தெனக்குசனார் தந்தமூப்பைநீர்கொண்மினும் மிளமைதந்தென்ன மைந்தர்யாவருமறுத்திடப் பூருமற்றவன்றன் இந்தமூப்பினைக்கவர்ந்துதன் னிளமையுமீந்தான். |
(இ - ள்.) அந்த மன்னவன் - அந்தயயாதியரசன், மைந்தரை - (தன்) புத்திரரானயதுமுதலியோர்களை, அழைத்து-, 'எனக்கு-, உசனார் - சுக்கிராசார்யர், தந்த -(சாபமூலமாகக்) கொடுத்த, மூப்பை - முதுமையை, நும் இளமை தந்து - உங்களுடையஇளமையைக் |