சந்தனுவமிசம் அநீதியுடைய துரியோதனனால் விளங்காது, நீதிநெறியுடைய தருமனாலேயே விளங்குவது பற்றி, ' 'சந்தனுவின் திருமரபு தயங்கச் செந்திருமேவருசிறுவன்' என்றார். தழீஇ-காரணப்பொருட்டு. (371) 98.-அதுகண்டு துரியோதனன் மிகப் பொறாமை கொள்ளுதல். துன்மதியான சுயோதனன்மாழ்கித் தன்மதியாலரு டந்தையையெய்திப் புன்மதியாமுரை சிற்சில்புகன்றான் மன்மதியாது மதித்தலிலாதான். |
(இ-ள்.) துன்மதி ஆன - துர்ப்புத்தியைக்கொண்ட, சுயோதனன்-, மாழ்கி - (தருமனது யுவராச பட்டாபிஷேகத்தைக்கண்டு) வருந்தி, மன் மதி யாதுஉம் மதித்தல் இலாதான் - இராசநீதியைச் சிறிதும் ஆலோசியாதவனாய், அருள் தந்தையைஎய்தி - (தன்னைப்) பெற்ற தந்தையான திருதராட்டிரனை அடைந்து, தன் மதியால் - தனது எண்ணத்திற்கு ஏற்ப, புல்மதி ஆம் உரை சிற்சில் புகன்பவனானான்;(எ-று)- அவற்றை, அடுத்த கவியிற்காண்க. துர்மதி - வடசொல். மதி - நீதிக்கு, ஆகுபெயர். (372) 99.- துரியோதனனது பொறாமைவார்த்தை. உன்பதம்யாவு முதிட்டிரனுக்கே மன்பதையோடு வழங்கினையெந்தாய் அன்பதிலாவவ னனுசர்மதத்தால் என்பதமம்ம விறந்ததையின்றே. |
(இ-ள்.) எந்தாய் - எமது தந்தையே! உன் பதம் யாஉம் - உனது அரசாட்சி யுரிமையெல்லாவற்றையும், உதிட்டிரனுக்குஏ - தருமபுத்திரனுக்கே, மன்பதையோடு - மக்கட்பரப்புடனே, வழங்கினை - கொடுத்திட்டாய்: அவன் அன்புஅது இலா அனுசர் மதத்தால் - அவனுடைய அன்பு இல்லாத தம்பியரின் செருக்கினால், என்பதம் இன்றுஏ அம்ம இறந்தது - எனது நிலைமை இன்றைக்கே அந்தோ அழித்திட்டது! (எ -று.)-" என்றலும்" என அடுத்த கவியோடு தொடரும். இன்றே யிறந்தது - விரைந்துணிவும்பற்றிய காலவழுவமைதி. ஏ - பிரிநிலை. அம்ம - இரக்கக்குறிப்பு.ஐ - அசை. (373) 100.-இரண்டுகவிகள் - அதற்குத் திருதராட்டிரன் கூறும் சமாதானம். என்றலுமைந்தனை யிந்துகுலத்தோய் நின்றிலையான்மனு நீதியிலையா பொன்றியவெம்பி பதம்புதல்வர்க்கே அன்றிநுமக்கர சாளுதலாமோ. |
(இ-ள்.) என்றலும் - என்று (துரியோதனன்) சொன்ன வளவிலே,- மைந்தனை- (தன்) மகனான அவனை நோக்கி,- (திருத |