கோவி னாணைந டத்திக் குவலயத் தேவி மெய்களிக் கச்சிறந் தாரரோ. |
(இ-ள்.) ஆவி அன்ன அமைச்சன் மொழி படி - உயிரை யொத்த (புரோசன னென்னும்) அந்த மந்திரியின் சொற்படி, மேவி - (அம்மாளிகையிற்) சேர்ந்து,- அத்திசை வேந்தர் குழாம் தொழ- அந்தத்திக்கிலுள்ள அரசர்களுடைய கூட்டம் (தம்மை) வணங்க, கோவின் ஆணை நடத்தி - அரசாட்சிக்கு உரிய கட்டளையைச் செலுத்திக் கொண்டு, குவலயம் தேவி மெய் களிக்க சிறந்தார் - பூமிதேவி உடம்புகளிப்படையும்படி (பாண்டவர்கள்) சிறப்புற்றிருந்தார்கள்; (எ-று.) பாண்டவர் தன்னை மிக இனியனென்று கருதும்படி தந்திரமாக நடந்தமைபற்றி, 'ஆவியன்னவமைச்சன்' என்றார். அரோ - ஈற்றசை. (391) வேறு. 118.-மூன்றுகவிகள் - குளகம்: பாண்டவர் அரக்கு மாளிகையைக் கவனித்துப் புரோசனன்மீது சங்கை கொள்ளுதலைக் கூறும். மன்ன ரைவரும் வாரணா வதந்தனின் மருவித் துன்ன லார்தொழத் தொன்னிலம் புரந்திடு நாளில் பின்ன நெஞ்சுடைப் புரோசனன் பேதுறு மதியான் முன்ன மேயினி தமைத்திடு மனைச்செயன் முன்னா. |
(இ-ள்.) மன்னர் ஐவர்உம் - பாண்டவராசர் ஐந்துபேரும், வாரணாவதந்தனில் மருவி - அவ்வாரணாவதநகரத்தில் வசித்து, துன்னலார் தொழ - பகைவர்கள் வணங்க, தொல் நிலம் புரந்திடும் நாளில்,- தொன்றுதொட்டு வந்த இராச்சியத்தை அரசாளும் நாளில்,- பின்னம் நெஞ்சு உடை புரோசனன் - மாறுபட்டமனத்தையுடைய புரோசனன், பேது உறு மதியால் - மாறுபாடுகொண்ட (தன்)அறிவினால்,முன்னம்ஏ இனிது அமைத்திடு-(தாங்கள் அந்நகரத்துக்கு வரும்) முன்னமே (தங்களுக்கென்று) அழகிதாகக்கட்டி யமைத்துவைத்த, மனை - அரக்குமாளிகையின், செயல் அமைப்பை, முன்னா - கருதி,- (எ-று.)-"என்றார்" என் 120- ஆங் கவியோடு முடியும். பாண்டவர்கள் அரக்குமாளிகை யமைப்பை நுட்பமாக ஊகித்து உணர்ந்து அதனால் புரோசனன்வஞ்சனையை அறியலானாரென்க. பிந்நம் - வடசொல். பின்னநெஞ்சு - புறமாகிய சொற்செயல்களோடு ஒற்றுமைப்படாத அகம்.அமைத்த மன் என்று பிரதிபேதம். இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள். (392) 119. | மெழுகினானமக் காலயம்வகுத்ததும்விரகே ஒழுகுகின்றதன் னொழுக்கமும்வஞ்சனையொழுக்கே எழுகடற்படை யாவையுமிவன்வழியனவே தொழுதகையுளும் படையுளசூழ்ச்சியும்பெரிதால். |
|