பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்219

     பாண்டவர் அழிவை, குருகுலச்செல்வம் அழிந்ததெனக் குறித்தார்; செல்வம்
- சிறந்தசந்ததி. பட்டு, புகுந்து - எச்சத்திரிபு.

135.- இச்செய்தியறிந்த துரியோதனாதியர் நிலை.

கொட்பனற்சுடவிறந்தமை கேட்டலுங்குருக்கள்
துட்பதத்துடனழுதிடுஞ் சுயோதனன்முதலோர்
உட்பனித்துமேல்வெயிலுற வெதும்புநீரொத்தார்
பெட்புறப்புவிமுழுவதும் பெறுங்கருத்துடையோர்.

     (இ-ள்.) கொட்பு அனல் சுட - சூழ் தலையுடையதீ எரிக்க, இறந்தமை -
(பாண்டவர்) இறந்த செய்தியை, கேட்டலும் - கேட்டறிந்தவுடனே, -
துட்பதத்துடன் அழுதிடும் - கொடிய கோட்பாட்டோடு புலம்புகின்ற, சுயோதனன்
முதலோர் குருக்கள் - துரியோதனன் முதலியகுருகுலகுமாரர்கள்,- பெட்பு உற
புவிமுழுவதுஉம் பெறும் கருத்து உடையோர் - ஆசைமிகப் பூமிமுழுவதையும்
பெறும் எண்ணத்தை யுடையவர்களாய், வெயில் உற உள் பனித்து மேல்
வெதும்பும் நீர் ஒத்தார்- (மேலே) வெயில்படுகையில் உள்ளே குளிர்ந்து
மேலேசுடும் இயல்பையுடைய நீரைப் போன்றார்கள்;

     துரியோதனாதியர் அகத்தில் மகிழ்ச்சிகொண்டு புறத்தில் தபிப்புக்காட்டினர்
என்பதாம். அப்பொழுது அவர்கட்கு மகிழ்ச்சி இயற்கையும், சோகம்
செயற்கையுமாய் நின்றமை, உவமையால் விளங்கும். துஷ்பதம் -வடசொல்.(409)

136.- உண்மையிற்பாண்டவர் எரிந்திடாமைப்பற்றிய
கவிவர்ணனை.

பொன்ன லங்கொள மெழுகினா லாலயம் புனைந்து
துன்னு வெங்கதைப் படைமருச் சுதனையே சுடுவான்
என்ன வாண்மைகொ லெண்ணினா னென்ணினுஞ் சுடுமோ
வன்னி தன்பெயர் மருச்சக னென்பது மறந்தே.

     (இ-ள்.) பொன் நலம் கொள - (வெளியே)பொன்னுக்குஉரிய அழகு
விளங்கும்படி, மெழுகினால் ஆலயம் புனைந்து - அரக்கினால் மாளிகையைச்
செய்து, துன்னு வெம் கதை படை மருத் சுதனைஏ சுடுவான் - பொருந்திய
கொடிய (சத்துருகாதினியென்னும்) கதாயுதத்தையுடைய வாயுகுமாரனாகிய
வீமனையே சுடும்படி, எண்ணினான் - (துரியோதனன்) கருதினான்: (அங்ஙனங்
கருதியது), என்ன ஆண்மைகொல் - என்ன ஆண்திறமையோ? எண்ணின்உம் -
(அவ்வாறு அவன்) நினைத்தாலும், வன்னி - அக்கினி, தன் பெயர் மருத்தசகன்
என்பது மறந்து - தனது பெயர் காற்றின் சகாயனென்பதை மறந்து, சுடும்ஓ -
(அவ்வாயுகுமாரனை) எரித்திடுமோ? (எ-று.)

     துரியோதனனுக்கு நேரெதிரியான வீமன் தப்பியுய்ந்தன னென்ற
உண்மையை, காற்றின் நண்பனான அக்கினிதேவன் அக்காற்றின் மகனை
எரித்திடானென வருணித்தார்; இது - ஏதுத்தற்குறிப்பேற்றவணியின் பாற்படும்.
மருத்ஸு தன், மருத்ஸக: என்ற வடமொழிப்பெயர்கள் திரிந்தன.        (410)

வாரணாவதச்சருக்கம் முற்றிற்று.

------