இனி என்றும் - இன்றைநாள்முதல் இனிமேல் என்றைக்கும், முறை முறை எங்கள் மனைதொறுஉம் - வரிசைக்கிரமப்படி எங்கள் வீடுதோறும், விஞ்சையோர் குன்றம் என் அறுசுவை கொண்ட ஒரு பண்டி அடிசில்உம் - வித்தியாதரர்வசிக்கும் மலை யென்றுசொல்லும்படி அறுவகையுருசியும் அமைந்த ஒருபண்டிசோறும், நம் குலம் துன்றும் நரன் பலி ஒன்றுஉம் - எங்கள் குலத்திற்பொருந்திய ஒரு மனிதனாகிய பலியும், இவை - ஆகிய இவற்றை, திறை - (உனக்குத்) திறைப்பொருளாகச்செலுத்தி, தொண்டு - அடிமையை, புரிகுவம் - செய்வோம் ', என்றலும் - என்றுசொன்னவளவிலே,-(எ-று.) 'அன்று முதல் *** தின்றுதிரிகுவன்' என அடுத்த கவியில் முடிபு காண்க. நாங்களே நாளுக்குஒருவீடாக முறைவட்டம் ஏற்படுத்திக் கொண்டு ஒருவண்டிச்சோற்றையும், ஓராளையும் உனக்கு உணவாக இடுவோமென்று ஊரந்தணர் கூறி அவனைச் சாந்தப்படுத்தினரென்க. விஞ்சையோர்= வித்தியாதரர்; மாயவித்தைகளைத் தரித்தவர்; இவர்கள், பதினெட்டுத் தேவகணங்களுள் ஒரு சாதியார். இவர்களுக்கு உறைவிடம் வெள்ளிமலையாதலை, சிந்தாமணி சூடாமணிகளிற் காணலாம். நரபலி - வடமொழித்தொடர். தன்ன தனதன தன்ன தனதன தன்ன தனதன தன்னனா என்பது, இனி மூன்று செய்யுட்களுக்குச் சந்தக்குழிப்பு. (452) 43. | அன்றுமுதலடல்வஞ்சகனுமிறை யன்பினொடு பெறுவன்பினால், என்றுநிலைபெறவுண்டியுடன்மனையெங்குமிடு பலியெஞ்சுறத், தின்றுதிரிகுவனின்றென்மனைமுறைசென்றுபணிகவர் திங்கள்போல், நின்றுதளர்வுறுகின்றதெனதுயிர்நெஞ்சமிலதொருதஞ்சமே. |
(இ - ள்.) அன்று முதல் - அந்நாள்முதலாக, அடல் வஞ்சகன் உம் - கொடியவஞ்சகனான அவ்வரக்கனும், இறை அன்பினொடு - சிறிது அன்புடனே, பெறு வன்பினால் - (தான்) பெற்ற வலிமையால், என்றுஉம் நிலை பெற - எந்நாளும் நிலையாக, மனை எங்குஉம் உண்டியுடன் இடு பலி - வீடுதோறும் உணவோடுசெலுத்தும் நரபலியை, எஞ்சுற தின்று திரிகுவன் - ஒழியும்படி தின்று திரிவான்; (அந்த நியமித்தின்படி, இன்ற என் மனை முறை - இன்றைக்கு என் வீட்டின் முறை; (ஆதலால்), எனதுஉயிர்-, பணி சென்று கவர் திங்கள் போல் - (இராகுகேதுவாகிய) பாம்பினால் (அருகிற்) சென்று பிடிக்கப்பட்ட சந்திரன்போல, நின்று தளர்வு உறுகின்றது - தளர்ச்சி பொருந்தி நிற்கின்றது; நெஞ்சம் ஒரு தஞ்சம் இலது - என்மனம் ஒரு பற்றுக்கோடுமில்லாதிருக்கின்றது; (எ-று.) உயிர் அழியாது துயருறுதல்பற்றி, அதற்கு, பணிகவர்திங்கள் உவமை. எஞ்சுற - (நாளடைவிலே ஊரில் ஆள்) குறைய என்றுமாம். 43. | கன்னியிவள்பிறர்பன்னியெனதிரு கண்ணின்மணி நிகர்சன்மனும், மன்னுகுலமுதல்பின்னையொருவருமண்ணினுறுதுணை யின்மையால், இன்னல்பெரிதுளதென்னபுரிகுவதென்னவறிகிலனன்னை கேள், முன்னைமனைநிகழ்தன்மமுனிவனைமுன்னிலிடர்நனி துன்னுமால். |
|