(இ-ள்.) கன்னி இவள் - (எனது) இந்த இளம்பெண், பிறர் பன்னி - வேறொருவரது உடைமையாகிய மனைவி: எனது இரு கண்ணின் மணி நிகர் சன்மன்உம் - எனது இரண்டுகண்களிலுள்ள கருமணியை யொத்த அருமைப் புதல்வனும், மன்னு குலம் முதல் - நிலையானவமிசத்துக்குஓர் அடியாயுள்ளான்; மண்ணின்உறு துணை பின்னை ஒருவர்உம் இன்மையால் - பூமியிற் பொருந்திய துணை வேறொருவரும் இல்லாமையால், இன்னல்பெரிது உளது - (எனக்குத்) துன்பம்மிகுதியாயுண்டாயிற்று: என்ன புரிகுவது என்ன அறிகிலன்-யாது செய்வதென்று அறியேன்; அன்னை கேள் - தாயே! கேள்; முன்னை மனை நிகழ் தன்மம் முனிவனை முன்னில் - இவ்வீட்டுக்கு முதன்மையாய் இல்லறவாழ்க்கையை நடத்துகிற (என்கணவனாகிய) அந்தணனை (ப்பலிசெலுத்த) நினைத்தாலோ, இடர் நனி துன்னும் - துன்பம் மிகுதியாக உண்டாகிறது; (எ-று.)- என்று பார்ப்பனி இடர்க்காரணத்தைக் குந்தியிடம் கூறிமுடித்தா ளென்க. எனதுமகளைப் பலிசெலுத்தலா மென்றால், அவள் ஒருபுருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனுக்குஉரிய பொருளாய்விட்டதனால். அவளைச்செலுத்த இடமில்லை; எனதுமகனோ, ஏகபுத்திரனாதலால் அவனைச்செலுத்திவிடின் சந்ததியின்றி வமிசம் அழியும்: என்னையே செலுத்துவதென்றால், வேறொருவர் உதவுவாரில்லை; அதனால், என்கணவன் விரும்பகில்லான்; என்கொழுநனைச் செலுத்தும் விஷயத்தில் உண்டாகிற துயரத்துக்கு எல்லையில்லை என்று பலவகையிலும் தன் துயரத்துக்குப் பரிகாரமில்லாமையைக் கூறினள். ஜந்மம் - பிறப்பு: அதனையுடையவன், சன்மன் : மகன். (454) 45.-இருகவிகள் - அதுகேட்டுக் குந்தி தனது மக்களில் ஒருவனைஅனுப்பலாமென்றல் கூறும். ஏதமறவுறவானமனைமகள் யாவுமுரைசெயயாதவன் தீதில்குலமகளார்வமுடனவ டேறவொருமொழிகூறுவாள் ஆதியனுமனொடோதுமுவமைய னாடல்வலியுடையாண்மையான் மோதியிடையிருள்யாமசரிதனை மூளையுகவுடல்கீளுமே. |
நான்கு கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) ஏதம் அற உறவு ஆன - களங்கமில்லாமல் (குந்தியோடு) நண்புரிமைபூண்ட, மனை மகள் - அந்தவீட்டுக்குஉரிய பார்ப்பனி, யாஉம் உரைசெய - (இங்ஙனம்) எல்லாவற்றையும் சொல்ல, யாதவன் தீது இல் குலம் மகள் - யதுகுலத்திற்பிறந்த சூரராசனது குற்றமற்ற குலத்துக்கு உரியமகளாகிய குந்திதேவி, ஆர்வமுடன் - அன்புடனே, அவள் தேற ஒரு மொழி கூறுவாள் - அப்பார்ப்பனி தேறுதலடையும்படி ஒருவார்த்தைசொல்வாள்:- ஆதி அனுமனொடு ஓதும் உவமையன்-பழமையான அநுமானோடு சொல்லத்தக்க ஒப்புமையுடையவனும், ஆடல் வலி உடை ஆண்மையான் - போர்வலிமையோடுகூடிய பராக்கிரமசாலியும் ஆகிய என்மக்களில் ஒருவன், இருள் இடையாமசரிதனை - இருளையுடைய நள்ளிரவிற் சஞ்சரிப்பவனான [இராக்கதனாகிய]அந்தப்பகனை, மோதி - தாக்கி, மூளை உக - மூளை சிதறும்படி, உடல் கீளும் - உடம்பைப்பிளந்திடுவான். |