தாம். இருகுலம் - தாய் தந்தையர்குலம் என்றும் கொள்ளலாம். ஒரு குலத்தின்உம் என்பதற்கு - சிற்றரசர்தோன்றிய எந்த ஒரு குலத்திலும் என்று உரைத்தாருமுளர். (40) வேறு. 33.- கவிக்கூற்று: குருகுலத்தில் சந்தனு என்று ஒருவன் தோன்றினான்: இனி, அவன் செயலைக் கூறுவேனெனல். அந்தநன் மரபினி லமுத வெண்டிரைச் சிந்துவின் மிசைவரு திங்க ளாமெனச் சந்தனு வெனும்பெயர்த் தரணி காவலன் வந்தன னவன்செயல் வகுத்துக் கூறுவாம். |
(இ-ள்.) அந்த நல் மரபினில்- சிறந்த அந்தக் குருவமிசத்தில், அமுதம் - பால்மயமானதாய், வெள் திரை சிந்துவின் மிசை - வெண்மையான அலைகளையுடையபாற்கடலின்மீது, வரு - தோன்றுகின்ற, திங்கள் ஆம் என - சந்திரனொப்பாவானென்று சொல்லும்படி, சந்தனு எனும் பெயர் தரணிகாவலன் - சந்தனுஎன்று பேர் கொண்டபூமியைக் காப்பவனான அரசன், வந்தனன் - தோன்றினான்; அவன் செயல் -அவனுடைய செய்தியை, வகுத்து கூறுவாம்- விவரித்துச் சொல்லுவோம்; (எ -று.) ப்ரதீபனென்ற அரசன் சிபிவமிசத்தில் தோன்றிய சுகந்தீ யென்பவளை மணக்க,அவர்களுக்குத் தேவாபி சந்தனு பாஹ்லிகன் என்று மூன்றுகுமாரர் தோன்றினர்.முதல்வன் இளையனாயிருக்கும்போதே கானகஞ் சென்றிட்டான். அதனால், இந்தச்சந்தனு குருகுலத்துப்பிரதானனானான்: இவன் வயதுமுதிர்ந்த எவரெவரைக்கையால்தொடுகின்றானோ அவர் யாவரும் யௌவன மடைபவரும்,சுகமனுபவிப்பவருமாயினர்: இதனால் இவனுக்குச் சந்தனு எனப்பெயரென்று முதனூல்கூறும். குருகுலத்திற்குப் பாற்கடலும், அக்குலத்திலே தோன்றிய சந்தனுவுக்கு ஆங்குத்தோன்றிய சந்திரனும் உவமை. மகிழ்ந்து கேண்மினோ என்றும் பாடம். இதுமுதல் நாற்பத்தாறு கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று மாச்சீரும்,மற்றையவை விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள். (41) 34.- வேட்டையாடி யிளைப்புற்ற சந்தனு கங்கைக்கரை சேர்தல். வேனிலானிவனென விளங்குகாலையிற் கானகவேட்டைபோ யிளைத்தகாவலன் ஆனமென்குளிர்புன லாசையான்மணித் தூநிறக்கங்கையாள் சூழலெய்தினான். |
(இ -ள்.) 'இவன்-, வேனிலான்- மன்மதனேயாவன்,' என - என்று (கண்டவர்) நினைக்கும்படி, விளங்கு காலையில் - (மிக்க அழகோடு) விளக்கமுற்றிருந்த காலத்தில்,கானகம் வேட்டை போய் - காட்டிற் செய்யப்படும் வேட்டைக்குச்சென்று, இளைத்த -சோர்வடைந்த, காவலன் - அந்தச் சந்தனுராசன்,- குளிர். |