கங்குற்போதுக்குப் புலர்தல்-விடிதல். பனிக்குப் புலர்தல்- அழிதல். மனத்துக்கு மலர்ச்சி-உணர்வுறுதல், கண்ணுக்கு மலர்ச்சி - விழிப்பு. திசைகளுக்கும் பாருக்கும் வயங்குதல்-வெளிச்சம்பெறுதல். தடாகம் அலர்தல்-சூரியனுதித்தவளவிலே தாமரைமலரப்பெறுதலும், நீர்தெளிவும், சோலையலர்தல் - ஒடுக்கமொழிதல். சக்கரவாகப்பறவை இரவில் ஆணும் பெண்ணும் பிரிந்திருந்து பகலிற் கூடும் இயல்பின தாதலால், அத்தன்மையை 'கலந்தன குருகும் பேடும்' என்றார். உதயகாலத்தில் மங்களகரமாக முரஜ சங்கங்களை முழக்குதல், இயல்பு. இரண்டிரண்டுபொருளின் வினைகளுக்கு உடனிகழ்ச்சி கூறியது- உடனவிற்சியணி. இதனோடு தன்மைநவிற்சியணி கலந்துவந்தது. இதுமுதல் குலாலனது இருக்கையைச் சேர்தற்குமுன் வரையிலுள்ள வருணனைகள் பாலபாரதத்தில் இல்லை. (485) 11.-உதயகாலத்துத் தென்றல் இனிமையாக வீசுதல். குன்றமுங்கொடியகானுங் கூரிருட்கங்குனீங்கி நன்றுநன்றுதவவந்தீர் நடந்துநீரிளைத்தீர்போலும் என்றுகொண்டுவகையோடு மின்மலர்க்கழுநீர்வாச மன்றலந்தென்றல்வீசி வழிவிடாய்தணித்ததன்றே. | (இ-ள்.) மன்றல் அம் தென்றல் - நறுமணத்தையுடைய இனிய தென்றற்காற்றானது, - (பாண்டவர்களைநோக்கி), 'கூர் இருள் கங்குல்- மிக்கஇருளையுடைய இரவிலே, குன்றம்உம் கொடிய கான்உம் நீங்கி-மலைகளையும் கொடுமையையுடைய காடுகளையுங் கடந்து, உதவ வந்தீர்-(எனதுநண்பனாகிய அக்கினியின் மகளான திரௌபதியை மணம்புரிந்து). உதவுதற்கு வந்தீர்கள்; நன்று நன்று-(உங்கள்வரவு) மிகவும்நல்லது; நீர் நடந்து இளைத்தீர்போலும் - நீங்கள் வழிநடந்துவருவதால் இளைப்படைந்தீர்போலும்', என்று கொண்டு - என்று சொல்லிக் கொண்டு, உவகையோடும் - மகிழ்ச்சியுடனே, இன் மலர் கழுநீர் வாசம் வீசி-இனிய செங்கழுநீர்மலர்களின் வாசனையை மேல்வீசி, வழிவிடாய் தணித்தது- (அவர்களுடையவழிநடைவருத்தத்தைத் தணியச்செய்தது; காலையில் இயல்பாக மந்தகதியோடு இனிது வீசுகிற தென்றலை, பாண்டவர் வழிவிடாயைத் தணித்தற்கென்றே வீசுவதாக ஒருபயனைக்கற்பித்துக்கூறியது - பயன்தற்குறிப்பேற்றவணி. இங்ஙன்இனியதென்றல்வீசியது. பாண்டவர்க்குச் சுபசூசகம்.நன்று நன்று-அடுக்கு, மகிழ்ச்சிபற்றியது. அன்று, ஏ - ஈற்றசைகள். (486) 12,-ஐந்துகவிகள்-பாண்டவர்க்குநிகழும் நன்னிமித்தங் கூறும். வெறிபடுமுளரிமொக்குள் விரிபதனோக்கிச்சுற்றும் பொறிவரிவண்டினீட்டம் புறத்திருந்திரங்கவண்டொன் றிறகரால்வீசியுள்புக் கின்மதுநுகர்தல்கண்டு நெறியினன்னிமித்தமாக நெஞ்சுறநினைத்துசென்றார். |
(இ-ள்.) வெறி படு - தேன்பொருந்திய, முளரி மொக்குள் - தாமரையரும்பு, விரிபதன் - மலருஞ் சமயத்தை, நோக்கி - எதிர் |