பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்27

ஆன மெல் புனல் ஆசையால் - குளிர்ச்சி பொருந்திய மெல்லிய நீரில்
விருப்பத்தினால், மணி தூ நிறம் கங்கையாள் - அழகிய வெண்மைநிறம்
பொருந்தியகங்காநதியின், சூழல் - கரையிலே, எய்தினான் - போய்ச் சேர்ந்தான்;
(எ - று.)

     வேட்டையாடி யிளைத்ததனால், தண்ணீரில் விருப்புக் கொண்ட
சந்தனுராசன்கங்கைக்கரையை யடைந்தா னென்க. காமவின்பத்தை மிகுவித்தற்கு
ஏற்றவேனிற்காலத்திற்கு உரியவ னாதலால், மன்மதன் 'வேனிலான்'
எனப்படுவன்.மணி -முத்துமாம். ஆனமெய் குளிர் புனல் என்றும் பாடம்.  (42)

35.- அப்போது கங்காநதி அங்குப் பெண்வடிவு கொண்டிருத்தல்.

மருவருங்குழல்விழி வதனம்வார்குழை
இருதனந்தோள்கழுத் திதழொடின்னகை
புருவம்வண்புறவடி பொற்பப்பாவையர்
உருவுகொண்டனடன துடைமைதோன்றவே.

     (இ - ள்.) (அப்போது கங்காநதி),- மரு வரும் குழல்- நறுமணம்
வெளிவருகின்றகூந்தலும், விழி - கண்களும், வதனம் - முகமும், வார் குழை -
நீண்டகாதும், இருதனம் - இரண்டுமுலைகளும், (இரு) தோள்- (இரண்டு)
தோள்களும், கழுத்து -கழுத்தும், இதழொடு - வாயிதழும், இன் நகை - இனிய
பற்களும், புருவம் -புருவங்களும், வள் புறம் அடி - வளப்பமுள்ள புறவடிகளும்,
(ஆகியஇவ்வுறுப்புக்கள்), பொற்ப - அழகுபெற்றிருக்க, தனது உடைமை
தோன்ற - தான்பெண்வடிவ முடையவளாயிருப்பது தெரியும்படி, பாவையர்
உருவு - பெண்களின்வடிவத்தை, கொண்டனள்- ; (எ-று.)

     குழையென்பது - ஒருவகைக்காதணியையே யன்றி, காது என்னும்
பொருளைக்காட்டுவதை "மணித்தோடுங் குழையி லாட" என்ற இடத்துங் காண்க:
குழைந்திருப்பதுகுழை எனக் காதுக்குக் காரணவிடுகுறி.                (43)

36.- கங்கையின் பெண்தெய்வம் தோன்றியதைச் சந்தனு 
காணுதல்.

கங்கையின்வெள்ளமேற் கருத்துமாறியிம்
மங்கைதன்பேரொளி வனப்பின்வெள்ளமே
தங்கியசோகமுந் தாபமுங்கெடப்
பங்கயவிழிகளாற் பருகினானரோ.

     (இ - ள்.) கங்கையின் வெள்ளம் மேல் - கங்காநதியின் வெள்ளத்தின் மீது
(சென்ற), கருத்து- (தன்) மனம், மாறி - மாறப்பெற்று, இ மங்கை தன் - இந்தக்
கங்காநதியின் பெண்தெய்வத்தின், பேர் ஒளி வனப்பின் வெள்ளம்ஏ - மிக்க
ஒளியைக்கொண்டுள்ள அழகின் பெருக்கையே, தங்கிய சோகமும் தாபமும் கெட-
(தன்) மனத்துப் பொருந்திய சோகதாபங்கள் கெட்டொழிய, பங்கயம் விழிகளால்-
தாமரை மலர்போன்ற கண்களினால், (சந்தனு), பருகினான்-; (எ -று.)

     நீர் பருகவேணுமென்ற எண்ணத்தோடு வந்த சந்தனுவின் கருத்து
அங்குத்தோன்றிய கங்காநதியின் பெண் தெய்வத்தின் அழகுவெள்ளத்திற்
செல்லவே,அவனுடைய சோகதாபங்கள் அகன்றனவென்க.               (44)