கந்தனுமுவமையாற்றாக் காவலர்காமத்தீயில் இந்தனமிடுவதேய்ப்ப வேத்தவையேற்றினாரே. |
(இ - ள்.) தாயின்உம் பரிவு கூர்ந்தோர்- (அவளிடத்துப்) பெற்றதாயினும் அன்புமிக்கவர்களான செவிலியர்,-சந்து அணிமுலையினாளை - சந்தனக்குழம்பையணிந்த தனங்களையுடைய அத்திரௌபதியை,-குமரர் யார்உம் வந்தனர் வருக' என மகிழ்ந்து போற்றி - 'இராசகுமாரரெல்லோரும் (சுயம்வரமண்டபத்திற்கு) வந்துசேர்ந்தார்கள்: - (நீயும்) வருவாயாக' என்று மகிழ்ச்சியோடு உபசாரமாகக்கூறி,-கந்தன்உம் உவமை ஆற்றா காவலர் காமம் தீயில் இந்தனம் இடுவது ஏய்ப்ப - முருகக்கடவுளும் ஒப்பாகாத (மிக்க அழகையும் ஆற்றலையுமுடைய) அரசர்களுடையகாமாக்கினியில் விறகிடுதலைப்போல, வேந்து அவை ஏற்றினார் - (அவளை) இராசசபையில் அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்; (எ-று.) பாஞ்சாலியின் அழகுமிகுதியைக் கேள்வியுற்றதனாலேயே மிக்க காதல் கொண்டுள்ளஅரசர்கள் அவ்வழகை நேரே கண்டு பின்னும் மிக்கமோகத்தை யடையும்படிசெவிலியர் அவர்களெதிரிற் கொணர்ந்தன ரென்பார், 'காவலர்காமத்தீயில் இந்தனமிடுவதேய்ப்ப வேத்தவை யேற்றினார் என்றார். (502) 28.-திரௌபதியைக் கண்டவளவிலே அரசர்கள் மோகித்தல். வெங்கழற்படைக்கைவேந்தர் விழிகளால்விளங்குமேனிப் பொங்கழற்பிறந்தபாவை பொற்பினைப்பொலியநோக்கிப் பைங்கழைத்தனுவோன்செங்கைப் பகழியாற்பாவமெய்தி அங்கழற்பட்டநெய்போ லனைவருமுருகினாரே. |
(இ - ள்.) வெம் கழல்-(பகைவர்க்கு) அச்சந்தருகிற வீரக்கழலையும், படை கை - ஆயுதங்களையேந்திய கையையுமுடைய, வேந்தர் அனைவர்உம் - அரசர்களெல்லோரும்,-விளங்கும் மேனி- ஒளி வீசிவிளங்குகிற வடிவத்தையுடைய, பொங்கு அழல் பிறந்தபாவை-சொலிக்கிற யாகாக்கினியில் தோன்றிய சித்திதரப்பதுமைபோன்ற திரௌபதியினது, பொற்பினை - அழகை, விழிகளால் பொலிய நோக்கி-(தங்கள்) கண்களால் நன்றாகப் பார்த்து, அங்கு - அப்பொழுது- பைங் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி - பசிய கரும்பை வில்லாகவுடைய மன்மதனது சிவந்த கையினாலெய்யப்பட்ட அம்புகளினால் நிலைவேறுபாட்டை யடைந்து, அழல் பட்ட நெய்போல்-தீப்பட்டநெய்போல (நேகிழ்ந்து), உருகினார்-;(எ-று.) பாவம்-பாவம்: வடசொல்; அதாவது மெய்ப்பாட்டுக்குறிப்பு; இங்கு சிந்தனை, அசைவின்றி நிற்றல், தோள்மெலிதல், ஒடுங்கல், நெஞ்சழிதல், மயிர்சிலிர்த்தல், உடல்வியர்த்தல், நிறம்வேறுபடுதல், நெடுமூச்செறிதல், மொழிபலபிதற்றல், கலக்கம் முதலிய காமவிகாரத்தாலாகுஞ் செய்கைகள். மன்மதனுக்குக் கரும்பு வில்லென்றும், தாமரை முதலிய மலர்கள் அம்புகளென்றும் கூறுப. வேந்தர்களுடைய வெம்மையைக் கழலின்மெலேற்றி 'வெங்கழல்' என்றார்; இது; ஒருவகை உபசாரவழக்கு, அழலிற்பிறந்தபாவை |