நிற்றற்குஉரிய நிலை: அது-பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு. இவற்றுள், ஒருகால்நின்று ஒருகால்முடக்கல்-பைசாசநிலை: இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் - மண்டலநிலை; வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல்- ஆலீடநிலை; வலக்கால்முந்துற்று இடக்கால்மண்டலித்தல்-பிரதியாலீடநிலை (528) 54.- அந்தணவடிவங்கொண்டிருந்த அருச்சுனன் எழுந்துபேசலுறல். அரவநெடுங்கொடியுயர்த்தோன்முதலாவுள்ள வனைவருமங் கொருதனுவுக்காற்றாராகி, உரவுமெலிந்தெழின்மாழ்கிச்செயல்வேறின்றியுள்ளமழிந்திருந்த தற்பினுருமேறென்னக். கரவுடனந்தணர்நாப்பணிருந்தகொற்றக்கருமுகில்வாகனன் புதல்வன் கரியமேனி, இரவிகுலச்சிறுவனைப் போலெழுந்துமன்றலிளங்கொடிதம் முனைநோக்கியியம்பினானே. |
(இ - ள்.) அரவம் நெடு கொடி உயர்த்தோன் முதல் ஆ உள்ள அனைவர்உம் - பாம்பின்வடிவமெழுதிய நீண்டகொடியை உயரநாட்டிய துரியோதனன் முதலாக அங்குஉள்ள அரசர்கள் எல்லோரும், அங்கு-அவ்வாறு, ஒரு தனுவுக்கு ஆற்றார் ஆகி - ஒப்பற்ற அவ்வில்லில் திறங்காட்டமாட்டாதவர்களாய், உரவு மெலிந்து - வலிமை குன்றி, எழில் மாழ்கி-மனவெழுச்சி சோர்ந்து, செயல் வேறு இன்றி - ஒன்றுஞ்செய்யமாட்டாமல், உள்ளம் அழிந்து இருந்ததன் பின்-மனமழிந்து இருந்தபின்பு,- அந்தணர் நாப்பண்- பிராமணர்களுக்கு நடுவிலே, கரவுடன் இருந்த - மறைந்தவடிவத்தோடு வீற்றிருந்த, கொற்றம் - வெற்றியையுடைய, கரு முகில் வாகனன் புதல்வன் - கருநிறமுள்ள மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனது குமாரனாகிய அருச்சுனன்,- இரவி குலம் கரிய மேனி சிறுவனை போல் எழுந்து - சூரியகுலத்தில் திருவவதரித்த கரிய திருமேனியையுடைய இராசகுமாரனான இராமபிரான் போலஎழுந்து நின்று, மன்றல் இள கொடி தம்முனை நோக்கி - விவாகத்துக்கு உரிய இளமையான பூங்கொடிபோன்ற திரௌபதியினது தமையனான திட்டத்துய்மனைப் பார்த்து, உரும் ஏறு என்ன இயம்பினான் - சிறந்த இடிபோலக் கம்பீராமான உரத்தகுரலோடு ஒன்று சொல்வானானான்; (எ-று.)-அவ்வார்த்தையை, அடுத்த கவியிற் காண்க. மன்றல் என்பதற்கு - நறுமணமென்றும் பொருள்கொள்ளலாம்; அது - உபமானமாகியபூங்கொடிக்கும், உபமேயமாகிய திரௌபதிக்கும் ஏற்கும்: திரௌபதி உத்தமஸ்திரீசாதிலக்ஷணமான நறுமணத்தைத்தன்உடம்பில் மிகுதியாகவுடையளாயி ருந்தனளென்று பலவிடத்தும் முதனூல் கூறும். (529) 55.-அருச்சுனன் திட்டத்துய்மனிடம்அநுமதிபெற்று வில்லையெடுத்தல். மன்னமரபிற்பிறந்ததிருதோள் வலியாலிந்தமண்ணாளுமவர்க் கன்றிமறைநூல்வாணர், தொன்மரபிற்பிறந்தவருமிலக்குவீழத்தாற் சூட்டுமோ தொடையலிளத் தோகையென்னத், தன்மரபுக்கணிதிலகமானவீரன்றகவன்றோமன்றலுக்குத்தாழ்வோ வென்றான், வின்மரபிற்சிறந்தநெடுவில்லையீசன்மேருகிரியெடுத்ததென விரைவிற் கொண்டான். |
|