உடம்புநீங்குங்காலத்து அடுத்த வினையும், அதுகாட்டுகங் கதி நிமித்தங்களும், அக்கதியினிடத்து அவாவும், உயிரினிடத்துமுறையேவந்து உதிக்க, அறிவை மோகம் மறைக்க, அவ்வுயிரை அவ்வவா அக்கதியிற் கொண்டுசெலுத்து மாதலால், 'சிந்தித்த வண்ணம் அந்தப்பதியையடைந்தாள்' என்றார். மௌத்கல்யன் இல்லறவாழ்க்கைக்கு அஞ்சித் துறவறஞ்சேர்ந்தன னென்க. (554) | 80. | அன்னோனகலவவன்மேலவ ளாசைவிஞ்சி என்னோபுரிவதினியென்றலு மேந்தல்கூற்றால் தன்னோர்வடிவினொருகூறொரு தையலாளும் முன்னோனைநோக்கித்தவஞ்செய்தனண் மூரல்வாயாள். |
(இ-ள்,) அன்னோன் அகல-(தன்கருத்துக்கு இணங்காமல்) அந்த மௌத்கல்யன் விலகிச்செல்லுமளவில்,- அவள் - அந்த இந்திரசேனை, அவன்மேல் ஆசைவிஞ்சி-அவனிடம் விருப்பம் மிக்கு, இனிபுரிவது என்னோ என்றலும்,- (உன்னைப்பிரிந்து) இனி (நான்) செய்வது யாதோ?' என்று வினாவிய வளவிலே,- ஏந்தல் கூற்றால், அக்கணவன்சொன்ன வார்த்தையின்படி, மூரல் வாயாள்- புன்சிரிப்புக்கொண்டவாயையுடைய அவள், தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் முன்னோனை நோக்கி-தனது ஒருவடிவத்திலே ஒருபாதியில் ஒருபெண்ணை (அம்பிகையை)க்கொண்டுள்ள கடவுளான சிவபிரானைக் குறித்து, தவஞ்செய்தனன்-; (எ- று.) தவத்திற்கு இடையூறாக இந்திரசேனை தன்னைமணந்து கொள்ளுமாறு வேண்டவே, அன்னோன் 'நீ என்தவத்திற்கு இடையூறுபுரிவதனால் துருபதபுத்திரியாய்ப் பிறக்க, உன்னை ஐவர் மணப்பர்' என்று சபித்தானாக, பிறகு சிவனை நோக்கித்தவம்புரிந்தாளென்று வியாசபாரதமும், தவம்புரியுமாறு மௌத்கல்யன் கூறியதாகப் பாலபாரதமும் கூறும். மிஞ்சி என்றும் பாடம். (555) | 81. | ஐந்தானனத்தோனருள்செய்ய வழகின்மிக்காள் ஐந்தானசொல்லால்கணவற்றரு கையவென்றாள் ஐந்தானசொல்லானளித்தான்மற்றவனுமுன்னாள் ஐந்தானபோகமிவளெய்திய வாறறிந்தே. |
(இ-ள்.) ஐந்து ஆனனத்தோன்-ஐந்துமுகங்களையுடையவனான சிவபிரான், அருள் செய்ய-கருணைசெய்ய (பிரசன்னனாய்ப் பிரதியக்ஷமாக), அழகில் மிக்காள் - அழகிற் சிறந்தவளான இந்திரசேனை, ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் - 'சுவாமி! (எனக்குக்) கணவனைத் தருவாயாக' என்று ஐந்துமுறை சொல்லி வேண்டினாள்; அவன்உம்-பஞ்சாநந மூர்த்தியான அச்சிவபிரானும், இவள் முன் நாள் ஐந்து ஆன போகம் எய்திய ஆறு அறிந்து- இவள் முற்பிறப்பில் (தன் புருஷனது) ஐந்துவடிவங்களோடுகூடி இன்பம் அனுபவித்த தன்மையைத் திருவுள்ளத்திற் கொண்டு, ஐந்து ஆன சொல்லான் அளித்தான் - 'அங்ஙனமே ஆகுக' என்று ஐந்துமுறைகூறி அருள்செய்தான்; (எ-று.)-மற்று - அசை. இவள் தவத்துக்குஉகந்த அப்பிரான் கட்புலனாக, இவள் 'எனக்குஏற்ற கணவனைத் தருக' என்று ஆதரத்தால் ஐந்துதரம் |