பகுக்கப்படும். ஜ்ஞாதா என்னும் வடசொல்லின் திரிபாகிய ஞாதமென்பது- இயல்பில் உணர்வுடையதென்று பொருள்படுதலால், அது, அத்தன்மையதாகிய ஆத்துமாவுக்கு ஒருகாரணக்குறியாயிற்று; சித், சேதனம் என்ற ஆன்மாக்களின் பெயர்களும் இப்பொருள்படுவனவே.உலகம்.... அழித்து-பிரமரூபியாய்ப்படைத்தலையும் தனானநிலையில் நின்று காத்தலையும் ருத்திரரூபியாய் அழித்தலையுஞ்செய்து என்க.அகிலமும் நிறைவுற்று-எள்ளினுள் எண்ணெய்போல அந்தர்யாமியாய் எங்கும்வியாபித்துப் பரவிநின்று: 'விஷ்ணு' என்ற திருநாமத்தின் பொருள், சருவவியாபியென்பதாதல் காண்க. எல்லாப்பொருள்களும்உதித்தற்குமூலமாய் அவை தோன்றுதற்குமுன்நின்றவனும், அவை யனைத்தும் லயித்தற்கு இடமாய் அவையழிந்தபின் நிற்பவனும்,இடையில் ஒரு நிகராக நிற்கின்றவனும் தானேயாதலால், 'ஆதியு நடுவு முடிவுமாய்நின்ற ஆதியான்' எனப்பட்டான். 'ஆழியான் என்றும் பாடம். இனி-புலன் என்பதற்கு - மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளென்றும், 'புலன்களின்பயன்' என்பதற்கு - அந்தப் பஞ்சேந்திரியங்களுக்குஉரியபஞ்சவிஷயங்க ளென்றும்உரைத்தலும்ஒன்று. புலன்களைப் படைத்தற்குப் பயன்அவற்றை எம்பெருமான்பக்கல் உபயோகித்தலே யாதலால், 'புலன்களின்பயனுமாய்' என்றதாகவும் கொள்ளலாம். இதுமுதல் 27-கவிகள்-பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களு மாகிவந்த ஏழுசீராசிரியவிருத்தங்கள். (585) 2.- திருதராட்டிரன் தருமனுக்கு முடிசூட்ட நிச்சயித்தல். அத்தினபுரியிலையிருபதின்மரைவரென்றிரண்டறத்தம்மில் ஒத்தனர்மருவத்தெவ்வர்மெய்வெருவ வுளமகிழ்நாளின்மற்றொருநாள் மைத்துனன்முதலாந்தமரையுந்தக்க மந்திரத்தவரையுங்கூட்டி இத்தினமுயர்ந்ததினமெனமகுடஞ் சூட்டுதற்கெண்ணினானிகலோன். |
(இ-ள்.) அத்தினபுரியில் - அஸ்தினபுரத்திலே, ஐ இரு பதின்மர் ஐவர் என்றஇரண்டு அற - நூற்றுவரும் ஐவரும் என்ற இரண்டு பகுப்பு இல்லாமல் [அந்தநூற்றைவரும்], தம்மில் ஒத்தனர் மருவ - தங்களுள் ஒற்றுமையுடையராய்க் கூடிவாழ,தெவ்வர் மெய் வெருவ - (அதனால்) பகைவர்கள் உடம்புநடுங்க, உளம்மகிழ் நாளில்- (அனைவரும்) மனம்மகிழ்ந்திருந்த நாள்களில், ஒரு நாள்- ஒருதினத்தில்,-இகலோன்- வலிமையையுடையனான திருதராட்டிரன், - மைந்துனன் முதல் ஆம்தமரைஉம் - (தன்) மைத்துனனாகிய சகுனி முதலான பந்துக்களையும், தக்கமந்திரத்தவரைஉம்-தகுதியையுடைய மந்திரிகளையும், கூட்டி- ஒருங்கு வரவழைத்துச்சபை சேர்த்து (ஆலோசித்து), இ தினம்உயர்ந்த தினம்எனமகுடம்சூட்டுதற்குஎண்ணினான் - இந்தத்தினமே உத்தமமான தினமென்று குறிப்பிட்டு (அன்றைக்கே)தருமனுக்கு) முடிசூட்ட நிச்சயித்தான்; மந்திரிகளுக்குத் தகுதி -அறிவு, முயற்சி, இராசகாரியங்களில் தேர்ச்சி, அரசனுக்கு இடித்திடித்துக் கட்டுரை கூறும் வன்மை, பழுதெண்ணாமை, தவறாது ஆலோசிக்குந்திறம் முதலியன. (586) |