உதித்து அழகிய மலையின்மேல் மிக்க நிலாப்பெருக்கை அழகோடு வழியும்படி வார்த்தாற்போல, சொரிந்தனர் - சொரிந்தார்கள்; தௌமியன் முதலியோர் பொற்குடங்களினின்று புண்ணிய தீர்த்தங்களை அபிஷேகஞ்செய்யுமாறு ஊற்றுவது, மலையிலிருந்து எழுகின்ற உதயசந்திரன் நிலாவைப்பொழிதலையொக்குமென்க: சந்திரமண்டலம் வெண்ணிறமுடையதாயினும் உதிக்கும்போது செந்நிறமுடையதுபோலத் தோன்றுதல்இயல்பு. இனி, சுத்தனான சந்திரன்-பரிசுத்தரான முனிவர்களுக்கும், நிலாப்பெருக்கு - புண்ணிய தீர்த்தப்பெருக்குக்கும், மலை-தருமனுக்கும் உவமை யென்பாரும் உளர்; தற்குறிப்பேற்றவணி. பீடமமைத்தற்கு அத்திப்பலகை சிறத்தலால், அதனை யெடுத்துக்கூறினார். "ஒளதும்பரம்தத்ர நரேந்த்ரஸூநௌ-ப்ரஸ்த மாதஸ்துஷி பத்ரபீடம்" என்றது, பாலபாரதம். (588) 5. | உதயமால்வரையினுதயராகத்தோ டுதித்ததேருதயனென் றுரைப்பத், துதையளிததைந்தமாலையான்சென்னிச் சோதிமாமகுட முஞ்சூட்டிப், பதயுகமரசர்முடிகளாற்சிவப்பப் பகர்விதிமுடித்தபின் பலரும், இதயமொத்தமிர்தமொழியவரடைவே யிருகைநீரா சனமெடுத்தார். |
(இ-ள்.) 'மால் உதயம் வரையின்-பெரிய உதயகிரியின்மீது, ' உதயம் ராகத்தோடும்உதித்த - உதிக்குங்காலத்து (மிக்கவிளங்குகிற) செந்நிறத்தோடு தோன்றிய, தேர் உதயன்-(ஒற்றைத் தனியாழித்) தேரையுடைய சூரியன், ' என்று உரைப்ப-என்று உவமை சொல்லும்படி, துதை அளி ததைந்த மாலையான் சென்னி- நெருங்கிய வண்டுகள் மொய்க்கிற மாலையையுடையனான தருமபுத்திரனதுசிரசில், சோதி மா மகுடம்உம் சூட்டி-ஒளியையுடைய சிறந்த கிரீடத்தையும் கவித்து, பதம் யுகம் அரசர் முடிகளால் சிவப்ப - (அவனுடைய) இரண்டுபாதங்களும் (அவற்றை வணங்குகிற) அரசர்களுடைய முடிகள் படுதலாற் சிவக்க, பலர் விதி முடித்த பின் - (நூல்களில்) விதிக்கப்பட்ட பட்டாபிஷேகச்சடங்கை நிறைவேற்றிய பின்பு, அமிர்தம் மொழியவர் பலர்உம் - அமிருதம்போல் இனிய சொற்களையுடைய பல மகளிர், இதயம் ஒத்து - (தம்மில்) மனங்கலந்து [அன்புடனும் மகிழ்ச்சியுடனும்), அடைவே- முறையே, இருகை - இரண்டுகைகளாலும், நீராசனம் - மங்களவாலத்தியை, எடுத்தார்-; (எ-று.) உதயகிரி-தருமபுத்திரனுக்கும், அதன் சிகரம்-அவனது சிரசுக்கும். உதயசூரியமண்டலம் - கிரீடத்துக்கும் ஒப்பு எனக்காண்க. மகுடஞ்சூட்டுதல், விதிமுடித்தல் இவற்றுக்கு எழுவாய் - கீழ்க்கவியில் வந்த 'வியாதன், தௌமியன் முதலோர்' என்பது. மகுடமுஞ்சூட்டி, உம் - இறந்தது தழுவியது. (589) 6. | ஒற்றையோடிரட்டைவலம்புரிமிழற்ற வொருகுடைமதியெ னநிழற்றக், கொற்றவர்முன்பின்போதரமடவார் குழுப்பொரிசிந்தி வாழ்த்தெடுப்ப, இற்றைநாளெவரும்வாய்த்தவாவென்னவேழுயரிராச குஞ்சரமேல், மற்றைநால்வருந்தற்சூழ்வரத்தருமன் மைந்தன்மாநகர் வலம்வந்தான். |
|