யுடைய சங்குகள் முத்துக்களைச் சொரியப்பெற்ற நீர்நிறைந்த அகழியையுடைய மதில் சூழ்ந்த அந்த இந்திரப்பிரத்தநகரத்திற்குடிபுகுந்தார்கள்; (எ- று.) பாண்டவரைவரும் ஒருவர்பின் ஒருவராய்த் துருபதன்மகளை மணந்ததுமன்றி மண்மகளையும் மணப்பார்போல அந்நகரினுள் முறையே பிரவேசித்தன ரென்பதாம்; தற்குறிப்பேற்றவணி. மதுபம்-தேனைக்குடிப்பதுஎன வண்டுக்குக் காரணக்குறி. கடவுளெரி-அக்கினிதேவன். மயில்-உவமையாகுபெயர். அகழப்படுவது அகழியெனக் காரணக்குறி. (611) வேறு. 28.- பாண்டவர்க்கு விசுவகருமன் அந்நகரத்தைக் காட்டுதல். உரங்குடி புகுந்த திண்டோ ளுதிட்டிரன் முதலி யோரப் புரங்குடி புகுந்து தங்கள் பொன்னெயிற் கோயி லெய்தத் திரங்குடி புகுந்த கல்விச் சிற்பவித் தகன்ற னெஞ்சால் கரங்குடி புகாமற் செய்த கடிநகர் காட்ட லுற்றான். |
(இ-ள்.) உரம் குடி புகுந்த - வலிமை (தனக்கு) இடமாகக் கொண்டு தங்கப்பெற்ற, திண் தோள் - வலிய தோள்களையுடைய, உதிட்டிரன் முதலியோர் -தருமபுத்திரன் முதலானவர்கள், அ புரம் குடிபுகுந்து - அந்நகரத்தில் புதிதாகச்சேர்ந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த - பொன்மயமான மதில்சூழ்ந்த தங்கட்கு உரிய அரண்மனையை அடைய,- திரம் குடி புகுந்த சிற்பம் கல்விவித்தகன் - உறுதிக்கு இடமான சிற்பத்தைப்பற்றிய சாஸ்திரத்தில் தேர்ச்சியுடையவனான விசுவகருமன், கரம் குடி புகாமல் தன் நெஞ்சால் செய்த கடி நகர் காட்டல் உற்றான்-கையினால் தொடுதலுமில்லாமல் தனது மனத்தில் நினைத்தமாத்திரத்தினாற் செய்த புதிய அந்நகரத்தை (அவர்கட்குக்) காட்டுபவனானான்; பட்டணத்தின்வளத்தைக் காண விரும்பி அரண்மனையின் மேலேறியிருந்த தருமனாதியர்க்கு விசுவகருமன் அந்நகரத்தினழகைக் காட்டலுற்றன னென்க. திரங்குடிபுகுந்த கல்வி-நிலைபெற்ற கல்வியுமாம். இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும்இருபதுகவிகள்-கீழ்ச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். 29.- பாண்டவர்கள் கோபுரத்தின்மேலிருந்து அந்நகர்ச் சிறப்பைக்காணுதல். நாபுரப்பதற்கேயேற்ற நவிரறுவாய்மைவேந்தர் கோபுரத்தும்பர்மஞ்ச கோடியினின்றுதங்கள் மாபுரத்துள்ளவெல்லை வளமனையாவுமாதர் நூபுரத்தரவவீதி யகலமுநோக்கினாரே. |
(இ-ள்.) நா புரப்பதற்குஏ ஏற்ற-நாவைப் பாதுகாப்பதற்கே இயைந்ததான, நவிர்அறு வாய்மை - குற்றமில்லாத சத்தியத்தையுடைய, வேந்தர் - அந்தப்பாண்டவராசர்கள்,- கோபுரத்து உம்பர் மஞ்சம் கோடியில் நின்று- கோபுரத்தின்மீதுள்ள மேனிலையின்முகப்பில் நின்றுகொண்டு,- தங்கள் மா புரத்து உள்ள எல்லை வளம் |