எடுத்து மோத -வேகத்தோடு உயர்த்தியடித்தலால்,-உடுக்கள் உம் நாள்உம் கோள்உம்-மிகப்பலவாகிய தாரகைகளும் (அசுவினி முதலிய இருபத்தேழு) நட்சத்திரங்களும் (சூரியன் முதலிய ஒன்பது) கிரகங்களும், இந்த நகர் வழி போக-இந்த நகரத்தின்வழியே செல்லுதற்கு, உள்ளம்உம் உடல்உம் சேர நடுக்கு உறுகின்ற-(அச்சத்தால்) மனமும் உடம்பும் ஒருசேர நடுக்கமடைகின்றனவாம்; என்பார்-; (எ- று.) இந்நகரத்தின் உபரிகைகளின் மீது நாட்டிய கொடிகளின் மிக்க உயர்வை உணர்த்துதற்கு, 'அக்கொடிகளின் சீலைகளைக் காற்று விசையோடு வலிய அடித்து அசைத்தலால் அவை தம் மீது தாக்கி வருத்து மென்ற கருத்தால் சகலகிரகநட்சத்திர தாரகைகளும் இந்நகரத்தின் மேலாகச்செல்லுதற்கு அஞ்சும்' என்றார்: உயர்வுநவிற்சியணி. நாள்-நாளையுணர்த்துகிற நட்சத்திரத்திற்கு ஆகுபெயர். கோள் -(காலத்தை அளந்து) கொள்வது: கிரகம். (618) 35. | துதையளிமுரலும்வாசச் சோலையின்பொங்கர்தோறும் விதமுறவெழுந்துகாள மேகங்கள்படிதனோக்கிக் கதிர்மணியகழிமாமே கலையுடைநகரமாதின் புகைநறுமலர்மென்கூந்தல் போலுமாகாண்மினென்பார். |
(இ-ள்.) துதை அளி முரலும் - நெருங்கிய வண்டுகள் ஒலிக்கின்ற, வாசம் சோலையின்-நறுமணமுள்ள சோலைகளின், பொங்கர்தோறும்-மரக்கொம்புகளின்மே லெல்லாம், விதம் உற எழுந்து காளமேகங்கள் படிதல்-பலபகுப்பாக எழுந்து கருநிறமான மேகங்கள் படிந்திருத்தலை, நோக்கி- பார்த்து,- '(இது), கதிர் மணி அகழி மா மேகலை உடை நகரம் மாதின் - ஒளியைக்கொண்ட இரத்தினங்களையுடைய அகழியாகிய பெரிய மேகலாபரணத்தை யுடைய இந்நகரமாகிய பெண்ணினது, புகை நறு மலர் மெல் கூந்தல் போலும் ஆ(று)-அகிற்புகையூட்டிய நறுமணமுள்ள மலர்களைச் சூடிய மெல்லிய கூந்தலை யொத்திருக்குந் தன்மையை, காண்மின்- காணுங்கள்,' என்பார் - என்று (தம்மில் ஒருவரை நோக்கி யொருவர்) சொல்வார்கள்;(எ- று.) அந்நகரத்துச்சோலைகளின் மரங்கள்மீது படிகின்ற காளமேகங்களை, அந்நகரமாகிய பெண்ணின் கரிய கூந்தல்மயிர்கள் போலுமென்றார்; தற்குறிப்பேற்றவணி. அகழிக்கு இரத்தினம், கரைகளிற் பதிக்கப்பட்டவை. மேகலை-எட்டுக்கோவையுள்ள இடையணி: இடையணியென்ற மாத்திரமாய் நின்றது. (619) 36. | ஈட்டியமணியும்பொன்னு மெழில்பெறப்புடைகடோறும் பூட்டியசிகரிசாலப் புரிசையின்புதுமைநோக்கிக் கோட்டியநகரியென்னுங் குலக்கொடிமன்றலெய்தச் சூட்டியசூட்டுப்போலத் துலங்குமாகாண்மினென்பார். |
(இ-ள்.) ஈட்டிய - தொகுக்கப்பட்ட, மணிஉம்-இரத்தினங்களையும், பொன்உம்- பொன்னையும், எழில்பெற - அழகு உண்டாக, |