பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்351

புடைகள் தோறுஉம் பூட்டிய - பக்கங்களிலெல்லாம் அமைத்து வைக்கப்பெற்ற,
சிகிரி- மேலுறுப்பு, சால்-பொருந்திய, அ புரிசையின்-அந்த மதிலின், புதுமை-
அதிசயத்தை,நோக்கி-பார்த்து,- '(இது), கோட்டிய நகரி என்னும் குலம் கொடி -
அலங்கரிக்கப்பட்டஅந்நகமாகிய ஓர் உயர்குலமங்கை, மன்றல் எய்த-
விவாகமடைய, சூட்டிய-(கோலஞ்செய்வார் அம்மகளின்நெற்றியிற்) சூட்டிய,
சூட்டுபோல-சூட்டென்னும்நெற்றிமாலை போல, துலங்கும்-விளங்குகிற, ஆ(று) -
தன்மையை, காண்மின்-பாருங்கள்,' என்பார்-என்று (தம்மிற்) சொல்லிக்
கொள்வார்கள்; (எ-று.)

     அந்நகரத்துமதிலின் மேலுள்ளசிகரியென்னும்உறுப்பு, பொன்மயமாய்
இரத்தினங்கள் பதிக்கப்பெற்றுவிளங்குவதை, அந்நகரமாகியபெண் அரசனாகிய
தலைமகனை மணஞ்செய்துகொள்ளுஞ் சமயமாதலால், அதற்கு ஏற்ப, அம்மகளின்
நெற்றியின் மேற்பகுதியிற் கோலஞ்செய்வார் சூட்டிய நூதலணிமாலை
போலுமென்றார்;தற்குறிப்பேற்றவணி. யிகரீ-வடசொல்.                (620)

37.பணையினம்பலவுமார்ப்பப்  பைங்கொடிநிரைத்தசெல்வத்
துணைமணிமாடமன்னுந் தோரணவீதியாவும்
புணைவனநெருங்கநீடிப் பொழிபுயல்கிழிக்குஞ்சாரல்
இணைவரைநடுவட்போதும் யாறுபோலிலங்குமென்பார்.

     (இ-ள்,) 'பணை இனம் பலஉம் ஆர்ப்ப-வாத்தியவகைகள் பலவும் ஒலிக்க,
பைங் கொடி நிரைத்த - செழுமையான துவசங்கள் அணியணியாக நாட்டப்பெற்ற,
செல்வம் - செல்வவளத்தையுடைய, துணை-(வேறுஒப்புமையில்லாமையால்)
தமக்குத்தாமே நிகரான, மணி மாடம் - இரத்தினங்கள் பதித்த [அழகிய]
மாளிகைகள்,மன்னும் - (இருபாலும்) அமையப்பெற்ற, தோரணம் வீதி யாஉம்
தோரணங்களையுடைய வீதிகளெல்லாம்- புணை வனம்நெருங்கநீடி-மூங்கிற்காடுகள்
அடர்த்தியாகவளர்ந்து, பொழி புயல்கிழிக்கும்-மழை பொழிகிற மேகங்களைக்
கிழிக்கின்ற, சாரல் - சாரலையுடைய, இணைவரை - இரண்டுமலைகளின், நடுவண் -
நடுவிலே, போதும்-பாய்ந்து வருகிற, யாறுபோல் - நதிபோல, இலங்கும்-விளங்கும்.
என்பார்-;

     இருமருங்குமுள்ள ஓங்கியமாளிகைகளுக்கு  -இரண்டுமலைகளையும்,
அம்மாளிகைவரிசையின் நடுவிலுள்ள வீதிக்கு -அம்மலைகளின் இடையே
வருகிற நதியையும் ஒப்புமை குறித்தார்; தற்குறிப்பேற்றவணி. மாடங்களின்
மீதுள்ள கொடிவரிசைகளுக்கு ஏற்ப மலைக்குமூங்கிற்காடு கூறினார்.
'பணையினம் பலவுமார்ப்ப' என்றது - செல்வ வளத்தைவிளக்கும். மூன்றாம்
அடி - அதிசயோக்தி.                                     (621)

38.- தருமன் விசுவகருமனுக்கு விடையளித்தல்.

கண்ணுறுபொருள்கள்யாவுங் கண்டுகண்டுவகைகூர
எண்ணுறுகிளைஞரோடும் யாதவகுமரரோடும்
பண்ணுறுவேதவாழ்நர் பலரொடும் வைகியாங்கண்
விண்ணுறுதபதிக்கம்ம விடைகொடுத்தருளினானே.