பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்353

     (இ-ள்.)  வாய்மொழி அறத்தின்மைந்தன் - உண்மைச்சொற்களையுடைய
தருமபுத்திரன் யாய்மொழி தலைமேல்கொண்டுஉம் - தாயாகிய
குந்தியினதுவார்த்தையைச்சிரமேற்கொண்டுநன்குமதித்தும், இளையவர் மொழிகள்
கேட்டுஉம் - [வீமன்முதலிய] தம்பியர்களுடைய வார்த்தையைக் கேட்டு
அவற்றின்படிநடந்தும், வேய் மொழி-அழகிய சொல்லையும், வேய்தோள்-
மூங்கில்போன்றதோள்களையுமுடைய வல்லி-பூங்கொடிபோன்ற திரௌபதியினது,
மெல்மொழி-மென்மையான சொற்களை, விரும்பல் உற்றுஉம்-விருப்பத்தோடு
கேட்டும், மா நகர்வாழும் நாளில்-பெரிய அந்நகரத்தில்வாழ்கின்ற நாட்களில்,
(ஒருநாள்),-ஆய்மொழிபாடல் - ஆராய்ந்த (சிறந்த) சொற்களையுடைய
இசைப்பாட்டைக்கொண்ட, யாழ்-மகதீயென்ற வீணையையுடைய, ஓர்
அந்தணன் - ஒருமுனிவன் [நாரதன்], ஆங்கண்வந்தான் - அவ்விடத்தில்
வந்தனன்; (எ-று.)

     இம்முனிவன் நாரதனாவன். வேய்மொழி-வினைத்தொகை: வேய்தல் -
அழகுசெய்தல்; இனி, கரும்புபோல்  இனியமொழியெனின், வேய்என்றசொல்-
கழையென்றதன்பரியாயமாய்க்கரும்பைக் குறித்த தென்க. 'பாடலோடோரந்தணன்'
எனவும் பாடம்.                                               (624)

41. - பாண்டவர் நாரதனை உபசரித்தல்.

இந்தநாரதனைப்போற்றி யிருபதம்விளக்கிவாசச்
சந்தனாகருவின்றூபந் தவழ்மணித்தவிசினேற்றி
வந்தனாவிதியிற்சற்றும் வழுவறவழிபாடெய்தி
அந்தநால்வருமவ்வேந்து மாதிவாசவர்களானார்.

     (இ-ள்.) இந்த நாரதனை போற்றி-இங்ஙனம்வந்த நாரத முனிவனை
நமஸ்கரித்து,இருபதம்விளக்கி-(அவனுடைய) இரண்டு திருவடிகளையும்
தீர்த்தங்கொண்டு) கழவி,வாசம் சந்தனம் அகரு இன்தூபம் தவழ் மணி தவிசின்
ஏற்றி-பரிமளத்தையுடையசந்தனக்கட்டையும் அகிற்கட்டையும் ஆகியஇவற்றின்
இனியபுகை யூட்டப்பெற்ற இரத்தினம்பதித்த சிங்காசனத்தில் (அவனை)
எழுந்தருள்வித்து,வந்தனாவிதியில் சற்றுஉம் வழு அற வழிபாடுஎய்தி - வழி 
பாட்டுக்கு உரியவிதிமுறைமையிற் சிறிதும் தவறுதலில்லாதபடி உபசரித்தலைச்    
செய்து, அந்தநால்வர்உம் அவேந்துஉம்-(வீமன் முதலிய)அந்தத்தம்பிமார்
நால்வரும்அந்தத்தருமராசனும், ஆதி வாசவர்கள் ஆனார் - (தங்கள்)
பூர்வசன்மமாகிய பழையஇந்திரர்களையே போன்றார்கள்;(எ-று.)

     தேவவிருடியாகிய நாரதன் தன்பக்கல் எழுந்தருள அவனுக்கு மகிழ்ச்சியோடு
விசேஷஉபசாரங்களைச் செய்து மேன்மைபெறுதல் இந்திரனுக்கு இய்லபாதலால்,
இங்ஙனம் கூறினார். சந்தநாகரு, வந்தநாவிதி, ஆதிவாவர் -
வடமொழித்தொடர்கள்.                                   (625)

42. நாரதன் அவர்கட்கு ஒருகதை கூறத்தொடங்கல்.

வரமிகுகற்பினாளு மாமியும்வணங்கிநிற்பச்
சரிகமபதநிப்பாடற் றண்டுதைவருசெங்கையோன்