பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்361

பொருட்டு விடைபெறுதற்காக], நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு
பணிந்தான்-(பொருள்களை) நிறுத்து வடையறுக்கின்ற துலாக்கோலை யொத்த
[நடுவுநிலைமைதவறாத] தமையனான தருமனைப் பி யாணசந்நாகத்தோடு
வணங்கினான்;(எ-று.)

     அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்யும்படி தருமனைவணங்கி
விடைபெற்றுக்கொண்டா னென்றபடி. நிரை கவர்தல்-பொருளிலக்கணத்தில்
வெட்சியென்னுந் திணையும், நிரைமீட்டல்- கரந்தை யென்னுந் திணையுமாம்.
புனிதம்=பூதம்:வடசொல். நிறுக்குந்துலை நிகர் தம்முன்-தனதுநாட்டுக்குடிகளை
முறைதவறாது நடத்தல்போலவே தாங்களும் நடக்கும்படி நிஷ்பக்ஷபாதமாக நீதி
செய்பவ னென்க. 'நினைவோடு பணிந்தான்' என்றும் பாடம்.            (637)

இதுமுதல் அருச்சுனனது தீர்த்தயாத்திரை.

7.- அருச்சுனன் கங்கையில் நீராடுகையில், நாககன்னியரும் நீராடவருதல்.

ஆடம்பரமன்வேட மகற்றித்தொழுதகுதொல்
வேடம்பெறுமறையோருடன் விசயன்புரவிசயன்
சூடந்தருபாகீரதி தோய்காலையிலவணே
சேடன்றலமடவார்புன லயர்வானெதிர்சென்றார்.

     (இ-ள்.) விசயன்- அருச்சுனன்,- ஆடம்பரம் மன் வேடம் அகற்றி -
ஆடம்பரத்தையுடைய (தனது) இராசவேடத்தை நீக்கி [தீர்த்தயாத்திரைக்கு உரிய
வைதிகவேடங்கொண்டு], தொழுதகு தொல் வேடம் பெறு மறையோருடன்-
(யாவரும்)வணங்கத் தக்க தொன்று தொட்டுவருகிற தவத்துக்கு உரிய
வேடத்தையுடையஅந்தணர்களுடனே, புர விசயன் சூடம் தருபாகீரதிதோய்
காலையில்- திரிபுரத்தைவென்றவனான சிவபிரானதுசடைமுடியினால்
தரப்பட்டதாகிய கங்காநதியில்நீராடும்பொழுது, அவண்ஏ- அவ்விடத்திலே,
சேடன் தலம் மடவார் -ஆதிசேஷனுக்கு உரியதான நாகலோகத்திலுள்ள மகளிர்,
புனல் அயர்வான்-நீராடும்பொருட்டு, எதிர்சென்றார்-அவனெதிரில் வந்தார்கள்;
(எ-று.)

     ஆடம்பரம் - கண்டவளவில் நன்குமதிக்கத்தக்க கம்பீரமானதோற்றம்;
ஆடையணிகளால் ஆவது. ஆடம்பரம், வேஷம், புரவிஜயன், ஐூடம், ஸேஷன்-
வடசொற்கள். 'தொழுதகு தொல்வேடம்' - மரவுரியுடுத்தல், சடைமுடிதரித்தல்,
மான்றோல்போர்த்தல், புலித்தோலிலிருத்தல் முதலியன.                 (638)

8.- அருச்சுனன் உலூபியை மணஞ்செய்து கொள்ளல்.

ஓடுங்கயல்விழியாரி லுலூபிப்பெயரவளோடு
ஆடும்புனலிடைநின்றவ னநுராகமிகுந்தே
நாடும்பிலவழியேயவள் பின்சென்றுநலத்தால்
நீடுங்கொடிமணமெய்தினன் முகில்போலுநிறத்தான்.

     (இ-ள்.) முகில் போலும் நிறத்தான்-மேகம் போலுங் கருநிற முடையவனாகிய,
ஆடும் புனலிடை நின்றவன் - ஸ்நானஞ்செய்கிற அக்கங்கைநீரில் நின்றவனான.
அருச்சுனன், ஓடும்கயல்விழியாரில் - (அங்குநீராட வந்த காதளவும்) ஓடுகிற
கயல்மீன்போன்றகண்களை