யுடையவர்களான நாககன்னிகைகளுள், உலூபி பெயரவளோடு- உலூபியென்னும் பெயரையுடையவளுடனே, அநுராகம் மிகுந்து- காதல்மிகுந்து, நாடும் பிலம் வழியே அவள் பின்சென்று - ஆராய்ந்து செல்லத்தக்க பிலத்துவாரவழியாக அவள்பின்னேசென்று, (பாதாளஞ்சேர்ந்து அங்கு), நலத்தால் நீடும் கொடி மணம் எய்தினன்- அழகினால் மிக்க பூங்கொடி போன்ற அவளை மணந்தான்; (எ-று.) நீராடும்போது அந்நீரினிடையே உலூபியை அருச்சுனன் கண்டானாக, காதல்கொண்ட அன்னாள், பிலவழியே நாகலோகத்துத் தன்மாளிகைக்கு அவனை அழைத்துக்கொண்டு போயினாளென்று பாரதங்கள் கூறும். அநுராகம்- வடசொல். புதிதாகச்செல்லும் மனிதருக்குப் பிலவழி இயங்குதற்கு அரிய நெறியென்பது தோன்ற, 'நாடும்பிலவழி' எனப்பட்டது. 'முகில்போலு நிறத்தான்' என்று அருச்சுனனது கறுப்பிலழகை விளக்கியவாறு. (639) 9.-அருச்சுனன் நாகலோகத்திற் சிலநாள் இருந்து, இராவானைப் பெறுதல். இம்மென்றளிமுரல்பாயலி லின்பத்தைவளர்த்தும் பொம்மென்பரிபுரநாண்மலர் பொற்சென்னியில்வைத்துஞ் செம்மென்கனியிதழாளொடு சின்னாணலமுற்றான் அம்மென்கொடியனையாளுமிராவானையளித்தாள். |
(இ-ள்.) (அவ்வருச்சுனன்),- இம் என்ற அளி முரல் பாயலில் - இம்மென்னும்ஒலிபடவண்டுகள் ஒலிக்கின்ற மலர்ப்படுக்கையில், இன்பத்தை வளர்த்துஉம் - (அவளோடு) சுகத்தை மிகுதியாகப்பெற்றும்,-பொம்மென் பரிபுரம் நாள் மலர் - பொம்மென்று ஒலிக்கிற சிலம்பென்னும் அணியை யணிந்த அன்றுபூத்ததாமரை மலர்போன்ற அவளுடைய பாதங்களை, பொன்சென்னியில்வைத்து உம் - அழகிய தனது சிரசின்மீது கொண்டும்,- செம் மெல்கனி இதழாளொடு - சிவந்த மென்மையான கொவ்வைப்பழம்போன்ற அதரத்தையுடைய அவளுடனே, சில் நாள் நலம்உற்றான்-சிலநாள் இன்பத்தை அனுபவித்தான்; (பின்பு), அம் மெல்கொடி அனையாள் உம்- அழகிய மென்மையானபூங்கொடியைப் போன்ற அவ்வுலூபியும், இராவானை அளித்தாள்- இராவானென்றபுதல்வனைப்பெற்றாள்; இம்மெனல், பொம்மெனல்-ஓசை யநுகரணம். அருச்சுனன் அவளுடைய பாதத்தைச் சிரமேற்சூடுதல், அவள் ஊடல்கொண்ட காலத்தில் அதனைத் தணிவித்தற்குஎன்க: ஊடலாவது- ஆடவரும் மகளிரும் இன்பநிலையில் அவ்வின்பத்தைமிகுவிக்கும்பொருட்டு ஒருவரோடொருவர் சிறிது கொள்ளும் பிணக்கம்: புலவியென்றுகூறப்படும். இராவாந்-வடமொழிப் பெயர்; அராவானெனப் பெயர் குறித்தல்வடநூலுக்கு முரணாம். 'இம் மென்றளிமுரல்' என்ற அடைமொழியால், பாயல் -மலர்ப்பள்ளியாயிற்று. (640) 10.-அருச்சுனன், நாகலோகத்தினின்று மீண்டு கிழக்கு நோக்கிச் செல்லுதல். நாகாதிபன்மகண்மைந்த னலங்கண்டுமகிழ்ந்து நாகாதிபன்மகன்மீளவுநதியின்வழிவந்து |
|