பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்395

மலையையும் அழகிய திரிகோணமலையையும் (இவற்றில் எது கனம் பொருந்திய
தென்று) நிறுத்து வரையறை செய்யுமாறு, கோகநதன் அமைத்த - பிரமன் நாட்டிய,
துலை கோல்உம் - தராசுகோலையும், போலும் - ஒக்கும்; (எ-று.)

     தற்குறிப்பேற்றவணி. இரண்டுபக்கத்தும் அலைபிரிந்து மோத இடையிலே
பொருந்திய நீண்ட சேது, இருதிறத்துயானைகள் ஒன்றோடொன்று மோதாதபடி
அவற்றினிடையிலிட்ட காவல்தடை மரம்போலுமென்க. பாலபாரதத்திலும்
"உபயோரபிபாகயோர ஜஸ்ரம் - மிலதாம் அர்க்களம் ஊர்மிகுஞ்ஜராணாம்
லவணாம்புநிதௌ விலோக்யஸேதும்" என்று இங்கு முதலடியிற்குறித்த உவமை
வந்துள்ளது. வாயுதேவன் பெயர்த்துத் தள்ளிய மேருமலையின் மூன்று சிகரங்களே
இலங்கைநகர்க்கு இருப்பிடமான திரிகூடமென்பது இரண்டாமடியில் அறிதற்குரியது.

     முக்கோணக்குன்று - திரிகோணாசலம்; இது - இலங்கைத்தீவிலுள்ள தேவாரம்
பெற்ற சிவதலமிரண்டில் ஒன்று. அகஸ்தியமகாமுனிவன் சிவபிரானோடொத்த
மகிமையுடையவனாதலால், அவனிருக்கிற பொதியமலையும் சிவபிரானிருக்கிற
கைலாசகிரியின் கொடு முடியான திரிகோணமலையும் தம்மிலொத்தனவாய்ச்
சீர்தூக்குதற்கு ஏற்றன வென்க. கோகநதம் - தாமரை; இவ்வடசொல் கோகம் -
சக்கரவாகப்பறவைகள், நதம் - கூவியொலித்தற்கு இடமானது என்று பொருள்படும்.
கோகநதன் - தாமரையில் வாழ்பவன்.                                (677)

47.-அருச்சுனன் சிலதீர்த்தங்களில் நீராடி மேல்கடல் சேர்தல்.

அண்டர்தமகங்கையினும்வரனுண்டென்றென் றரம்பையரோட
                         வனியில்வந்தாடுங்கன்னித்,
தண்டுறையுந்தண்பொருநைப்பாவநாசத்தடந்துறையும்
                         படிந்துநதித்தடமேபோந்து,
பண்டுமழுப்படையோனம்மழுவாற்கொண்டபாக்கியபூமியுஞ்
                              சேரன்பதிகளியாவும்,
கண்டுமனங்களிகூரச்சென்றுமேலைக்கடல்கண்டானுரகதலங்
                                  கண்டுமீண்டான்.

     (இ-ள்.) உரக தலம் கண்டு மீண்டான் - நாகலோகத்துக்குச் சென்று
அதனைக்கண்டு திரும்பிவந்தவனான அருச்சுனனானவன்,- அண்டர் -
தேவர்கள்,தம கங்கையின்உம் வரன் உண்டு என்று என்று -
தங்களுடையகங்காநதியைக்காட்டிலும் மேன்மையுள்ள தென்று எண்ணியும்
சொல்லியும், அரம்பையரோடு அவனியில் வந்து ஆடும்-தேவமாதர்களுடனே
பூமியில் வந்து ஸ்நாநஞ்செய்யப்பெற்ற, கன்னி தன் துறைஉம்-
கன்னியாகுமரியென்னும் நதியினது குளர்ச்சியான துறையிலும், தண் பொருநை
பாவநாசம் தட துறை உம் - குளிர்ச்சியான பொருநையாற்றினது பாவநாசமென்கிற
பெரிய துறையிலும், படிந்து - நீராடி, நதி தடம்ஏ போந்து - அந்நதியின்கரை
வழியாய்ச் சென்று, பண்டு மழு படையோன் அ மழுவால் கொண்ட பாக்கியம்
பூமிஉம்-முற்காலத்தில் பரசுராமன் (தனது) பரசு என்னும்