பற்றியிழுக்கவும் பசுவின்காதுபோலக் குழைந்துகாட்டியதால், இது கோகர்ணமெனப்படும்; கோகர்ணம் - பசுவின் காது. (679) 49.-அருச்சுனன் துவாரகைசார்ந்து சந்நியாசிவேஷங் கொள்ளல். ஆகன்னமுறச்செம்பொன்வரைவில்வாங்கி யவுணர்புறங்கட் டழித்தோனடியில்வீழ்ந்து, கோகன்னவளம்பதியிற்றன்பின்வந்த குலமுனிவர்தமையிருத்திக் கோட்டுக்கோட்டு, நாகன்னப்பெடையுடனேயாடுங்கஞ்சநறைவாவிவண்டுவரை நண்ணியாங்கண், பாகன்னமொழிக்கனிவாய்முத்தமூரற்பாவைநலம்பெறமுக்கோற் பகவனானான். |
(இ-ள்.) ஆகன்னம் உற - காதளவும்பொருந்த, செம் பொன் வரை வில் வாங்கி-சிவந்த பொன்மயமான மேருமலையாகிய வில்லை வளைத்து (ஆதிசேஷனாகிய நாணியை இழுத்து விஷ்ணுவாகிய அம்பைத் தொடுத்து), அவுணர்புரம் கட்டு அழித்தோன் - அசுரர்கள்வசித்த திரிபுரத்தை முற்றும் அழித்தவனான சிவபிரானது. அடியில் - திருவடிகளில், வீழ்ந்து - விழுந்து [சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], (அருச்சுனன்), கோகன்னம் வளம் பதியில் - வளப்பமுடைய அந்தக் கோகர்ணமென்ற திருப்பதியிலே, தன் பின் வந்த குலம் முனிவர் தமை இருத்தி - தன்னைத்தொடர்ந்துவந்த சிறந்தமுனிவர்களை இருக்கச்செய்து,- கோடு- நீர்க்கரைகளிலுள்ள, கோடு நாகு - சங்கின் பேடைகள், அன்னம் பெடையுடனே ஆடும்-அன்னப் பேடைகளுடனே விளையாடப்பெற்ற, கஞ்சம் நறை வாவி - தாமரை மலர்களின் நறுமணத்தையுடைய தடாகங்கள் பொருந்திய, வள்துவரை - வளப்பமுள்ள துவாரகாபுரியை, நண்ணி - சார்ந்து, ஆங்கண்- அவ்விடத்தில், பாகு அன்ன மொழிகனி வாய் முத்தம் மூரல் பாவை நலம் பெற - கருப்பஞ்சாற்றின் பாகைப்போன்ற[இனிய] சொற்களையும் கொவ்வைப்பழம் போலச் சிவந்த வாயை போலஅழகியவளான சுபத்திரையினது இன்பத்தைப் பெற, (விரும்பி அதைக்குறித்து),முக்கோல் பகவன் ஆனான் - திரி தண்டத்தையுடைய சன்னியாசியாயினான்; (எ-று.) கோகர்ணத்துச் சிவபிரான் திருநாமம் - மகாபலேசுவரர். அம்பிகை - பெரியநாயகியம்மை. ஆகன்னம்=ஆகர்ணம்:வடசொற்றொடர் விகாரப் பட்டது. நீர்வாழ்வனவான சங்கும் அன்னமும் உடன் விளையாடு மென்க. கஞ்ஜம்-வடசொல்; நீரில்தோன்றுவது; (கம்-நீர்.) கோகர்ணத்திலிருந்து பிரபாசகட்டத்தை அடைந்து அருச்சுனன் உடன்வந்தோரை அங்குவிட்டு, சுபத்திரையைப் பெறத் துறவிவேடம் பூண்டு க்ருஷ்ணபகவானை நினைக்க, அப்பிரான்வந்து இவ்வருச்சுனனை ரைவதககிரியிலிருத்தித் துவாரகை சேர்ந்தா னென்று பாலபாரதத்தி லுள்ளது. (680) 50.-அருச்சுனன் ரைவதககிரியில் ஓர் ஆலமரத்தினடியிற் சேர்தல். வெங்கதிர்போய்க்குடதிசையில்வீழ்ந்தபின்னர் வீழாமன்மாலை யின்வாய்மீண்டுமந்தச், செங்கதிர்வந்தெழுந்ததெனமீதுபோர்த்த |
|