பக்கம் எண் :

4பாரதம்ஆதி பருவம்

கடல் ஆம் - கடல் போன்ற திருமாலாவனோ: வீக்கும் ஆறு - (காப்பாற்றப்பட்ட
உயிர்களை) அழிக்குமாறு, அரன் ஆம் - சிவனாவனோ: அவை வீந்த நாள் -
அவைஅழிந்த காலத்தில், மீள பூக்கும் - மீண்டும் படைக்கின்ற, மா முதல்
(ஆம்)- சிறப்புற்றமுதற்கடவுள் ஆவனோ: அவன் - அந்த முதற்கடவுளின்,
பொன் அடி - அழகியதிருவடிகள், போற்றி - வாழ்க; (எ - று.)

      'எவன்' என்பது- 'அயனாம்' முதலிய நான்கனோடும் இயையும் அம் -
அழகியஎனினுமாம். "அவை வீந்த நாளுந்திப்பூக்குமா முதல்" என்றும்
பாடமுண்டு. போற்றி -போற்றிய என்ற வியங்கோளின் ஈற்றுயிர்மெய் சென்றது.

     இதுமுதல் ஆறுகவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும் மற்றை
மூன்றும் விளச்சீர்களுமாகி வந்த கலிநிலைத்துறைகள். மேல் குருகுலச்சருக்கத்து
முதல்முப்பத்திரண்டு கவிகளும், இந்தக் கலிநிலைத்துறையேயாகும்.        (3)

4.- அறம்முதலியவற்றின் வாழ்த்து.

ஏழ்பெருங்கடன்மாநிலமெங்குநல்லறமே
சூழ்கவண்டமிழோங்குகதேங்குகசுருதி
வீழ்கபைம்புயல்விளங்குகவளங்கெழுமனுநூல்
வாழ்கவன்புடையடியவர்மன்னுமாதவமே.

     (இ - ள்.) ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்குஉம் - ஏழு பெரிய கட்டலாற்
சூழப்பட்ட பெரிய பூமி முழுவதும், நல் அறம் ஏ சூழ்க - சிறந்த தருமமே
பரவியிருக்கட்டும்: வள் தமிழ் ஓங்குக - வளப்பம் பொருந்திய தமிழ்மொழி
யோங்கிநிற்கட்டும்: சுருதி - வேதங்கள், தேங்குக - (எங்கும்) நிறைந்திருக்கட்டும்:
பைம்புயல் - கரியமேகம், வீழ்க - (வானத்தினின்று மழைநீரைப்)
பொழியட்டும்; வளம் கெழுமனு நூல் - பல விஷயங்களும் நன்கு விளங்குகின்ற
மனுதருமசாத்திரம், விளங்குக -(அதனிற் கூறப்பட்டுள்ள தருமங்கள் நடத்தப்
பெறுதலால்) விளக்க முறட்டும்:அன்புஉடை - (கடவுளிடத்து) மெய்யன்புடைய,
அடியவர் - அடியார்கள், மன்னு -மேற்கொண்டுள்ள, மா தவம் - சிறந்த தவம்,
வாழ்க - வாழட்டும்; (எ -று.)

     கடவுள் வாழ்த்துக் கூறிய கவி, இதனால், அறம் முதலியவற்றைச் செழிக்க
வாழ்த்துகின்றார். உலகத்துக்கு நல்ல நெறியைப் போதித்தலே காவியத்துக்குப்
பயனாதலால், அக்கருத்துத் தோன்ற 'எங்கும் நல்லறமே சூழ்க' என்பது
முதலாகக்கூறினா ரென்னலாம்.

5.- இதுமுதல் மூன்று கவிகள் - அவையடக்கம்.

     அவையடக்கமாவது - அவையோர்க்குத் தான் அடங்கியிருக்கை:
அவையத்தார்க்கு மனவெறுப்புமுதலியனதோன்றாமல் அன்னாரை அடங்குமாறு
செய்தலெனினுமாம்: அங்ஙன் அவையடக்கத்தைத் தெரிவிக்கும் பாடல்,
அவையடக்கமெனப்படும்.

கன்னபாகமெய்களிப்பதோரளப்பிறொல்கதைமுன்
சொன்னபாவலன்றுகளறுசுகன்றிருத்தாதை
அன்னபாரதந்தன்னையோரறிவிலேனுரைப்பது
என்னபாவமற்றென்னையின்றென்சொலாதுலகே.