பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்401

திருநாபி முதலிய பலஉறுப்புகள் தாமரைமலர்போலிருக்கப் பசுஞ்சாமத்
திருமேனிநிறம்தாமரையிலை போலுதலால், 'பூங்கமல மலரோடையானையான்'
என்றார். இடருற்றுத்தன்னையடைந்தோர்க்கு அவ்விடர் தவிர்த்துக்
குளிர்ந்தகருணைசெய்பவ னென்பது, 'ஓடையனையான்' என்றதனால்
விளங்கும்.                                                 (683)

53.- கண்ணன் அருச்சுனனை வந்த காரியம் வினவித்
துவாரகை சேர்தல்.

யதியாகியவணிருந்த தோழன்றன்னை யதுகுலநாயகன்பரிவோடி
                                   றைஞ்சவன்பால்,
அதியானநெடுஞ்சுருதி யாசிகூறி யாகமுறத்தழீஇ
                               மகிழ்வுற் றாலநீழல்,
மதியார்செஞ்சடைமுடியோனென்னவைகிவந்தவாறுரைப்பநெடு
                                   மாலுங்கேட்டுத்,
துதியாடிக்காலையிலேவருதுமென்றுசொற்றிமைப்பின்
                    மீளவும்போய்த் துவரைசேர்ந்தான்.

     (இ-ள்.) யதி ஆகி அவண் இருந்த தோழன் தன்னை - சன்னியாசியாய்
அவ்விடத்திலேயிருந்த நண்பனான அருச்சுனனை, யது குலம் நாயகன் -
யதுகுலத்துக்குத் தலைவனான கண்ணன், பரிவோடு இறைஞ்ச - அன்போடு
வணங்க,(அவ்வருச்சுனன்), அன்பால் - அன்போடு, அதி ஆன நெடுஞ் சுருதி
ஆசி கூறி -மிகுதியான பெரிய வேதவாக்கியங்களைக்கொண்டு (கண்ணனுக்கு)
ஆசீர்வாதஞ்செய்து, ஆகம்உற தழீஇ மகிழ்உற்று - (தன்மார்பிலே அவன்) மார்பு
பொருந்தத்தழுவி மகிழ்ச்சியுற்று, ஆலம் நீழல் மதி ஆர் செம் சடை முடியோன்
என்ன வைகி -ஆலமரத்தினது நிழலிலே சந்திரன் பொருந்திய சிவந்த
சடையையுடையனானசிவபிரான்போல் வீற்றிருந்து, வந்தஆறு உரைப்ப - (தான்)
வந்தகாரியத்தைச் சொல்ல, நெடுமால்உம் - மகாவிஷ்ணுவாகிய கண்ணபிரானும்,
கேட்டு -(அதனைக்) கேட்டு, துதி ஆடி - கொண்டாடி, காலையில் வருதும்
என்றுசொற்று - 'மறுநாளுதயகாலத்தில் வருவோம்' என்று சொல்லி, இமைப்பில்
மீளஉம் போய் துவரைசேர்ந்தான் - இமைப்பொழுதிலே திரும்பவும் சென்று
துவாரகையை யடைந்தான்;

     தக்ஷிணாமூர்த்திவடிவமான சிவபெருமான் கைலாசகிரியிற் கல்லாலமரத்தின்
கீழ்வீற்றிருத்தலை நூல்கள் கூறும்.                               (684)

54.- மறுநாள்விடியுமுன் அம்மலையில் இந்திரவிழவுக்காகப் பலவேந்தர்
சூழப் பலராமன் வருதலும் தோழியருடன்
சுபத்திரை வருதலும்.

ஆதவன்வந்துதிப்பதன்முன்மற்றைநாளி லணிநகர்வாழ்சன
                          மனைத்துமந்தக்குன்றின்,
மாதவனதேவலினான்மழைக்காலத்து வாசவற்குவிழாவயர்வான்
                                     வந்தகாலை,
யாதவரிற்போசரின்மற்றுள்ளவேந்தரியாவருஞ்சூழ்வர
                           நறுந்தாரிராமன்வந்தான்,
சூதடர்பச்சிளங்கொங்கைப்பச்சைமேனிச்சுபத்திரையுந்
                         தோழியர்கள் சூழவந்தாள்.

     (இ-ள்.) ஆதவன் வந்து உதிப்பதன் முன் - சூரியன்வந்துதோன்றுவதற்கு
முன்னம் [பொழுதுவிடியுமுன்னமே], மற்றை நாளில்-, அணி நகர் வாழ்
சனம் அனைத்துஉம் - அழகிய துவாரகையில் வசிக்கின்ற சனங்களெல்லாம், அந்த
குன்றில் - அந்த இரை