பக்கம் எண் :

428பாரதம்ஆதி பருவம்

     அருச்சுனன் சிவிறியால் நீரைத்தூவ அது  தன்முகத்தில் நேரே விழும்போது
அவனைக் காணவெட்டாமற் செய்வதால், ஒருத்தி அந்நீர்வீழ்ச்சிக்கு அஞ்சித்
தன்முகத்தைத் தன்கையால் மூடியவண்ணம் விரற்சந்தினால் அவ்வருச்சுனனழகைப்
பார்க்க லாயின ளென்பதாம். மருங்கசைதலும் தனபாரம் புளகமேறுதலும்
நீர்வீழ்ச்சியினா லாயினவை.                                    (729)

9.நங்கையங்கோர்கொடியனையாள்வதனமதி சலமதியாய்
                                நடுங்குமாறு,
பங்குனன்றன்றிருச்செங்கைப்பங்கயத்தின் சிவிறியினாற்
                                 பரிவுகூரக்,
குங்குமங்கொள்புனல்விடவுமிமையாமற் புனல்வழியே
                             கூர்ந்தபார்வை,
செங்கலங்கற்புதுப்புனலுக்கெதிரோடி விளையாடுஞ்
                            சேல்கள்போலும்.

     (இ-ள்.) அங்கு அவ்விடத்தில் [அப்பொழுது], கொடி அனையாள் -
பூங்கொடிபோன்றவளான, ஓர் நங்கை - ஒரு சிறந்தமகளினது, வதனம் மதி -
முகமாகிய சந்திரன், சலம் மதி ஆய் - நீரினுள்ளே தோன்றுஞ் சந்திரபிம்பத்தைப்
போன்று, நடுங்கும் ஆறு - மிக அசையும்படி, பங்குனன் - அருச்சுனன், தன் திரு
செம்கை பங்கயத்தின் சிவிறியினால் - தனது அழகிய சிவந்த தாமரை மலர்போன்ற
கையிலுள்ள  நீர்த்துருத்தியைக்கொண்டு, பரிவுகூர- (அவட்கு) வருத்தம்மிகும்படி,
குங்குமம் கொள் புனல் விடஉம் - குங்குமத்தைக் கரைத்த நீரை விசையோடு
மேல்வீசவும், இமையாமல் - இமைகொட்டாமல், புனல் வழிஏ கூர்ந்த -
நீரினிடையேநுண்ணிதாய்ப்பார்த்த, பார்வை - (அவளுடைய) கண்கள், செம்
கலங்கல் புதுபுனலுக்கு எதிர்ஓடி விளையாடும் சேல்கள் போலும் - சிவந்த
கலக்கமுள்ள புதியநீர்வெள்ளத்துக்கு எதிரே ஓடிவந்து விளையாடுகிற சேல்
மீன்களை ஒக்கும்; (எ-று.)

     அருச்சுனன் ஓர் மெல்லியலாளின் முகத்தின்மேல் துருத்தி கொண்டு
விசையாகக்குங்குமங் கலந்த நீரைத் தூவினான்; அதைப் பொறுக்கமாட்டாமல்
அவள் முகத்தைமிகுதியாக அசைக்கலானாள்; அச்சமயத்தில், சந்திர மண்டலம்
போன்ற அவளுடையமுகமண்டலம் நீரினுள்ளே நடுங்கியது, நீரினுள்ளே
காணப்படுகிற சந்திரமண்டலத்தினதுபிரதிபிம்பம் அந்நீரின் அசைவினால்
அசைந்து தோன்றுவதைப் போன்றது; இங்ஙனம்தனக்கு வருத்தம் மிகுமாறு
அருச்சுனன் மேல்மேல் நீர்வீசிக்கொண்டிருக்கவும் அவள்அவன்பக்கலுள்ள
ஆசையாற்கண்கொட்டாமல் அவனைப் பார்த்தபடியே யிருந்தாள்;அவ்வாறுநீரிற்கு
எதிராக நுட்பமாய்ப் பார்வையைச் செலுத்துகிற அவளுடையகண்கள்,செங்கலங்கற்
புதுவெள்ளத்திற்கு எதிரோடி விளையாடுஞ் சேல்மீன்கள் போன்றனஎன்பதாம்;
தற்குறிப்பேற்றவணி. பரிவு கூர என்பதற்கு - ஆசைமிக என்று
பொருள்கொள்ளினும் அமையும்; அருச்சுனன் தனக்கு அவளிடம்
ஆசைமிகுதலால்அவள்மேற் புனல்வீசின னென்றும், தனது காதலனான அவன்
கைச்சிவிறிகொண்டுவீசியநீர் தன் உடலிற்பட்டபோது அவள் அவன்கையால்
தீண்டினாற் போலஇன்பமிக்கனளென்றும் கொள்க.                 (730)