பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்43

 நலத்துடனவன்மனை நண்ணுமெல்லையில்
நிலத்திடையென்வயி னீருந்தோன்றுவீர்.

     (இ - ள்.) வலத்து - வலிமையினால், உயர் - மிக்க, தட புயம் - பெருமை
பெற்ற தோளையுடைய, வருணன்உம்-, குருகுலத்தினில் - குருகுலத்திலே, அயன்
வரங்கொண்டு - அயனுடைய விருப்பத்தினால் [பிரமசாபத்தினால்], தோன்றும் -
உதிப்பான்: (யான்), நலத்துடன் - சிறப்புடனே, அவன் மனை - அவனுடைய
மனைவியாக, நண்ணும் எல்லையில் - (அவனைச்) சேரும்போது, நீரும்-, நிலத்திடை-நிலவுலகத்திலே, என்வயின் - என்னிடத்து, தோன்றுவீர் -
புத்திரராகப் பிறப்பீராக; (எ-று.)- இதுவும், அடுத்தகவியும் - கங்கையாள்
வசுக்களைத் தேற்றியதைத்தெரிவிக்கும். வரம் - விருப்பம். அயன் வரம் -
பிறமனிட்டசாப மென்க.                                       (77)

70.அஞ்சன்மினும்மைநா னவனிதோயுமுன்
எஞ்சவீட்டிடுவனிவ் விறைவன்றன்னையும்
நெஞ்சுறத்தந்தைபா னிறத்திநானுமவ்
வஞ்சகப்பிறப்பினை மாற்றுவேனென்றாள்.

     (இ - ள்.) அஞ்சன்மின் - (பூமியில் எவ்வாறு வசிப்பதென்று)
அஞ்சவேண்டா:நான்-, உம்மை-, அவனி தோயும் முன் - பூமியில் படுவதற்கு
முன்னமே [பூமியில் நீர்பிறந்தவுடனே], எஞ்ச - உயிரொடுங்கும்படி, வீட்டிடுவன்
- இறக்கச்செய்வேன்: இஇறைவன் தன்னைஉம் - பிரபாசனென்கிற தலைமைபெற்ற
இவனையும், நெஞ்சு உற -(பிதாவின்) மனத்திற்குப் பொருந்துமாறிருக்க,
தந்தைபால் - தந்தையினிடத்தில், நிறுத்தி- நிற்கச்செய்து,- நான்உம்-, அ
வஞ்சகம் பிறப்பினை - தீமையால்விளைந்த அந்த(என்னுடைய)
மானுடப்பிறவியை, மாற்றுவேன் - போக்கிடுவேன், என்றாள் - என்று
கூறினாள்; (எ - று.)

     எஞ்ச - சாபங் கழியும்படி யெனினுமாம். அஞ்சன்மின் - ஏவற் பன்மை
வினைமுற்று. அவனி = அவநீ: காத்தற்கு உரியது: பூமி.                 (78)

71.நாலிருவசுக்களு நதிமடந்தைசொற்
பாலிருசெவிப்படப் படாதநற்றவம்  
சாலிருநிலத்திழி தாயையன்புடன்
காலிருகரத்தினாற் கசிந்துபோற்றினார்.

     (இ - ள்.) நால் இரு வசுக்கள்உம் - வசுக்கள் எண்மரும், நதி மடந்தை -
கங்காதேவியின், சொல் பால் - சொல்லமுதம், இரு செவி பட - (தமது)
இரண்டுகாதிலே விழ, படாத நல்தவம் சால் - அழியாத சிறந்த தவப்பயன்
பொருந்திய,இருநிலத்து இழி - பெரிய பூமியிலே யிழிகின்ற, தாயை -
கங்கையாளை, கசிந்து -மனமுருகி, அன்புடன் - அன்போடு, கால் -
பாதங்களிலே, இரு கரத்தினால் - (தமது)இரண்டு கைகளினாலும், போற்றினார் -
வணங்கினார்கள்;(எ-று.)

     எப்படிப்பட்டவரும் தவப்பயனைப் பெறுதற்குரிய புண்ணிய பூமி பூதலமே
யாதலால், 'படாத நற்றவஞ்சா லிருநிலம்' என்றது. 'படர்ந்தநல்லறம்' என்றும்பாடம்.
போற்றுதல் - வணங்குதல்: "வந்தித்தல்போற்றல்வணங்கலாகும்" என்றது, பிங்கலந்தை.                                                 (79)