பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்439

பிறப்பை யுடையவன்; தாய்வயிற்றிற் பிறத்தலாகிய இயற்கைச்சன்மதத்தோடு பின்பு
உபநயநச் சடங்கினால்வருகிற ஞானசன்மமும் ஒரு பிறப்பா மென்பது
நூற்கொள்கையாதலால் இருபிறப்பினன் என்று பெயர். ஹு தாஸநன் என்ற பெயர்=
ஹு தஅஸந என்று பிரிந்து, (தன்பக்கல்) ஹோமஞ் செய்யப்பட்டபொருளை
உணவாகக்கொள்பவனென்று பொருள்படும்.                           (744)

24.- அவ்வனத்தின் தன்மை.

மிடைந்தநால்வகைமகீருகங்களுநெடுவெற் பினங்களுந்துன்றி
அடைந்ததானவரரக்கர்பேருரகருக் காலயங்களுமாகிக்
குடைந்துசோரிகொள்வாளுகிரரிமுதற் கொடுவிலங்கினமிக்குக்
கடைந்தகூரெயிற்றாலதக்ககனும்வாழ் கானனமதுகண்டீர்.

     (இ-ள்.) அது - அக்காண்டவமென்பது,- மிடைந்த - நெருங்கிய, நால்வகை
மகீருங்கள்உம் - நான்குவகைப்பட்ட விருட்சவரக்கங்களும், நெடு வெற்பு
இனங்கள்உம் - பெரியமலைக் கூட்டங்களும், துன்றி - நிறைந்து, அடைந்த தானவர்
அரக்கர் பேர் உரகருக்கு ஆலயங்கள்உம் ஆகி - (தன்னிடத்தில்வந்து) சேர்ந்த
அசுரர்கள் இராக்கதர்கள் பெரிய நாகர்கள் என்னும் இவர்களுக்கு இருப்பிடங்களும்
அமையப்பெற்று, குடைந்து சோரி கொள் - அகழ்ந்து இரத்தத்தைக் கொள்ளுகிற,
வாள் உகிர் - வாட்படைபோலக் கூரிய நகங்களையுடைய, அரி முதல் கொடு
விலங்குஇனம் - சிங்கங்கள் முதலான கொடிய மிருகசாதிகள், மிக்கு - மிகுந்து,
கடைந்த கூர்எயிறு ஆலம் தக்ககன்உம் வாழ் - கடைந்தாற்போன்ற கூரிய பற்களில்
விஷத்தையுடைய தக்ஷக னென்னும் மகாநாகமும் வசிக்கிற. கானனம் - காடாகும்;
கண்டீர் -அறிவீரன்றோ? (எ-று.)

     கண்டீர்என்ற முன்னிலைப்பன்மை முற்று, இடைச்சொல் தன்மைப் பட்டு,
முன்னிலையசையாகியும் தேற்றப்பொருள்தந்தும் நிற்கும். நால்வகை மகீருகங்கள் -
மரம், கொடி, செடி, புல் என்பன; வித்து வேர் கிழங்கு கொடிகளில்தோன்றுவன
என்பாரு முளர்; மற்றுஞ் சிலவகையாகவும் உரைக்கலாம். மஹீருஹம் - மஹீ -
பூமியில், ருஹம் - முளைப்பது. தக்ஷகன் - அஷ்டமகாநாகங்களுள்
ஒன்று;(அவையாவன - அநந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்ஷகன்,
பதுமன், மகாபதுமன், வாசுகிஎன்பன.) சொரிவது சோரி எனக் காரணக்குறி. (745)

25.- இந்திரன்செய்யும் இடையூற்றுக்கு இடையூறுசெய்ய வேண்டுமென்று
அக்கினிதேவன் தன்வேண்டுகோளைத் தெரிவித்தல்.

புகுந்தியான்முகம்வைக்கினேழ்புயலையு மேவியப்புருகூதன்
தொகுந்தராதலவிறுதிபோனெடும்புனல் சொரிந்தவித்திடுமென்னை
முகுந்தனானிரைபுரந்தவாறெனவொரு முனைபடவிலக்கிற்பின்
மிகுந்தாகமுமெண்ணமுமுடிந்திடும் வேண்டுவதிதுவென்றான்.

     (இ-ள்.) யான் புகுந்து முகம் வைக்கின் - நான் பிரவேசித்து (அவ்வனத்தை
உண்ண) வாய்வைத்தால், அ புருகூதன் - அவ்வனத்தைக் காவல்செய்பவனான
இந்திரன், ஏழ் புயலைஉம் ஏவி-.