பக்கம் எண் :

446பாரதம்ஆதி பருவம்

என்றார். செம் - செம்மையென்னும் பண்பினடி. மரகதம், நீலம் - அவற்றின்
நிறத்துக்கு,இலக்கணை.                                            (753)

33.- இதுமுதல் மூன்று கவிகள் - அக்கினிச்சுவாலையின் வருணனை.

கருதியாயிரகோடிவெம்புயங்கமிக் கானிடையுளவென்று
பரிதிசூழ்வர வெருவுபல்குவடுடைப் பருப்பதங்களின்சாரல்
சுருதிவேள்விநூலுடையவன்சிறகறத் துணித்தவாய்தொறும்பொங்[கிக்
குருதிபாய்வனபோன்றனகொளுந்திய கொழுந்தழற்கொழுந்தம்மா.

     (இ-ள்.) பரிதி - சூரியன், ஆயிரம் கோடி வெம் புயங்கம் இ கானிடை உள
என்று கருதி - ஆயிரகோடி கொடியபாம்புகள் இந்தக்காட்டிலுள்ளன என்று எண்ணி,
சூழ்வர வெருவு - பிரதக்ஷிணமாகச்செல்வதற்கு அஞ்சும்படியான, பல் குவடு உடை
பருப்பதங்களின் சாரல் - பல சிகரங்களையுடைய மலைகளின் சாரல்களில்,
கொளுந்திய - பற்றிய, கொழுந் தழல் கொழுந்து - கொழுமையான
அக்கினிச்சுவாலைகள்,- கருதி வேள்வி நுறு உடையவன் - வேத விதிப்படி
செய்யப்பட்ட நூறு (அசுவமேத) யாகங்களை யுடையவனான இந்திரன், சிறகு அற
துணித்த - (அம்மலைகளின்) இறகுகள் அறும்படி வெட்டிய, வாய்தொறுஉம் -
இடங்களிலெல்லாம், பொங்கி பாய்வன - மேன்மேற்கிளர்ந்து பாய்வனவான,
குருதி - இரத்தப்பெருக்குக்களை, போன்றன - ஒத்தன; (எ-று.)

     காண்டவவனத்துப் பருப்பதச்சாரல்களிற் பற்றியெரியும் அக்கினிச் சுவாலைகள்
இந்திரன் மலைச்சிறகுகளை வெட்டிவீழ்த்தின வாய்களினின்று பெருகும்
இரத்தம்போலுமெனக் குறித்தனர், தற்குறிப்பேற்றவணி. இராகு கேதுவென்னும்
பாம்புகள் தனக்குப் பகையாதல்பற்றிக் கொடியபாம்புகட்கெல்லாஞ்சூரியன்
அஞ்சினன்.நூறு அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால்,
'வேள்விநூறுடையவன் 'என்றார். அம்மா - ஈற்றசை; வியப்புமாம்.         (754)

34.கோத்திரங்களின்கவானிடைக்கதுமெனக் கொளுந்தியுற்
                                 றெரிகின்ற,
தீத்திறங்கள்செங்காந்தளுமசோகமுஞ் செங்குறிஞ்சியுஞ்
                                     சேரப்,
பூத்தவொத்தனவன்றியுங்குலிகநீர் பொழியருவியும்போன்ற,
பார்த்தகண்கள் விட்டேகலாவகைநிறம்பரந்ததாதுவும்
                                    போன்ற.

     (இ-ள்.) கோத்திரங்களின் கவானிடை - மலைகளின் இடைப்பகுதிகளிலே,
கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற - விரைவாகப்பற்றி மிகுந்து எரிகிற, தீ
திறங்கள் -அக்கினிச்சுவாலைகளின் பகுதிகள்,- செம்காந்தள்உம் அசோகம்உம் செங்
குறிஞ்சிஉம் சேரபூத்த ஒத்தன - செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும்
ஒருங்குபூத்தனவற்றை யொத்தன;அன்றிஉம் - இதுவல்லாமலும், குலிகம் நீர்பொழி
அருவிஉம் போன்ற -இங்குலிகம்கலந்த நீரைச் சொரிகிற மலையருவியையும்
ஒத்தன; பார்த்த கண்கள் விட்டுஏகலாவகை - (தன்னைப்) பார்த்தகண்கள் (தன்னை
விட்டு) (வேறொன்றினிடத்தே)சொல்லாதபடி நிறம் பரந்த - செந்நிறம் பரந்த,
தாதுஉம் - காவிக்கல்லையும், போன்ற- ஒத்தன; (எ-று.)