பக்கம் எண் :

காண்டவதகனச் சருக்கம்457

அவித்திடுக என சொல்லி- '(நீங்கள்) மிக்க நீரைச் சொரிந்து (அக்கினியைத்)
தணிப்பீர்களாக ' என்று கட்டளைகூறி,- நிரந்தரம் அருகு விடாது தன் நிழல்
போல்நின்ற வானவரைஉம் - எப்பொழுதும் தன்பக்கத்தை விடாது தனது
நிழலைப்போல் அடுத்துநிற்பவரானதேவர்களையும், ஏவி - (போர்க்குப்புறப்படும்படி)
கட்டளையிட்டு, தானும்-, ஈர் இரு மருப்பு பொருப்பின் வெம் பிடர் மிசை
புகுந்தான் -நான்குதந்தங்களையுடைய மலைபோன்றவடிவமுள்ள (ஐராவத)
யானையினதுவிரும்பத்தக்க [அழகிய] பிடரியின் மேல் ஏறினான்;

     அக்கினி மிகுதியாகப் புகையையெழுப்ப அப்புகைமிகுதியால் மேகங்கள்
பதின்மடங்கு உடல் பூரித்தன என்க. மேகவாகனனாதலால்,
மேகங்களையேவலானான்.                                         (769)

49.- இந்திரன் கட்டளைப்படி யெழுந்து பரந்த மேகங்களில் மிகுதியாகத்
தோன்றிய மின்னல்களின் வருணனை.

ஏவகவிருத்தச்செவ்வியின்றனுவுக்கேற்றநாண்முறுக்கிவிட்டென்னச்
சேவகவிமையோரெண்டிசாமுகத்துஞ்செஞ்சுடர்வாள்விதிர்த்தென்[னப்
பாவகன்பகுவாய்நாவிதிர்த்தென்னப் பரந்தவப்பாவகற்குணவாந்
தாவகமுழுதும்வளைந்துகொண்டெழுந்த சலதரசஞ்சலாசாலம்.

     (இ-ள்.) அ பாவகற்குஉணவுஆம் - அந்த அக்கினிதேவனுக்கு உணவாகிய,
தாவகம் முழுதுஉம் - காடு முழுவதையும், வளைந்து கொண்டு - சூழ்ந்து கொண்டு,
எழுந்த - மேற்பரவிய, சலதரம் - மேகங்களில் (தோன்றிய), சஞ்சலா -
மின்னல்களின்,சாலம் - கூட்டங்களானவை,- ஏ அகம் - அம்பைத்தன்னிடத்தே
தொடுத்தற்கு உரிய,விருத்தம் - வட்டமாகிய [நன்குவளைந்த], செவ்வியின்
தனுவுக்கு - அழகிய (இந்திர)வில்லுக்கு, ஏற்ற - இயைவதான, நாண் - நாணியை,
முறுக்கி விட்டு என்ன -திரித்துவிட்டாற் போலவும்,- சேவகம் இமையோர் -
வீரத்தன்மையையுடையதேவர்கள், எண்திசாமுகத்துஉம் - எட்டுத்திக்குக்களிலும்,
செம் சுடர் வாள் விதிர்த்துஎன்ன - செந்நிறமான ஒளியையுடைய வாளாயுதங்களைச்
சுழற்றினாற் போலவும்,-பாவகன் - அக்கினி, பகு வாய் நா - (தனது) திறந்த
வாயிலுள்ள நாக்குக்களை,விதிர்த்து என்ன - வெளிச் செலுத்தியசைத்தாற்
போலவும், பரந்த - பரவின; (எ-று.)

     செந்நிறமாய் அசைந்துவிளங்குதல் பற்றி உவமை. அக்கினியினது
சுவாலைகளேழும் அவனுக்கு நா எனப்படும். 'எழுநா' என்று அக்கினிக்கு
ஒருபெயர். சஞ்சலா - அசையுமியல்புள்ளது என மின்னற்குக் காரணக்குறி.   (770)

50.- அம்மேகங்களின் இடிமுழக்கத்தின் வருணனை.

ஏறியகளிறுபிளிறுநீடொலியு மெடுத்தவிற்றெறித்தநாணொலியும்
சூறியவிமையோர்பெருநகையொலியுந் துந்துபிக்குழாமதிரொலியும்
கூறியவனலன்சடுலவல்லொலியுங் குறைபடத்திசைதொறுமிகுந்த
ஊறியபுவனபவனவேகத்தோ டுருமுடைமுகிலின்வாயொலியே.

     (இ-ள்.) ஊறிய புவனம் பவனம்  வேகத்தோடு - மிகுதியாக அமைந்த
நீரோடும்காற்றின்விசையோடும், உரும் உடை -இடி