துணித்து உன் முகசரோருகத்தினாற் சினந்தணிந்து அரங்க பூசை செய்வன்" என்று சபதங்கூறியுள்ளானாதலால், அவன் அருச்சுனனுக்குப் பகை யென்பது பிரசித்தம். வீரம்மா முனை என்பதற்கு - பராக்கிரமத்துக்கு இடமான பெரிய போருக்கு உரிய எனினும்அமையும். திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடபரென்னும் அசுரர்களுடைய மேதசினால் [உடற்கொழுப்பினால்] நனைந்தமை பற்றி, பூமிக்கு, மேதிநீ என்று பெயர்: அதன் திரிபு ஆகிய மேதினி என்பது - இங்கு, பொதுப்பட, உலகமென்றமாத்திரமாய் நின்றது. 62.- இந்திரன் அங்குத் தட்சகனைக் காணாமல் அருச்சுனன்மீது கோபித்தல். தோழன்மாமகனைக்கண்டபின்றனது தோழனையொருவயிற் காணான், வேழமாமுகத்திற்கைத்தலம்புடைத்தான் விழிகளாயிரங்களுஞ் சிவந்தான், யாழமாதிரத்தினெதிரொலியெழுமா றெயிற்றிளநிலவெழ நகைத்தான், தாழமாநிலத்தினின்றமர்விளைக்குந் தன்பெருந்தனயனை முனிந்தான். |
(இ-ள்.) (இந்திரன்), தோழன் மா மகனை கண்டபின் - (தனது நண்பனான) தக்ஷகனுடைய சிறந்த குமாரனாகிய அசுவசேனனைக் கண்டபின்பு, தனது தோழனை ஒரு வயின் காணான் - தனது நண்பனான அத்தக்ஷகனைஓரிடத்துங் காணாதவனாய், (அவ்வருத்தத்தால்,) வேழம் மா முகத்தில் கைத்தலம் புடைத்தான் - (தான் ஏறிய) ஐராவதயானையின் பெரியமத்தகத்தின்மேற் கையைப் புடைத்து, விழிகள் ஆயிரங்கள்உம் சிவந்தான் - (கோபத்தால்) ஆயிரங்கண்களுஞ் சிவக்கப் பெற்றவனாய்,மாதிரத்தின் எதிர் ஒலி எழும் ஆறு - திக்குக்களிற் பிரதித்தொனி யுண்டாகும்படி,எயிறு இள நில எழ நகைத்தான் - (தனது) பற்களின் இளநிலாப்போன்ற வொள்ளொளிவெளிவீசத் சிரித்து, தாழ மா நிலத்தில் நின்று அமர்விளைக்கும் தன் பெருந்தனயனை- கீழே பெரிய பூமியில் நின்று - (அங்கு நின்றபடியே) பெரும்போர் செய்கிற தனதுசிறந்தபுத்திரனான அருச்சுனனை, முனிந்தான் - கோபித்தான்; (எ-று.) -யாழ -முன்னிலையசை யாகற்பாலது அசைநிலையாய் நின்றது. தான்பெற்ற சிறந்த புதல்வன்மீது கோபிக்கும்படி தக்ஷகனிடம் இந்திரனுக்கு இருந்த நண்பின்சிறப்பு, இதில் விளங்கும். தாழ - கீழாக. தான்கீழ்நின்றபடியே மேலுள்ளாரை வெல்லுமாறு போர் செய்தலின் அருமைதோன்ற, 'தாழ மாநிலத்தில் நின்று அமர் விளைக்கும்' என்றார். கையைக் கீழேபுடைத்தல் - கோபாவேசத்தின் காரியம். கண்சிவத்தல் - கோபக்குறி. (783) 63.- இந்திரனும் மற்றைத் திக்குப்பாலகர்களும் போர்க்கு எழுதல். மேகசாலங்களிளைத்ததுந்திளைத்து மேலிடுவிண்ணவரணிந்த யூகசாலங்களுடைந்ததுங்கண்டா னுருந்தெழுந்துள்ளமுங் கொதித்[தான் ஏகசாபமுந்தன்னேகசாயகமு மிமைப்பளவையின்விரைந்தெடுத்தான் பாகசாதனனுமேனையதிசையின் பாலரும்பகடுமேல்கொண்டார். |
(இ-ள்.) பாகசாதனன்உம் - இந்திரனும்,- மேக சாலங்கள் இளைத்தது உம் - (தான் ஏவிய) மேகக்கூட்டங்கள் இளைப்படைந்த |