பக்கம் எண் :

472பாரதம்ஆதி பருவம்

பொழிய - தேவர்களைத் துரத்தியவனான அருச்சுனன் கையிற் கொண்ட (காண்டீவ)
வில்லைக்கொண்டு (அம்பு) மழை சொரிதலால், கற்கள்உம் துகள் ஆய் -
(தம்மிடத்துஉள்ள) கற்களும், பொடியாகப் பெற்று, மேனிஉம் வெளிறி -
உடம்பும்வெளுத்து, மீண்டது - திரும்பிச்சென்றது; (எ - று.) - ஏ - ஈற்றசை.

     உவமையணி. சொல்மழை பொழிதல் - நற்பொருள்விளைக்கும் இனிய
சொற்களைத் தட்டுத்தடையின்றி உபயோகித்தல். நாவலர் - கவிபாடுதலும்
உரைகூறுதலும் பிரசங்கஞ் செய்தலுமாகிய நாவின்வன்மையையுடையவர்.
பொன்மழைபொழிதல் - எதிருதவியை யெதிர்பாராமற் புலவர்கட்குப்
பொன்னைமிகுதியாகத்தருதல். கடுமையாகப் போர்செய்து வந்த
வரபதியாட்கொண்டானது பகைவர்கள் தம்மிடத்து உள்ள ஆயுதம்முதலிய
பொருள்கள்உதவாது ஒழிய அச்சத்தால் உடல்வெளுத்து மீண்டுசெல்லுதல்போல,
கன்மழைபொழியுங் காளமேகங்கள் கற்கள்துகளாய்த் தம்மிடத்து உள்ள நீர்
ஒழிந்ததனால் வெண்ணிறம்பெற்று விலகின என்க; உடல் வெளுத்தல் - அச்சக்குறி.
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்றவற்றைப் பொழிகிற சம்வர்த்தம் முதலிய
ஏழனுள் காளமுகி யென்பதே 'கன்மழை பொழியுங்காளமாமுகில்' என்று இங்குக்
குறிக்கப்பட்டதாதலின், 'மீண்டதுவே' என்று ஒருமைமுடிபு கொடுத்தார்.
பாகையுந்தனதுசூரமுந் துதிக்குநாவலர்க்கு என்றும் பாடம்.             (790)

70.- அருச்சுனன் இந்திரனை யெதிர்த்து உக்கிரமாகப்
போர்தொடங்குகையில் ஆகாயவாணி யெழுதல்.

மாயவன்றனக்குநேயமைத்துனனா மைந்தனத்தந்தையைமதியான்
தூயவெங்கணையாலவனிடித்துவசந்துணித்தமர்தொடங்குமவ்வளவில்
காயமெங்கணுநின்றொலியெழப்பரந்து காயமில்கடவுளக்கடவுள்
நாயகன்றனக்குப்பரிவுடனவைதீர் நல்லுரைநவின்றதையன்றே.

     (இ-ள்.) மாயவன் தனக்கு - கண்ணபிரானுக்கு, நேயம் மைத்துனன் ஆம் -
அன்புள்ள மைத்துனனாகிய, மைந்தன் - (இந்திர) குமாரனான அருச்சுனன், அ
தந்தையைமதியான்-(தனது) பிதாவாகிய அவ்விந்திரனை லக்ஷ்யஞ்செய்யாதவனாய்,
தூய வெம்கணையால் - சுத்தமான கொடிய அம்பினால், அவன் இடி துவசம்
துணிந்து- அவ்விந்திரனுடைய இடியின் வடிவமெழுதிய கொடியைத் துண்டித்து,
அமர்தொடங்கும் அ அளவில் - (மேலும்) போர்தொடங்குகிற அச்சமயத்திலே,-
காயம்இல்கடவுள் - அசரீரியானது, காயம் எங்கண்உம் நின்று ஒலி எழு பரந்து -
ஆகாயமெங்கும் நின்று ஒலியெழும்படி பரந்து, அ கடவுள் நாயகன் தனக்கு -
தேவராசனான அந்த இந்திரனுக்கு, பரிவுடன்-அன்போடு, நவை தீர் நல் உரை
நவின்றது - குற்றம்நீங்கிய நல்ல வார்த்தைகளைச் சொல்லிற்று; (எ-று.) - அதனை,
மேற்கவியிற் காண்க.

     மைத்துனன் என்ற சொல், இங்கு, அத்தையின்மகனை யுணர்த்தும், அவன்
துவசம் இடி துணித்து என்று இயைத்து - அவ்விந்திரனுக்குக்கொடியாகிற இடியைத்
துண்டித்து என்றும்