பக்கம் எண் :

476பாரதம்ஆதி பருவம்

தைக்கண்டு, அக்கினியும் மயனைத் தகித்திலனென முதனூல் கூறும். மயன்,
அசுரசிற்பியெனப்படுவன்.                                      (795)

75.- அக்கினியினின்று தப்பியவர்கள்.

அழைத்தடல்விசயன்றனைத்துணைசெய்கென் றாறுபத்தி
                                யோசனையாகித்,
தழைத்தவவ்வனத்தைக்கனத்தைவென்கண்டுதழலவனுகர்ந்
                                திடுங்காலைப்,
பிழைத்தவர்மயனுந்தக்ககன்மகவும்பெருந்தவனனொரு
                             வன்முன்கருப்பம்,
இழைத்தநுண்சிறகர்க்கருநிறக்குரீஇயினினங்களுமன்றி
                                   வேறிலரால்.

     (இ-ள்.) தழலவன்-அக்கினிதேவன்,-அடல் விசயன் தனை-வலிமையுள்ள
அருச்சுனனை, துணை செய்க என்று அழைத்து - (எனக்கு) உதவி
செய்வாயென்றுகூப்பிட்டு, ஆறுபத்து யோசனை ஆகி தழைத்த அ வனத்தை-
அறுபதுயோஜனை விஸ்தீர்ணமுடையதாகித் தழைத்துள்ள அந்தக்காண்டவவனத்தை,
கனத்தை வென்கண்டு நுகர்த்திடு காலை - மேகத்தைப் புறங்கண்டு [வென்று]உண்ட
[எரித்திட்ட] போதில்,-பிழைத்தவர் - (அந்த அக்கினியினின்று) தப்பிப்பிழைத்தவர்,-
மயனும்-,தக்ககன்மகவுஉம்-தட்சகனுடைய மகனாகிய அசுவசேனனும்,
பெருந்தவன்ஒருவன் முன்கருப்பம் இழைத்த நுண் சிறகர் கருநிறம் குரீஇயின்
இனங்கள்உம்-மிக்கதவமுடைய ஒப்பற்றவனான மந்தபாலமுனிவனால் முன்கருவாகித்
தோன்றிய நுண்ணிய சிறகுகளையுடைய கருநிறக்குருவியின் கூட்டங்களும், அன்றி -
இவையல்லாமல், வேறுஇலர்-;  

   பெருந்தவனொருவன் முன்கருப்பம்இழைத்த குரீஇயினினங்கள்-மந்தபாலனருளாற்
றோன்றிய நான்கு இளையசார்ங்கப்பறவைக் குஞ்சுகள் என்று முதனூலால்
தெளியப்படும்: அந்தச்சார்ங்கப் பறவைக்குஞ்சுகள் அக்கினியைப்
பிரார்த்தித்ததனாலும்அந்த மந்த பாலமுனிவனது விருப்பத்தைத் தழுவியதனாலும்
அக்கினிபறவைக்குஞ்சுகளை எரியாதுவிட்டன னென்பர். யோசனை - காதம்.
கீழ் 43-ஆம் பாடலில் "தானவரியாருய்ந்தார்" என்று தானவரெவரும்
உய்யாமையைக் கூறிய கவி,இங்குஉய்ந்தவரை இன்னாரெனக் கூறினரென்க.
பிழைத்தவர் மயனும் மகவம்குரீயிஇனினங்களும் - சிறப்பால் உயர்திணை
முடிபைக்கொண்டது.                                            (796)

76.- அக்கினி திருப்தியடைந்து கிருஷ்ணார்ச்சுனர்களை
வாழ்த்திச் செல்லல்.

என்பிறபுகல்வதீரெழுபுவனமெம்பிரானருந்தியதென்னத்,
தன்பசிதணியக்காண்டவவனத்திற்சராசரமுள்ளவையனைத்தும்,
வன்புடனருந்தி யுதரமுங்குளிர்ந்தான் வன்னிதன்வடிவமுங்
                                     குளிர்ந்தான்,
அன்புடையிருவர்க்காசியும்புகன்றானசைந்துபோய்த்
                              துறக்கமுமடைந்தான்.

     (இ-ள்.)  பிற புதல்வது என்-மற்றும் (நாம்) சொல்வது என்ன? ஈர் எழு
புவனம்எம்பிரான் அருந்தியது என்ன - பதினான்குஉலகங்களையும் திருமால்
(பிரளயகாலத்தில்) விழுங்குதல் போல, வன்னி - அக்கினிதேவன்,
காண்டவவனத்தில்சர