பதியான அந்தச்சந்தனுமன்னவனும், தாசர் தம்குலத்துக்கு அதிபதி அளித்த தையலை- வலைஞர்குலத்துக்கு அதிபதியான வலைஞன் தந்த அந்தப்பெண்ணை, கண்டு-பார்த்து, உளம் உருகி களியா - மனம் நைந்துமகிழ்ந்து, (அவளை நோக்கி), 'இலங்குஇழை - விளங்குகின்ற ஆபரணங்களையணிந்துள்ள மாதராய்! நீ-, யார்கொல் -யாவள்?' என்றான் - என்று வினாவினான்; (எ-று.) தாசர்குலபதியின் மகளின்மேனி யோசனைதூரங் கமழுந் தன்மைய தாதலால்,அவள்மேனியின் நறுமணம் கந்தவகனான காற்றின்மூலம் யோசனைதூரம்செலுத்தப்பெற, அந்த நறுமணக் காற்றுக்கு எதிராக ஓடி மன்னவன்அந்தயோசனகந்தியைக் கண்டன னென்க. தாசர் என்ற வடசொல், தாசர் என்றுதிரிந்தது. தாசர் தங்குலம் - வலைஞர்குலம்: இவன்பெயர் 'உச்சைச்ச்ரவஸ் ' என்று பாலபாரதத்தும் வியாசபாரதத்தும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாசனால் வளர்க்கப்பட்டகன்னிகை முதலில்மச்சகந்தியா யிருந்து பிறகு பாராசரபகவானருளால் யோசனைதூரம்நறுமணம் வீசும் உடம்பைப் பெற்றாளாதலால், யோஐநகந்தி என்று பெயர்பெறுவாளானாள்: இவள் காளியென்றும், ஸத்யவதீயென்றும், வாஸவீயென்றும்வழங்கப்பட்டுள்ளாள். ஒல்லெனப் பரப்ப என்றும் பாடம். (99) 92.- யோசனகந்தியை வினாவியறிந்த சந்தனு அந்தமடந்தையின் தமப்பனைச்சேர, அவன் மன்னவனடி பணிதல். நிருபனதுரைகேட்டஞ்சினளொதுங்கி நின்றுகைநினைவுறக்குவியா, இருதுறைநெறியில்வருநரைநாவா யேற்றுவலெந்தையேவலினென்று, உரைசெயுமளவில்வேட்கையாலுள்ளமுருகிமெய்ம்மெலிந்தொளிகருகி, அரிவையையளித்தோன்பக்கமதடைந்தானவனும்வந்தடிமலர்பணிந்தான். |
(இ-ள்.) நிருபனது - சந்தனுவரசனுடைய, உரை - வார்த்தையை, கேட்டு -, அஞ்சினள் - அச்சங்கொண்டவளாய், ஒதுங்கி நின்று-, நினைவுஉற - (பெரியோரைக்கண்டால் வணங்கவேண்டு மென்ற) எண்ணந்தோன்ற, கைகுவியா- கைகூப்பிவணங்கி,- 'இரு துறை நெறியில் வருநரை - பெரிய நீர்த்துறைநெறியைக் கடக்குங் கருதத்தோடு இங்கு வருபவரை, எந்தை ஏவலின் - என் தந்தையாரின் கட்டளையினால், நாவாய் ஏற்றுவல் - மரக்கலத்திலேற்றுவேன்,' என்று-, உரை செயும்அளவில் - சொல்லும்போது,- (மன்னவன்), வேட்கையால் - காமவிச்சையால், உள்ளம்உருகி-, மெய் மெலிந்து - உடல் தளர்ந்து, ஒளி கருகி -, அரிவையை அளித்தோன்-யோசன கந்தி யென்ற அந்தமடந்தையைப்பெற்ற வலைஞனுடைய, பக்கம் அது -இருக்குமிடத்தை, அடைந்தான்-: அவன்உம் - அந்தவலைஞனும், வந்து-, அடிமலர் பணிந்தான்- (மன்னவனுடைய) திருவடித் தாமரையை வணங்கினான்; (எ-று.) வேட்கையாலென்பது உள்ளமுருகுதற்கேயன்றி, மெய்ம்மெலிதலுக்கும் ஒளிகருகுதற்கும் ஏது ஆகும். பக்கமது, அது - பகுதிப் பொருள்விகுதி. (100) |