பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்63

எண்ணி-, செல்லும்- (நீயே) போகின்ற, அன்று அல்லது - அன்றைக்கு அல்லாமல்,
உன் உயிர்மேல்-, காலன் - யமன், முந்துற - (நீ சுவர்க்கத்துக்குச்
செல்லவேணுமென்றுகருதுவதற்கு) முன்பாக, வரப்பெறான்-, 'என்று-, முடிவுஇலா-
(விருப்பமின்றி) இறத்தலில்லாமையாகிய, ஒரு வரம் - ஒப்பற்றவரத்தையும்,
மொழிந்தான்- (சந்தனு வீடுமன்பொருட்டு) வாய்விட்டுச் சொன்னான்: (எ-று.)

   இங்ஙனம் வேண்டும்போது இறத்தல் 'ஸ்வச்சந்தமரணம்' எனப்படும்.  (110)

103.- இதுமுதல் நான்குகவிகள் - வலைஞர் தலைவன் யோசன கந்தியை
முன்நிறுத்திப் பணிவுடன் அவள்வரலாற்றினைத் தெரிவித்தலைக்கூறும்.

அம்புவியரசன்மாமனுமரச னடிபணிந்தவயவத்தழகால்,
உம்பரும்வியக்குங்கிளியைமுன்னிறுத்தி யொடுங்கினன்
                              வாய்புதைத்துரைத்தான்,
எம்பெருமானீ கேட்டருளுனக்கே யிசைந்தமெய்த்தவம்புரியிவளை,
வம்பவிழ்மலர்மாதென்பதேயன்றி வலைஞர்மாமகளெனக்
                                             கருதேல்.

ஐந்துகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) அம் புவி அரசன் மாமன்உம் - அழகியபூமிக்குத்தலைவனான
சந்தனுவுக்கு மாமனாராகியவலைஞர் தலைவனும், அரசன் அடிபணிந்து -
மன்னவனுடைய பாதங்களில் வணங்கி,- அவயவத்து அழகால் -
உடம்பினழகினால்,உம்பர்உம் - தேவர்களும், வியக்கும் - அதிசயிக்கின்ற,
கிளியை - கிளிபோன்றபெண்ணை, முன் - (அவ்வரசனுக்கு) முன்னே, நிறுத்தி -
நிற்கவைத்து,- ஒடுங்கினன் -ஒடுக்கத்தைக் காட்டியவண்ணம், வாய்புதைத்து -
வாயை(க் கையினால்) மூடிக்கொண்டு, உரைத்தான் - (பின்வருமாறு)
சொல்பவனானான்: எம்பெருமான் - எமதுபெருமானே! நீ கேட்டருள் - நீ
கேட்டருள்வாய்: உனக்கு  ஏ இசைந்தமெய் தவம் புரிஇவளை - உனக்கே
(மனைவியாகப்) பொருந்திய உண்மைத்தவம்புரிந்துள்ளஇந்தப்பெண்ணை, வம்பு
அவிழ் மலர் மாது என்பது ஏ அன்றி - நறுமணம்வீசுகின்றமலரில் தங்கும்
திருமகள் போல்வா ளென்பதல்லாமல், வலைஞர் மா மகள் என -வலைஞர்
குலத்துத் தோன்றிய சிறந்த பெண்ணென்று, கருதேல் - எண்ணாதே: (எ-று.)
- இச்செய்யுளில 'எம்பெருமான்' (103) என்பது தொடங்கி "காவலர்
குலத்திடைக்கலந்தாள்" (106) என்பது வரையில், வலைஞர் தலைவனுரைத்த
உரையாகும்.

     அவயவம் அங்கம் என்பன பரியாய மாதலாலும், உடம்பை அங்கமென்று
வழங்கியிருத்தலாலும், இங்கு உடம்பை அவயவமென்றார்.                (111)

104.வாசவனளித்தவிமானமீதொருவன் வசுவெனுஞ்சேதி
                                     மாமரபோன்,
கேசரனெனப்போம்விசும்பிடைமனையாள் கிரிகையை
                               நினைந்துடல்கெழுமி,
நேசமொடிதயமுருகுமக்கணத்தி னினைவற
                                விழுந்தவீரியமெய்த்,
தேசவனளித்தநதியிடைத்தரளத் திரளெனச்சிந்தியதொருபால்.