இராசங்கத்துக்கு உரியவனானதால், அவனுக்கு 'மெய்த்தசீர்த்தி' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. (120) 113.- சந்தனு விண்ணுலகடைய, வீடுமன் சித்திராங்க தனைச் சிங்காசனத்தேற்றுதல். மதிநெடுங்குல மன்னனரையினால் விதியனந்தரம் விண்ணுலகேற்றினான் நதியின்மைந்தனு நம்புவிக்கெம்பியே அதிபனென்றரி யாசனத்தேற்றினான். |
(இ-ள்.) அனந்தரம் - பின்பு, மதி நெடுங் குலம் மன்னன்- சந்திரனுடைய பெருமைபெற்ற குலத்துத் தோன்றிய அரசனை, விதி - ஊழ்வினைக்குரியகடவுள், நரையினால் - கிழத்தனத்தினால், விண் உலகு ஏற்றினான் - வானுலகமேறச் செய்தான்:நதியின் மைந்தன்உம் - கங்காநதிக்குப்புதல்வனாகிய வீடுமனும், 'நம் புவிக்கு -நம்முடைய பூமிக்கு, எம்பிஏ - என்தம்பியே, அதிபன் - தலைவனாவன், 'என்று -என்றுசொல்லி, அரி ஆசனத்து ஏற்றினான் - சிங்காதனத்திலேறச் செய்தான்; (எ -று.) வயசுமுதிர்ந்ததனால் சந்தனுமன்னன் வானுலகடைய, சித்திராங்கதனை வீடுமன்அரசனாக்கினனென்பதாம். நரைகாரணமாகவிதி சந்தனுவை வானுலகேற்ற, வீடுமனும்தம்பியை அரியாசனத்தேற்றினான் என்று சமத்காரமாகக்கூறினார். இங்கு 'மன்னனைநண்பினால்' என்றபாடம், பொருள் சிறவாமை காண்க; 'மன்னனரையினால்' என்பதைப்படிக்கத் தெரியாமையால் நேர்ந்த தவறாயிருக்கலாம்; "ததோவிதிர்விஸ்ரஸயோபகூடம் - நரேந்த்ரம் ஆரோஹயதிஸ்ம நாகம் - பீஷ்மோபிசஸ்த்ராஸ்த்ரவிதம் குமாரம் - சித்ராங்க தம் பௌரவராஜ்யபீடம்" என்றபாலபாரதமும் காண்க: இந்த ச்லோகத்தில்; விஸ்ரஸயா - நரையினாலென்றுபொருளாம். (121) 114.- சித்திராங்கதன் அப்பெயர்கொண்ட கந்தருவனால் இறத்தல். எங்கணாம மிவன்கவர்ந்தானெனக் கங்குல்வந்தொரு கந்தருவாதிபன் தொங்கன்மாமுடி சூடியவேந்தனை அங்கையான்மலைந் தாருயிர்கொள்ளவே. |
இரண்டுகவிகள் - குளகம். (இ-ள்.) 'எங்கள் நாமம் - எம்முடையபேராகிய சித்திராங்கத னென்பதை, இவன்கவர்ந்தான் - இவன் திருடிக்கொண்டான்,' என - என்று வெகுண்டு, ஒரு கந்தருவஅதிபன் - (சித்திராங்கதனென்று பேர்பூண்ட) ஒரு கந்தருவராசன், கங்குல் வந்து -இராப்போதில் வந்து, தொங்கல் மா முடி சூடிய வேந்தனை - அரசாங்கத்துக்குரியமாலையுடனே கிரீடமும் தரித்துள்ள அந்தச்சித்திராங்கதமன்னனை, அம் கையால்மலைந்து - (தன்னுடைய) அழகியகையினாற் பொருது, ஆர் உயிர் கொள்ள -அருமையான உயிரைக்கவர்ந்துகொண்டிட, (எ-று.)- "முடிசூட்டினான்" (115) என்றுஇயையும். |